விவசாயிகள் தற்போதைய பருவத்துக்கு ஏற்ற தோட்டப் பயிரான கத்தரிக்காயை சாகுபடி செய்து அதிக லாபம் பெறலாம் என வேளாண் துறையினர் யோசனை தெரிவித்தனர்.இதற்கான வழிமுறைகளை அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதன் விவரம்:பயிரிடும் காலம்: நாள் தோறும் மக்களின் பயன்பாட்டில் அதிகம் உள்ள காய் கத்தரி. இதை டிசம்பர், ஜனவரி மாதத்தில் தொடங்கி மே வரை பயரிடலாம்.மண்ணின் தன்மை: நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்த வண்டல் மண் அல்லது களிமண் கலந்த வண்டல் மண் கத்தரி பயிரிட ஏற்றதாகும்.விதை நேர்த்தி: ஒரு ஹெக்டேருக்கு 200 கிராம் வீதம் விதை நேர்த்தி செய்ய வேண்டும். டிரைகோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 10 கிராம் வீதம் கலக்க வேண்டும். அசோல் பைரில்லம், பாஸ்போபேக்டீரியா ஒவ்வொன்றையும் 100 கிராம் வீதம் கலந்து நிழலில் அரைமணி நேரம் வைக்க வேண்டும்.இடைவெளி, செடி எண்ணிக்கை: பொதுவாக கத்தரி ரகத்தின் தன்மையைப் பொறுத்து இடைவெளி, செடியின் எண்ணிக்கை மாறுபடும். மிதமான வளர்ச்சி உள்ள ரகங்களை 4 அடி அகலமுள்ள மேட்டுப் பாத்தியில் ரெட்டை வரிசை முறையில் 60 ல 60 சென்டி மீட்டர் இடைவெளியில் நட வேண்டும்.அதிக வளர்ச்சியுள்ள ரகங்களை உயர் பாத்தியில் ஒரு வரிசையில் ஒரு செடிக்கும் மற்றொரு செடிக்கும் 45 சென்டி மீட்டர் இடைவெளியில் நட வேண்டும்.நடவு முறை : நாற்றுக்களை நடுவதற்கு முன்பு 8 முதல் 12 மணி நேரம் உயர் பாத்திகளை சொட்டு நீர்ப் பாசனத்தைப் பயன்படுத்தி நன்கு நனைக்க வேண்டும். நாற்றுக்களை மேற் குறிப்பிட்ட இடைவெளியில் நட வேண்டும். நடவு செய்த ஒரு வாரத்துக்குப் பின்பு இடைவெளி இருப்பின் அங்கு புதிய நாற்றுக்களை நடலாம்.நீர்ப் பாசனம், நீர்வழி உரமிடல்: தினமும் சொட்டு நீர்ப் பசான முறையில் ஒரு மணி நேரம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தேவையான அளவு நீரில் கரையும் உரத்தை அட்டவணையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் சொட்டு நீர்ப் பாசனத்துடன் இணைக்கப்பட்டுள்ள உரத் தொட்டியின் மூலம் இட வேண்டும்.பின்னால் செய்ய வேண்டிய நேர்த்தி: நடவு செய்த 30-வது, 60-வது நாளில் களை எடுத்து மண் அணைக்க வேண்டும். டிரையகாண்டனால் 125 மில்லி 30-வது நாளில் இருந்து 15 நாள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவும். பூப் பிடித்தலை அதிகரிக்க என்ஏஏ. 0.25 பிளோனோபிக்ஸ் என்ற அளவில் பூப் பூக்கும் தருணத்தில் தெளிக்க வேண்டும்.அறுவடை, மகசூல்: மேற்கண்ட முறைகளை விவசாயிகள் கையாண்டால் 50 முதல் 120 நாள்கள் வரை மகசூல் அறுவடை செய்யலாம். வீரீய ஒட்டு ரகத்தில் ஹெக்டேருக்கு 40 முதல் 50 டன்கள் வரை மகசூல் கிடைக்கும். கத்தரி அறுவடை ரகத்திற்கேற்ப நாள்கள் மாறுபடும் என்று வேளாண் துறையினர் கூறியுள்ளனர்.
Wednesday, 28 January 2015
அக்ரிடோன் 4.5' இயற்கை உரம் அறிமுகம்
பயிர் விளைச்சலை அதிகரிக்க உதவும் "அக்ரிடோன் 4.5' என்ற இயற்கை உரத்தை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தினார்.இதுதொடர்பாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் "பி.எம்.பயோ எனர்ஜி' நிறுவனம் தயாரித்த "அக்ரிடோன் 4.5' இயற்கை உரத்தை அறிமுகப்படுத்தி வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பேசியது:மண் வளத்தை இயற்கை முறையில் மேம்படுத்த தகுந்த உரத் தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்ற வேண்டும்.மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் காற்றிலுள்ள தழைச் சத்தை உள்வாங்கி மண்ணில் நிலை நிறுத்தி பயிர்களுக்கு அளிக்கின்றன.இயற்கையாக மட்கும் பொருள்கள் இல்லாவிட்டால் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறையும்.எனவே, அதன் வளம் குன்றாமல் பாதுகாப்பது விவசாயிகளின் கடமையாகும். இதை ஐ.நா. சபை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "அக்ரிடோன் 4.5' உரம் அனைத்து வகையான காய்கறிகள், பருவநிலைக்கு ஏற்றதாகும்.தோட்டப் பயிர்கள், தானியங்கள், எண்ணெய் வித்துகள், சிறுதானியங்கள், நாற்றங்கால் பண்ணைகள் ஆகியவற்றுக்கு இதைப் பயன்படுத்தலாம் என்றார் அவர்.பூமிக்கடியில் உள்ள பழுப்பு நிலக்கரியில் இருந்து எடுக்கப்படும் கழிவுப் பொருளான "அக்ரிடோன் 4.5' இயற்கையான தண்ணீரில் கரையக் கூடியது. இந்த உரத்துக்கான தொழில்நுட்பத்தை நெய்வேலி பழுப்பு நிறுவனம் உருவாக்கியுள்ளது.தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் பரிசோதித்து விளைச்சலை அதிகரிக்கவும், தரமான பொருள்களை உற்பத்தி செய்யவும் உதவும் என சான்றிதழ் வழங்கியுள்ளது என "பி.எம்.பயோ எனர்ஜி' நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
Sunday, 11 January 2015
வெளிநாடுகளுக்கு வெண்டை: தேனி விவசாயி சாதனை
வெண்டை சாப்பிட்டால் அறிவு வளரும் என்பது பரவலான நம்பிக்கை. அந்த வெண்டையை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து செல்வத்தை வளர்த்திருக்கிறார் தேனி விவசாயி.தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, புள்ளிமான்கோம்பை, அணைக்கரைப்பட்டி, பூதிப்புரம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட ஊர்களில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வெண்டை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் விளையும் வெண்டைக்காய் பெரும்பாலும் உள்ளூர், வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவருகிறது. - விவசாயி பால்ராஜ்20 ஆண்டுகளாக வெண்டைஇந்நிலையில் ஆண்டிப்பட்டி அருகே புள்ளிமான் கோம்பையைச் சேர்ந்த விவசாயி பி. பால்ராஜ் சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளுக்கு வெண்டைக்காய் ஏற்றுமதி செய்கிறார்.ஆண்டு முழுவதும் வெண்டை சாகுபடி செய்யலாம். இவருக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் 20ஆண்டுகளாக வெண்டை சாகுபடி செய்துவருகிறார். ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய ஒன்றே கால் கிலோ விதை தேவை.உழவு, மருந்து, களையெடுத்தல் ஆகியவற்றுக்குப் பின் ஒன்றரை மாதத்தில் வெண்டைக்காய் பறிக்கத் தயாராகி விடும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் பறிக்கத் தொடங்கலாம். வாரத்துக்கு ஒரு முறை மருந்து அடிக்கவேண்டும். சராசரியாக ஒரு வாரத்துக்கு 2 ஆயிரம் கிலோ வரை வெண்டை கிடைக்கும். மூன்று மாதங்களுக்குத் தொடர்ந்து காய் பறிக்கலாம்.தரம் முக்கியம்"செலவு போக வாரத்துக்கு ரூ.10 ஆயிரம்வரை லாபம் கிடைக்கும். வரத்து அதிகமானால் விலை சரியத் தொடங்கிவிடும். மேலும் வாகனச் செலவு, காய்களை மூட்டை போடச் சாக்கு, கமிஷன் மண்டிக்குக் கொடுக்க வேண்டிய கமிஷன் எனக் கூடுதல் செலவு ஏற்பட்டு வந்தது. இதனால் கவலைப்பட்டு கொண்டிருந்தோம்.இந்நிலையில் காய்கறிகளை ஏற்றுமதி செய்யும் ஏஜென்ட்களோ, வெண்டையைப் பறித்துக் கொடுத்தால்போதும் தாங்களே மற்றச் செலவுகளை ஏற்றுக்கொண்டு அன்றைய சந்தை விலையைவிட கிலோவுக்கு ரூ.10 கூடுதலாகக் கொடுத்து எடுத்துக்கொள்வதாகக் கூறினர். கடந்த ஓராண்டாக அவர்களிடம் கொடுத்து வருகிறோம். ஒரே விஷயம் வெண்டை நல்ல தரத்தில் இருக்க வேண்டும்" என்கிறார்.சாகுபடி அதிகரிப்புஇப்படி வாங்கப்படும் வெண்டை 10 கிலோ எடையுடன் தனித்தனிப் பெட்டிகளில் அடைத்து விமானம் மூலம் சிங்கப்பூர், துபாய் என வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது."எனது ஆலோசனையைக் கேட்ட பல விவசாயிகள் வெண்டை சாகுபடி செய்து ஏற்றுமதி மூலம் அதிக லாபம் சம்பாதித்து வருகின்றனர். மாவட்டத்தில் தற்போது வெண்டை சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது. உசிலம்பட்டி, தர்மத்துப்பட்டி பகுதி விவசாயிகளும் வெண்டை சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர்" என்றார்.பால்ராஜை தொடர்புகொள்ள: 86081 44255
பூஜைக்கு ஏற்ற பூவன்...
பழத்தில் 1 லட்சத்து 12 ஆயிரம்... இலையில் 1 லட்சத்து 98 ஆயிரம்!
வாழைப்பழங்களில் பல ரகங்கள் இருந்தாலும் பெரும்பாலும் பூஜைக்கு பூவன் வாழையைத்தான் பயன்படுத்துவார்கள். ஆண்டு முழுவதுமே வாழைப்பழங்களுக்குத் தேவை இருந்தாலும்... பொங்கல் சமயத்தில் பூவன் வாழைக்கு நல்ல கிராக்கி இருக்கும். அதிலும் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியில் விளையும் பூவன் வாழைக்கு தனி மரியாதை. இப்பகுதியின் பிரத்யேக தட்பவெப்ப நிலையால் இந்த வாழை, புள்ளிகள் இல்லாமல், திரட்சியாக இருப்பதுடன் கூடுதல் சுவையும் கொண்டிருப்பதுதான் கிராக்கிக்குக் காரணம்.பொங்கல் சமயத்தில் திருவையாறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான வாழைத்தார்கள் தமிழ்நாடு முழுவதும் பயணிக்கின்றன. இப்படி பயணிக்கும் தார்களில், திருவையாறு தாலூகா, கடுவெளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜ்குமாரின் இயற்கை விவசாய வாழைத்தார்களும் அடக்கம்.
இயற்கையிலேயே விளையும்!
ஒரு மதிய வேளையில் ராஜ்குமாரைச் சந்தித்தபோது, ''காவிரி ஆத்தங்கரையில் இருக்கறதால நிலங்கள்ல வண்டல் நிறைஞ்சிருக்கு. அதனால வாழை நல்லா வேர் பிடிச்சு செழிப்பா வளருது. மத்த பகுதிகள்ல எல்லாம் தார் விட ஆரம்பிச்ச பிறகுதான் மரம் எட்டு அடி உயரத்தைத் தொடும். ஆனா, எங்க பகுதி பூவன் வாழை மரங்கள் தார் விடுறதுக்கு முன்னயே எட்டு அடிக்கு மேல வளந்துடும். இந்தப் பகுதியில குறைவான அளவுலதான் ரசாயன உரம் பயன்படுத்துறாங்க. ஆனா, மண் வளமா இருக்குறதால இயற்கை முறையிலேயே மரம் அருமையா வளரும்'' என்ற ராஜ்குமாரின் வார்த்தைகளுக்கு வலு சேர்த்தன, அவரது தோப்பில் உயர்ந்து நிற்கும் வாழை மரங்கள்.
வழிகாட்டிய பசுமை விகடன்!
''2007-ம் வருஷத்திலிருந்தே 'பசுமை விகடன்’ படிச்சுட்டு இருக்கோம். அதைப்படிக்க ஆரம்பிச்ச பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ரசாயன உரத்தைக் குறைக்க ஆரம்பிச்சோம். இப்போ, நாலு வருஷமா முழு இயற்கை முறையில 5 ஏக்கர்ல பூவன் வாழை சாகுபடி செஞ்சுட்டு இருக்கோம். 8 ஏக்கர்ல நெல் இருக்கு. அதை இன்னும் முழுமையா இயற்கைக்கு மாத்தல. ஆனா, சுத்தமா ரசாயன பூச்சிக்கொல்லியைக் கைவிட்டுட்டோம்' என்ற ராஜ்குமார், இயற்கை முறையில் வாழை சாகுபடி செய்யும் விதங்களைச் சொன்னார். அது பாடமாக இங்கே...
ஏக்கருக்கு 1,000 கன்றுகள்! '
ஏக்கருக்கு 5 டன் மாட்டு எருவை இட்டு, நான்கு சால் உழவு ஓட்டி, வரிசைக்கு வரிசை, கன்றுக்கு கன்று ஆறரை அடி இடை வெளி இருக்குமாறு அரை அடி ஆழத்துக்கு குழி பறித்து வாழை விதைக்கன்றுகளை நடவு செய்யவேண்டும். இந்த இடைவெளியில ஏக்கருக்கு கிட்டத்தட்ட ஆயிரம் கன்றுகளை நடவு செய்யலாம். நடவு செய்த 3ம் மாதம் ஒவ்வொரு கன்றுக்கும் அரை கிலோ வீதம், மேம்படுத்தப்பட்ட மாட்டு எரு கொடுக்க வேண்டும் (350 கிலோ மாட்டு எருவோடு தலா 50 கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலந்து தினமும் லேசான ஈரம் இருக்குமாறு தண்ணீர் தெளித்து 45 நாட்கள் வைத்திருந்தால் மேம்படுத்தப்பட்ட எரு தயார்). இதேபோல 5 மற்றும் 7-ம் மாதங்களில் தலா ஒரு கிலோ மேம்படுத்தப்பட்ட மாட்டு எரு கொடுக்க வேண்டும். இதைத்தவிர வேறு எந்த இடு பொருட்களும் கொடுக்கத் தேவையில்லை.
பூச்சி, நோய் தாக்காது!
இயற்கை முறை என்பதால், வேர்ப்புழு, நூற்ப்புழு, சாறு உறிஞ்சும் பூச்சி மற்றும் வாடல் நோய் உள்ளிட்ட தொந்தரவுகளும் கூட கட்டுப்படும். தவிர்க்க முடியாமல் மட்டைக் காய்ச்சல் நோய் வந்தால்...3 லிட்டர் ஜீவாமிர்தத்தில் தலா 1 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனஸ், பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து, இக்கரைசலை 200 லிட்டர் தண்ணீர்ல கலந்து மட்டைகளில் தெளித்தால், நோய் குணமாகி விடும். நடவு செய்த 7-ம் மாதம் தார் விடத்தொடங்கும். 8- ம் மாதம் 13 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து தார்கள் மீது தெளிக்க வேண்டும். இந்த அளவு 40 தார்களுக்கு சரியாக இருக்கும். தொடர்ந்து 15 நாட்கள் இடைவெளியில இரண்டு முறை தெளிக்க வேண்டும். தார் விட்ட 90 முதல் 100 நாட்கள்ல தார் முதிர்ச்சி அடைந்து அறுவடைக்குத் தயாராகி விடும்.''
பூச்சி, நோய் தாக்காது!
இயற்கை முறை என்பதால், வேர்ப்புழு, நூற்ப்புழு, சாறு உறிஞ்சும் பூச்சி மற்றும் வாடல் நோய் உள்ளிட்ட தொந்தரவுகளும் கூட கட்டுப்படும். தவிர்க்க முடியாமல் மட்டைக் காய்ச்சல் நோய் வந்தால்...3 லிட்டர் ஜீவாமிர்தத்தில் தலா 1 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனஸ், பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து, இக்கரைசலை 200 லிட்டர் தண்ணீர்ல கலந்து மட்டைகளில் தெளித்தால், நோய் குணமாகி விடும். நடவு செய்த 7-ம் மாதம் தார் விடத்தொடங்கும். 8- ம் மாதம் 13 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து தார்கள் மீது தெளிக்க வேண்டும். இந்த அளவு 40 தார்களுக்கு சரியாக இருக்கும். தொடர்ந்து 15 நாட்கள் இடைவெளியில இரண்டு முறை தெளிக்க வேண்டும். தார் விட்ட 90 முதல் 100 நாட்கள்ல தார் முதிர்ச்சி அடைந்து அறுவடைக்குத் தயாராகி விடும்.''
ஒரு தார் 200 ரூபாய்!
சாகுபடிப்பாடம் முடித்த ராஜ்குமார், 'ஒவ்வொரு தாரும் இரண்டரை அடியில இருந்து 4 அடி உயரம் வரை இருக்கும். ஒரு தார் சராசரியா 18 கிலோ எடை இருக்கும். ஒரு தாருக்கு சராசரியா 200 ரூபாய் கிடைக்கும். ஒரு ஏக்கர்ல ஆயிரம் மரங்கள் வளர்ந்தா, சராசரியா 700 தார்கள் நல்ல முறையில வளர்ந்து விற்பனைக்குத் தேறும். வேலி ஓரங்கள்ல இருக்குற மரங்கள்ல தார் சுமாராத்தான் இருக்கும். அந்த வகையில சுமாரான தரத்துல 200 தார்கள் கிடைக்கும். இதுக்கு விலையும் குறைவாத்தான் கிடைக்கும். மொத்தமா விற்பனை செய்றப்போ... ஒரு ஏக்கர்ல பூவன் வாழை மூலமா 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல எல்லா செலவும் போக, 1 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் நிகரலாபம்.
இரண்டாம் போகத்தில் இலை மூலம் வருமானம்!தார் அறுத்து முடிச்ச பிறகு, மட்டை களை மட்டும் நீக்கிட்டு, தாய் மரத்தின் தண்டுப்பகுதியை விட்டுடுவோம். அடுத்த போகத்துல இலை மூலமா வருமானம் எடுப்போம். ஒவ்வொரு தாய் மரத்துல இருந்தும் அஞ்சுல இருந்து ஏழு பக்கக் கன்றுகள் உருவாகும். இதுல 4 கன்றுகள் மட்டும் தரமா வளரும். அந்த கன்றுகள்ல மூணாவது மாசத்துல இருந்து இலைகளை அறுவடை செய்யலாம். ஒரு மரத்துல இருந்து மாசத்துக்கு குறைந்தபட்சம் 2 இலைகள் கிடைக்கும். ஒரு முழு இலை 7 அடி நீளம் இருக்கும். ஒரு இலை 6 ரூபாய் அளவுக்கு விற்பனையாகும். ஒரு ஏக்கர்ல மாசத்துக்கு 4 ஆயிரம் இலைகள் கிடைக்கும். இதை விற்பனை செய்றப்போ 24 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அறுப்புக்கூலி உள்ளிட்ட செலவுகள் 7 ஆயிரத்து 500 ரூபாய் போக, மாசத்துக்கு நிகர லாபமாக, 16 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கும். வருஷத்துக்கு 2 லட்ச ரூபாய் அளவுக்கு லாபம் கிடைச்சுடும்' என்ற ராஜ்குமார் நிறைவாக, ''இயற்கை விவசாயத்துல மரத்தின் வேரும், தண்டும் நல்லா உறுதியா திடகாத்திரமா இருக்குறதுனால, என்னதான் வேகமா காத்த டிச்சாலும் இங்க உள்ள வாழை மரங்கள் முறியறதில்லை. இதனால் ஒரு மரத்துக்கு 55 ரூபாய் வீதம் முட்டுக்கால் கொடுக்குற செலவும் மிச்சம். இயற்கை இப்படி எனக்கு லாபத்தைக் கொடுக்கறதால, இனி நெல் சாகுபடியையும் முழுக்க இயற்கைக்கு மாத்தப்போறேன்'' என்று சொல்லி விடை கொடுத்தார்.
தொடர்புக்கு,ராஜ்குமார், செல்போன்: 87604-72815.
வாழைப்பழங்களில் பல ரகங்கள் இருந்தாலும் பெரும்பாலும் பூஜைக்கு பூவன் வாழையைத்தான் பயன்படுத்துவார்கள். ஆண்டு முழுவதுமே வாழைப்பழங்களுக்குத் தேவை இருந்தாலும்... பொங்கல் சமயத்தில் பூவன் வாழைக்கு நல்ல கிராக்கி இருக்கும். அதிலும் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியில் விளையும் பூவன் வாழைக்கு தனி மரியாதை. இப்பகுதியின் பிரத்யேக தட்பவெப்ப நிலையால் இந்த வாழை, புள்ளிகள் இல்லாமல், திரட்சியாக இருப்பதுடன் கூடுதல் சுவையும் கொண்டிருப்பதுதான் கிராக்கிக்குக் காரணம்.பொங்கல் சமயத்தில் திருவையாறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான வாழைத்தார்கள் தமிழ்நாடு முழுவதும் பயணிக்கின்றன. இப்படி பயணிக்கும் தார்களில், திருவையாறு தாலூகா, கடுவெளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜ்குமாரின் இயற்கை விவசாய வாழைத்தார்களும் அடக்கம்.
இயற்கையிலேயே விளையும்!
ஒரு மதிய வேளையில் ராஜ்குமாரைச் சந்தித்தபோது, ''காவிரி ஆத்தங்கரையில் இருக்கறதால நிலங்கள்ல வண்டல் நிறைஞ்சிருக்கு. அதனால வாழை நல்லா வேர் பிடிச்சு செழிப்பா வளருது. மத்த பகுதிகள்ல எல்லாம் தார் விட ஆரம்பிச்ச பிறகுதான் மரம் எட்டு அடி உயரத்தைத் தொடும். ஆனா, எங்க பகுதி பூவன் வாழை மரங்கள் தார் விடுறதுக்கு முன்னயே எட்டு அடிக்கு மேல வளந்துடும். இந்தப் பகுதியில குறைவான அளவுலதான் ரசாயன உரம் பயன்படுத்துறாங்க. ஆனா, மண் வளமா இருக்குறதால இயற்கை முறையிலேயே மரம் அருமையா வளரும்'' என்ற ராஜ்குமாரின் வார்த்தைகளுக்கு வலு சேர்த்தன, அவரது தோப்பில் உயர்ந்து நிற்கும் வாழை மரங்கள்.
வழிகாட்டிய பசுமை விகடன்!
''2007-ம் வருஷத்திலிருந்தே 'பசுமை விகடன்’ படிச்சுட்டு இருக்கோம். அதைப்படிக்க ஆரம்பிச்ச பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ரசாயன உரத்தைக் குறைக்க ஆரம்பிச்சோம். இப்போ, நாலு வருஷமா முழு இயற்கை முறையில 5 ஏக்கர்ல பூவன் வாழை சாகுபடி செஞ்சுட்டு இருக்கோம். 8 ஏக்கர்ல நெல் இருக்கு. அதை இன்னும் முழுமையா இயற்கைக்கு மாத்தல. ஆனா, சுத்தமா ரசாயன பூச்சிக்கொல்லியைக் கைவிட்டுட்டோம்' என்ற ராஜ்குமார், இயற்கை முறையில் வாழை சாகுபடி செய்யும் விதங்களைச் சொன்னார். அது பாடமாக இங்கே...
ஏக்கருக்கு 1,000 கன்றுகள்! '
ஏக்கருக்கு 5 டன் மாட்டு எருவை இட்டு, நான்கு சால் உழவு ஓட்டி, வரிசைக்கு வரிசை, கன்றுக்கு கன்று ஆறரை அடி இடை வெளி இருக்குமாறு அரை அடி ஆழத்துக்கு குழி பறித்து வாழை விதைக்கன்றுகளை நடவு செய்யவேண்டும். இந்த இடைவெளியில ஏக்கருக்கு கிட்டத்தட்ட ஆயிரம் கன்றுகளை நடவு செய்யலாம். நடவு செய்த 3ம் மாதம் ஒவ்வொரு கன்றுக்கும் அரை கிலோ வீதம், மேம்படுத்தப்பட்ட மாட்டு எரு கொடுக்க வேண்டும் (350 கிலோ மாட்டு எருவோடு தலா 50 கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலந்து தினமும் லேசான ஈரம் இருக்குமாறு தண்ணீர் தெளித்து 45 நாட்கள் வைத்திருந்தால் மேம்படுத்தப்பட்ட எரு தயார்). இதேபோல 5 மற்றும் 7-ம் மாதங்களில் தலா ஒரு கிலோ மேம்படுத்தப்பட்ட மாட்டு எரு கொடுக்க வேண்டும். இதைத்தவிர வேறு எந்த இடு பொருட்களும் கொடுக்கத் தேவையில்லை.
பூச்சி, நோய் தாக்காது!
இயற்கை முறை என்பதால், வேர்ப்புழு, நூற்ப்புழு, சாறு உறிஞ்சும் பூச்சி மற்றும் வாடல் நோய் உள்ளிட்ட தொந்தரவுகளும் கூட கட்டுப்படும். தவிர்க்க முடியாமல் மட்டைக் காய்ச்சல் நோய் வந்தால்...3 லிட்டர் ஜீவாமிர்தத்தில் தலா 1 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனஸ், பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து, இக்கரைசலை 200 லிட்டர் தண்ணீர்ல கலந்து மட்டைகளில் தெளித்தால், நோய் குணமாகி விடும். நடவு செய்த 7-ம் மாதம் தார் விடத்தொடங்கும். 8- ம் மாதம் 13 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து தார்கள் மீது தெளிக்க வேண்டும். இந்த அளவு 40 தார்களுக்கு சரியாக இருக்கும். தொடர்ந்து 15 நாட்கள் இடைவெளியில இரண்டு முறை தெளிக்க வேண்டும். தார் விட்ட 90 முதல் 100 நாட்கள்ல தார் முதிர்ச்சி அடைந்து அறுவடைக்குத் தயாராகி விடும்.''
பூச்சி, நோய் தாக்காது!
இயற்கை முறை என்பதால், வேர்ப்புழு, நூற்ப்புழு, சாறு உறிஞ்சும் பூச்சி மற்றும் வாடல் நோய் உள்ளிட்ட தொந்தரவுகளும் கூட கட்டுப்படும். தவிர்க்க முடியாமல் மட்டைக் காய்ச்சல் நோய் வந்தால்...3 லிட்டர் ஜீவாமிர்தத்தில் தலா 1 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனஸ், பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து, இக்கரைசலை 200 லிட்டர் தண்ணீர்ல கலந்து மட்டைகளில் தெளித்தால், நோய் குணமாகி விடும். நடவு செய்த 7-ம் மாதம் தார் விடத்தொடங்கும். 8- ம் மாதம் 13 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து தார்கள் மீது தெளிக்க வேண்டும். இந்த அளவு 40 தார்களுக்கு சரியாக இருக்கும். தொடர்ந்து 15 நாட்கள் இடைவெளியில இரண்டு முறை தெளிக்க வேண்டும். தார் விட்ட 90 முதல் 100 நாட்கள்ல தார் முதிர்ச்சி அடைந்து அறுவடைக்குத் தயாராகி விடும்.''
ஒரு தார் 200 ரூபாய்!
சாகுபடிப்பாடம் முடித்த ராஜ்குமார், 'ஒவ்வொரு தாரும் இரண்டரை அடியில இருந்து 4 அடி உயரம் வரை இருக்கும். ஒரு தார் சராசரியா 18 கிலோ எடை இருக்கும். ஒரு தாருக்கு சராசரியா 200 ரூபாய் கிடைக்கும். ஒரு ஏக்கர்ல ஆயிரம் மரங்கள் வளர்ந்தா, சராசரியா 700 தார்கள் நல்ல முறையில வளர்ந்து விற்பனைக்குத் தேறும். வேலி ஓரங்கள்ல இருக்குற மரங்கள்ல தார் சுமாராத்தான் இருக்கும். அந்த வகையில சுமாரான தரத்துல 200 தார்கள் கிடைக்கும். இதுக்கு விலையும் குறைவாத்தான் கிடைக்கும். மொத்தமா விற்பனை செய்றப்போ... ஒரு ஏக்கர்ல பூவன் வாழை மூலமா 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல எல்லா செலவும் போக, 1 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் நிகரலாபம்.
இரண்டாம் போகத்தில் இலை மூலம் வருமானம்!தார் அறுத்து முடிச்ச பிறகு, மட்டை களை மட்டும் நீக்கிட்டு, தாய் மரத்தின் தண்டுப்பகுதியை விட்டுடுவோம். அடுத்த போகத்துல இலை மூலமா வருமானம் எடுப்போம். ஒவ்வொரு தாய் மரத்துல இருந்தும் அஞ்சுல இருந்து ஏழு பக்கக் கன்றுகள் உருவாகும். இதுல 4 கன்றுகள் மட்டும் தரமா வளரும். அந்த கன்றுகள்ல மூணாவது மாசத்துல இருந்து இலைகளை அறுவடை செய்யலாம். ஒரு மரத்துல இருந்து மாசத்துக்கு குறைந்தபட்சம் 2 இலைகள் கிடைக்கும். ஒரு முழு இலை 7 அடி நீளம் இருக்கும். ஒரு இலை 6 ரூபாய் அளவுக்கு விற்பனையாகும். ஒரு ஏக்கர்ல மாசத்துக்கு 4 ஆயிரம் இலைகள் கிடைக்கும். இதை விற்பனை செய்றப்போ 24 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அறுப்புக்கூலி உள்ளிட்ட செலவுகள் 7 ஆயிரத்து 500 ரூபாய் போக, மாசத்துக்கு நிகர லாபமாக, 16 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கும். வருஷத்துக்கு 2 லட்ச ரூபாய் அளவுக்கு லாபம் கிடைச்சுடும்' என்ற ராஜ்குமார் நிறைவாக, ''இயற்கை விவசாயத்துல மரத்தின் வேரும், தண்டும் நல்லா உறுதியா திடகாத்திரமா இருக்குறதுனால, என்னதான் வேகமா காத்த டிச்சாலும் இங்க உள்ள வாழை மரங்கள் முறியறதில்லை. இதனால் ஒரு மரத்துக்கு 55 ரூபாய் வீதம் முட்டுக்கால் கொடுக்குற செலவும் மிச்சம். இயற்கை இப்படி எனக்கு லாபத்தைக் கொடுக்கறதால, இனி நெல் சாகுபடியையும் முழுக்க இயற்கைக்கு மாத்தப்போறேன்'' என்று சொல்லி விடை கொடுத்தார்.
தொடர்புக்கு,ராஜ்குமார், செல்போன்: 87604-72815.
Thursday, 8 January 2015
குருத்துப் பூச்சியில் இருந்து நெல் பயிரை காப்பது எப்படி
தற்போதைய பருவத்தில் குருத்துப் பூச்சியின் தாக்குதலால், நெல் பயிர்கள் அதிகளவில் சேதம் ஏற்படும் வாய்ப்புள்ளதால், அதற்கான மேலாண்மை முறைகளை விவசாயிகள் கையாள வேண்டும் என திரூர் நெல் ஆராய்ச்சி நிலையப் பேராசிரியரும், தலைவருமான அகிலா அறிவுறுத்தினார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில் குருத்துப் பூச்சியின் தாக்குதல் ஜனவரி மாதத்தில் அதிக அளவில் இருக்கும். இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைய வாய்ப்பிருக்கும். எனவே விவசாயிகள் கவனத்துடன் தங்களது பயிர்களைக் கண்காணித்து குருத்துப் பூச்சி மேலாண்மை முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.தாக்குதல் அறிகுறிகள்: இளம் புழுக்கள் இளம் பயிரின் தண்டில் துளையிட்டு உள் சென்று அதன் அடிபாகத்தில் இருந்து கொண்டு உள் பகுதியைக் கடித்து உண்பதால் இளம் பயிரின் நடுக்குருத்து வாடிக் காய்ந்து விடும்.பூக்கும் பருவத்தில் கதிர் காய்ந்து மணி பிடிக்காமல் வெண்ணிறக் கதிர்களாக மாறும். இது வெண்கதிர் சேதம் ஆகும்.வாடியக் குருத்து அல்லது வெண் கதிரைப் பிடித்து இழுத்தால் எளிதில் வந்து விடும். பொருளாதார சேத நிலை ஒரு சதுர மீட்டருக்கு இரண்டு முட்டைக் குவியல்கள் ஆகும். காய்ந்த நடுக்குருத்து 10 சதவீதமும், வெண்கதிர் 2 சதவீதமும் ஏற்படும்.மேலாண்மை முறைகள்: அறுவடை செய்தபின் தாள்களை மடக்கி உழுவதன் மூலம் புழுக்களையும், கூட்டுப் புழுக்களையும் அழிக்கலாம்.நடுவதற்கு முன் நாற்றுக்களின் நுனியைக் கிள்ளி முட்டைக் குவியல்களை அழிக்க வேண்டும்.மண் பரிசோதனை செய்து வேளாண் அதிகாரிகளின் ஆலோசனையின்பேரில் தழைச் சத்து உரம் இட வேண்டும்.மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை வயலில் விளக்குப் பொறி அமைக்க வேண்டும்.ஒரு ஹெக்டேருக்கு 12 வீதம் இனக் கவர்ச்சிப் பொறி அமைக்க வேண்டும். டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் என்னும் முட்டை ஒட்டுண்ணியை ஒரு வார இடைவெளியில் மூன்று முறை வெளியிடவும்.பூச்சித் தாக்குதல் பொருளாதார சேத நிலையை அடையும் போது கீழ்க்கண்ட பூச்சிக் கொல்லிகளுள் ஏதேனும் ஒன்றை ஒரு ஹெக்டேருக்குத் தெளிக்க வேண்டும்.மேலும் ப்ளுபென்டிமைடு 39.35 எஸ்.சி 50 மில்லி லிட்டர், கார்டாப்ஹைட்ரோ குளோரைடு 50 எஸ்பி -1000 மில்லி லிட்டர், குளோரன்டிரினிலிப் ரோல் 18.5 எஸ்.சி 150 மில்லி லிட்டர், டிரை அசோபாஸ் 40 625 மில்லி லிட்டர், பிப்ரோனில் 5 எஸ்.சி 1000 மில்லி லிட்டர் ஆகியவை இட வேண்டும்.
பால் வளத்தைப் பெருக்கும் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்!
பசுக்கள் வளர்க்கும் விவசாயிகள் கம்பி நேப்பியர் ஒட்டுப்புல் என அழைக்கப்படும் சி.என். 4 ரக புல்லை உற்பத்தி செய்து, கால்நடைகளுக்கு கொடுப்பதால் பால் உற்பத்தியை எளிதாகப் பெருக்கலாம்.தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட இந்த ரகம், குறைந்த பரப்பில் அதிக மகசூல் தரும் புல் ரகமாகும்.இந்த தீவனப் பயிரை உற்பத்தி செய்வதால் குறைந்த இடத்தில் அதிக பசுந்தீவன புல்லை உற்பத்தி செய்து பால் உற்பத்தியைப் பெருக்கலாம் என காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் பெ. முருகன் தெரிவித்துள்ளார்.அவரது தகவல்கள்: கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், அதிகத் தூர்களுடன் வளரக்கூடிய ஒரு பல்லாண்டு தீவனப் பயிராகும். தண்டுகள் மிகவும் மிருதுவான, இனிப்பான, சாறு நிறைந்த, குறைந்த நார்ச்சத்தைக் கொண்டவை.அதிக தூர்களுடன் (செடிக்கு 30 முதல் 35 தூர்கள்) சாயாத் தன்மை கொண்டது. அகலமான, மிருதுவான இலைகள் அதிக இலை தண்டு விகிதம் கொண்டவை.இவ்வகை பயிரை எளிதில் பூச்சிகள், நோய்கள் தாக்காது. அதிக உலர் தீவன மகசூல், புரதச்சத்து கொண்டவை. ஆண்டுக்கு ஏழு முறை அறுவடை செய்யலாம். இதனால் ஏக்கருக்கு 350 முதல் 400 டன் அளவுக்கு மகசூல் பெறலாம். பசுந்தீவனத்தின் முக்கியத்துவம்: கால்நடைகளுக்குப் பசுந்தீவனப் புற்கள் கொடுப்பதால் பால் உற்பத்திக்கு தேவையான வைட்டமின் ஏ எனும் உயிர்ச்சத்து கிடைக்க வழிவகை ஏற்படுகிறது. கால்நடைகளின் கண்பார்வை, சுவாச மண்டலத்தின் செயல்பாடுகள் மேம்படுகிறது. மேலும், கால்நடைகளின் கரு உருவாவதற்கும், உருவான கருவைத் தக்க வைப்பதற்கும் பசுந்தீவனப் புற்கள் வழிவகை செய்கின்றன. சாகுபடி தொழில்நுட்பம்: ஆண்டு முழுவதும் எல்லா வகை மண் வகைகளிலும் அனைத்து மாவட்டங்களிலும் இந்தப் புல்லைப் பயிரிடலாம். நிலத்தை இரும்புக் கலப்பையைக் கொண்டு 2 அல்லது 3 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். நிலத்தைப் பண்படுத்திய பிறகு 60 செ.மீ. இடைவெளியில் பாத்திகள் அமைக்க வேண்டும்.மண் பரிசோதனை செய்து மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு உரங்களை இட வேண்டும். மண் பரிசோதனை செய்யாவிட்டால், 1 ஏக்கருக்கு அடியுரமாக 25 டன் மக்கிய தொழுஉரம், 75 கிலோ தழைச்சத்தை அடியுரமாக இடுவதால் மகசூலை நிலை நிறுத்தலாம்.பாத்திகள் அமைக்கப்பட்ட நிலத்தில் நன்கு நீர்ப் பாய்ச்சிய பின் தண்டுக்கரணையை 60-க்கும் 50 செ.மீ. இடைவெளியில் செங்குத்தாக நடவு செய்ய வேண்டும்.இவ்வாறு நடவு செய்தால் ஒரு ஏக்கருக்கு 33 ஆயிரத்து 333 கரணைகள் தேவைப்படும். கரணை நட்ட 3ஆவது நாளில் உயிர் நீர்ப்பாசனம் கொடுக்க வேண்டும்.பிறகு 10 நாள்களுக்கு 1 முறை நீர்ப்பாசனம் கொடுக்க வேண்டும்.கரணை நட்ட 20ஆவது நாள் ஒரு கைக்களை எடுக்க வேண்டும். நடவுக்குப் பின் 75 முதல் 80 நாள்களில் முதல் அறுவடையும், அடுத்தடுத்து 45 நாள்களிலும் தீவனப் பயிர்களை அறுவடை செய்யலாம்.இவ்வாறு சாகுபடி மேற்கொண்டால், 1 ஹெக்டேரில் 1 ஆண்டுக்கு 7 அறுவடைகளில் 350 முதல் 400 டன் பசுந்தீவன மகசூல் உற்பத்தி செய்யலாம். எனவே கறவைமாடு வளர்க்கும் விவசாயிகள் குறைந்தபட்ச நிலத்திலாவது, கோ (சிஎன்) 4 ரக புல்லை உற்பத்தி செய்து, கால்நடைகளுக்கு கொடுப்பதன் மூலம் பால் உற்பத்தியை எளிதாக பெருக்கலாம். மேலும் நகர்புற அருகில் உள்ள விவசாயிகள் இப்புல்லை உற்பத்தி செய்து, பசும்புல்லை, ஒரு கிலோ ரூ. 3 வரையில் விற்பனை செய்யலாம். இந்தப் புல்லில் தண்டுக்கரணை உற்பத்தி செய்து விற்பதன் மூலம் அதிக வருவாயை ஈட்டலாம்.மேலும் விவரங்களுக்கு காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியரை 98844 02613 என்ற கைப்பேசி எண்ணிலோ, 044 - 2745 2371 என்ற தரைவழி தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்றார் முருகன்.
Saturday, 3 January 2015
கரும்பு
சாகுபடி உத்திகள் கரும்பு பருவம் மற்றும் இரகங்கள்தமிழ்நாட்டில் கரும்பு பொதுவாக டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரை மூன்று பட்டங்களில் அதிகமாக நடவு செய்யப்படுகின்றது. இது தவிர திருச்சி, பெரம்பலூர், கரூர், சேலம், நாமக்கல் மற்றும் கோவை மாவட்டங்களில் ஜீன் முதல் செப்டம்பர் மாதம் வரை தனிப்பட்டமாக கரும்பு நடவு செய்யப்படுகிறது. பருவத்திற்கு ஏற்ப பட்டங்கள் பின்வருமாறு பிரிக்கப்படுகிறது.முன்பட்டம் - டிசம்பர் - ஜனவரிநடுப்பட்டம் - பிப்ரவரி - மார்ச்பின்பட்டம் - ஏப்ரல் - மேதனிப்பட்டம் - ஜீன் - ஜீலைமுன்பட்டத்திற்கு ஏற்ற இரகங்கள் தனிப்பட்டத்திற்கும் உகந்தவையாகும்
கரும்பு நடவு வயல் தயாரிப்பு1. நடவு வயல் தயாரிப்பு
அ.களிமண்நிலம்பொதுவாக களி மண் வயல்களில் நல்ல பொலபொலப்புத் தன்மை பெறும் வகையில் உழவு மேற்கொள்ள முடிவதில்லைநெல் அறுவடைக்குப் பிறகு வயலின் குறுக்காகவும் வயலைச் சுற்றியும் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் பாத்திகள் 6 மீட்டர் இடைவெளியில் 40 செ.மீ.ஆழம் மற்றும் 30 செ.மீ. அகலத்தில் அமைத்திட வேண்டும்நடவு சால் மற்றும் சால் மேடுகள் 80 செ.மீ. இடைவெளியில் மண்வெட்டி கொண்டு அமைத்திட வேண்டும்நடவு சாலினை 4 முதல் 5 நாட்கள் வரையிலும் களைகொத்தி கொண்டு கிளறி விடுதல் வேண்டும்அதிக தண்ணீர் தேங்கி பிரச்சினையாகும் நிலங்கள்அதிகமாக தண்ணீர் தேங்கி நின்று மற்றும் அதனை வடித்து வெளியேற்ற முடியாத வயல்களில் 30 செ.மீ.இடைவெளியில் 5 மீட்டர் நீளம், 80 செ.மீ. அகலம் மற்றும் 15 செ.மீ. உயரம் கொண்ட மேட்டுப் பாத்திகள் அமைத்திட வேண்டும்.உ.இருமண் மற்றும் மணல்சாரி தோட்டக்கலை நிலங்கள்ஆரம்பத்தில் இரண்டு தட்டு கலப்பை கொண்டு உழ வேண்டும். தொடர்ந்து எட்டு தட்டு கலப்பை கொண்டு உழ வேண்டும் மற்றும் உழும் கருவி பயன்படுத்தி ஆழ உழ வேண்டும். தொடர்ந்து ஒரு முறை சுழல் கலப்பை கொண்டு மண்ணை பொலபொலப்பாக்கி பண்படுத்துவதன் மூலம் களை மற்றும் பயிர்தூர் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.சீரான முறையில் நீர்ப்பாசனம் செய்திட நிலத்தினை நன்கு சமன்படுத்த வேண்டும்நடவு சால் மற்றும் சால் மேடுகள் 80 செ.மீ. இடைவெளியில் விக்டரி அல்லது பார் அமைக்கும் கலப்பை கொண்டு அமைக்க வேண்டும். நடவு சால்கள் 20 செ.மீ. ஆழம் உடையதாக இருத்தல் வேண்டும்நீர்ப்பாசன வாய்க்கால்கள் 10 மீட்டர் இடைவெளியில் இருத்தல் வேண்டும்2. அடியுரமாக அங்கக உரங்கள் இடுதல்தோட்டக்கால் நிலங்களில் கடைசி உழவிற்கு முன்னதாக தொழுஉரம் 12.5 டன்/ எக்(ஆழ் குப்பை உரம் 25 டன்/ எக்(அ) ஆலை அழுக்கு 37.5 டன்/ எக் என்ற அளவில் இட வேண்டும். களி மண் நிலங்களில் மேற்கண்ட அங்கக உரங்களை நடவு சால்களில் இட்டு நன்கு கலந்து விடவேண்டும்.கரும்புத் தோகை மற்றும் ஆலை அழுக்கு கொண்டு ஊட்டமேற்றிய குப்பை எரு தயாரித்தல்காய்ந்த கரும்புத் தோகையை 15 செ.மீ. உயரத்திற்கு சுமார் 7 மீட்டர் நீளம் மற்றும் 3 மீட்டர் அகலப் பாத்திகளாக பரப்பவும். அதற்கு மேல் 5 செ.மீ. உயரத்திற்கு கரும்பு ஆலை அழுக்கினை பரப்பி விடுதல் வேண்டும். மசூரி ராக் பாஸ்பேட், ஜிப்சம் மற்றும் யூரியா உரங்களை முறையே 2:2:1 என்ற விகிதாச்சாரத்தில் கலந்து தோகை மற்றும் ஆலை அழுக்கு அடுக்கின் மீது 100 கிலோ தோகைக்கு 5 கிலோ உரக்கலவை என்ற விகிதத்தில் பரவலாகத் தூவி விட வேண்டும். பின்னர் அடுக்கு முழுவதும் நன்கு நனையும் வண்ணம் தண்ணீர் தெளிக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள இடுபொருள்கள். ஒவ்வொன்றையும் அதே அளவில் மற்றும் அதே முறையில் திரும்பவும் கொடுத்து கடைசியாக அடுக்கின் மொத்த உயரம் 1.5 மீட்டர் அளவு வருமாறு செய்ய வேண்டும். தண்ணீர் தெளிப்பதற்கு பதிலாக கிடைக்கும் இடங்களில் தொழு உரக் கரைசல் பயன்படுத்தலாம். பின்னர் அடுக்கு முழுவதையும் மண் மற்றும் ஆலை அழுக்கு முறையே 11 என்ற விகித அளவில் கலந்த கலவை கொண்டு 15 செ.மீ. உயர அளவிற்கு மூடி விட வேண்டும். இவ்வடுக்கினை மூன்று மாதத்திற்கு மக்குவதற்காக அப்படியே விட்டுவிடவேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை அடுக்கு முழுவதும் நனையும் வண்ணம் நீர் தெளிக்க வேண்டும். மூன்று மாதமானதும் அடுக்கினை புரட்டி பின்னர் நன்கு கலந்து விட்டு ஒரு மாதத்திற்கு அப்படியே விட வேண்டும். நான்காவது மாத முடிவில் மறுபடியும் புரட்டி விட்டு பின் கலந்து 5வது மாத முடிவு வரை 15 நாள் இடைவெளியில் தண்ணீர் தெளிக்க வெண்டும். இம்முறையில் தயாரிக்கப்படும் கரும்புத்தோகை கம்போஸ்டில் தழை, மணி மற்றும் கால்சியம் சத்துக்களின் அளவு அதிகமாக இருப்பதோடு கரிமம் மற்றும் தழைச்சத்தின் விகிதாச்சாரம் கரும்புத் தோகையின் அளவை விட 10 மடங்கு குறைவாக இருக்கும்.
அடியுரமாக இரசாயன உரங்கள் இடுதல்மண் பரிசோதனை செய்யப்படவில்லையெனில் பொதுப்பரிந்துரையாக தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து முறையே எக்டருக்கு 300:100:200 கிகி அளிக்க வேண்டும். சூப்பர் பாஸ்பேட் (625 கிகி/எக்டர்) மண்வெட்டி கொண்டு அளிக்க வேண்டும். துத்தநாக சத்து மற்றும் இரும்புச்சத்துக் குறைபாடு உள்ள வயல்களில் முறையே 37.5 கிலோ/எக் துத்தநாக சல்பேட் மற்றும் 100 கிலோ/எக் பெரஸ் சல்பேட் இடுதல் வேண்டும். கந்தக பற்றாக்குறையுள்ள மணலில் ஜிப்சம் வடிவில் கந்தகத்தை எக்டருக்கு 500 கிகி அளிப்பதன் மூலம் கரும்பு விளைச்சல் மற்றும் சாறின் தரத்தை உயர்த்தலாம்.ஐ.ஏ.நடவு வயல் பராமரிப்பு1.கரும்பு நடவிற்கு விதைக்கரணை தயாரித்தல்விதைக்கரணைகளை, நோய் மற்றும் பூச்சிகள் தாக்காத 6 முதல் 7 மாதமுடைய விதை நாற்றங்காலிலிருந்து தேர்வு செய்ய வேண்டும்விதைக்கரணைகளில் ஒட்டியிருக்கும் காய்ந்த தோகைகளை ஆட்கள் கொண்டு கைகளால் நீக்க வேண்டும்பிளவு இல்லாத விதை கரணைகளை பெற கூர்மையான கத்தி அல்லது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கரணை வெட்டும் இயந்திரம் பயன்படுத்த வேண்டும்.விதைக்கரணைகள் பக்கவாட்டில் விளந்து விடாமல் இருக்க கூரிய கத்தி கொண்டு தயார் செய்திடல் வேண்டும்அடிப்பட்ட பருக்கள், பருக்கள் முளைத்த மற்றும் பிளவுபட்ட விதைக்கரணைகளை நீக்கி விட வேண்டும்அசோஸ்பைரில்லம்
விதை நேர்த்தி:
நடவுக்கு முன்னர் 10 பொட்டலங்கள் (2 கிலோ/எக்) அஸோஸ்பைரில்லம் நுண்ணுயிருடன் தேவையான அளவு நீர் கலந்து அக்கலவையில் கரும்பு விதைக்கரணைகளை 15 நிமிடம் வரையில் நனைத்து பின் நடவு செய்ய வேண்டும்2. கரணை நேர்த்திஆரோக்கியமான கரணைகளைத் தேர்வு செய்திடவேண்டும்கரணைகளை 100 லிட்டர் தண்ணீரில் 50கி கார்பன்டிசம், 200மிலி மாலதியான் மற்றும் 1கிகி யூரியா கலந்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.கரணைகளை புல்தண்டு நோயிலிருந்து பாதுகாத்திட 1 மணி நேரத்திற்கு 50 டிகிரி சென்டிகிரேட் என்ற அளவில் வெப்ப நீராவி நேர்த்தி செய்திட வேண்டும்
.கரணை அளவு : 75,000 இரு பரு கரணைகள் எக்டருக்கு
கரும்பு நடவு முறையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள்இயந்திர முறை நடவுதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இயந்திர நடவு கருவி எக்டருக்கு ரூ.3750/- சேமிக்க உதவுகிறது மற்றும் நாள் ஒன்றிற்கு 1.5 எக்டர் பரப்பளவு நடவு செய்கிறது.மனித ஆற்றலைக் குறைக்கிறது மற்றும் விதை அளவு எக்டருக்கு 5 டன்னாக குறைக்கிறது.இணைவரிசை நடவுமுறையில் இரண்டு புறமும் கரணைகளை 150 + 30 செ.மீ இடைவெளியில் அஸ்ட்ராப் 8000 வகை (அறுவடை இயந்திரம்) கொண்டு அறுவடை செய்யுமாறு நட வேண்டும் மற்றும் 150 + 30 செ.மீ இடைவெளியில் நியூ ஹாலண்ட் 4000 வகை அறுவடை இயந்திரம் கொண்டு அறுவடை செய்யுமாறு ஒரு வரிசையில் நடவு செய்ய வேண்டும்.நிலத்தடி சொட்டு நீர் பாசன முறையில் கரும்பை பயிர் செய்யும்போது சொட்டு நீர் குழாய்களை 20 செ.மீ ஆழத்தில் வாய்க்காலில் பதிக்க வேண்டும் மற்றும் விதை கரணைகளை சொட்டு நீர் குழாய்க்கு 5 செ.மீ மேல் இருக்குமாறு பதிக்க வேண்டும்.செம்மை கரும்பு சாகுபடியில் 25-35 நாட்கள் வளர்ந்த நாற்றுகளை 5x2 அடி இடைவெளியில் விளைநிலத்தில் நட்டு சொட்டு நீர் பாசனம் அமைக்க வேண்டும்.பரந்த இடைவெளி கரும்பு சாகுபடியில் ஊடுபயிராக தக்கைப் பூண்டு மற்றும் சணப்பை பயிரிடுவதன் மூலம் மண் வளம் மேம்படும் மற்றும் களைகளை கட்டுபடுத்தலாம். இது இளங்குருத்துப் புழு நோய் நிகழ்வைக் குறைக்கிறது மற்றும் கரும்பு விளைச்சல் அதிகரிக்கிறது.கடின மண்ணில் வரப்பில் கரணைகளை 80 செ.மீ இடைவெளியில் நடுவதன் மூலம் கரணை அழுகல்நோயை தவிர்க்கலாம் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.நடவு செய்த மூன்று நாட்களுக்குள் வரப்பின் எதிர் திசையில்10 செ.மீ இடைவெளியில் ரைசோபிம் கொண்டு விதை நேர்த்தி செய்யப்பட்ட பசுந்தாள் விதைகளை எக்டருக்கு 10 கிலோ அளவு விதைக்க வேண்டும்.அதிக இடைவெளியுள்ள பயிர்களில் நடவு செய்த 50-60 நாட்களில் பசுந்தாளை உழுதுவிட வேண்டும் மற்றும் நடவு செய்த 90-100 வது நாளில் பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்துடன் மண் அணைக்க வேண்டும்.சுழல் கலப்பை பொருத்திய எந்திரக் களையெடுக்கும் கருவியை கொண்டு களை எடுக்க வேண்டும் மற்றும் சால் அமைக்கும் கருவி கொண்டு மண் அணைப்பதன் மூலம் ஆட்கள் செலவை சேமிக்கிறது மற்றும் தொழிலாளர் வேலைபளுவைக் குறைக்கிறது. நான்கு அடி வரிசை. ஒவ்வொரு வரிசையிலும் இரண்டு வரி நடவு. மண்ணின் வளத்தை அதிகரிக்க ஊடுபயிராக தக்கைப் பூண்டு/ சணப்பை நடவு செய்ய வேண்டும். இது மேலும் இளங்குருத்துப் புழு நோய் நிகழ்வைக் குறைக்கிறது மற்றும் விளைச்சலை அதிகரிக்கிறது. கரணைகளை வரப்பின் ஒரு பக்கத்தில் நடவு செய்ய வேண்டும். வரப்பின் எதிர் புறத்தில் 10 செ.மீ உயரம் கொண்ட வரப்பில் ரைசோபியம் விதை நேர்த்தி செய்யப்பட்ட பசுந்தாள் விதைகளை 10 கிலோ/ எக்டர் விதைக்க வேண்டும்.நடவு செய்த 50-60 நாட்களுக்குப் பிறகு பசுந்தாள் உரத்தை அளிக்க வேண்டும் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்து கொண்டு பகுதி மண் அணைத்தல் வேண்டும்.களையெடுக்கும் கருவி கொண்டு களையெடுக்க வேண்டும் மற்றும் மண் அணைத்தல் மூலம் பணியாளர்கள் கூலி செலவைக் குறைக்கிறது மற்றும் மனித வேலைபளுவைக் குறைக்கிறது.
போக்கிடங்களை நிரப்புதல்வயலில் போக்கிடங்கள் இருந்தால் நடவு செய்த 30 நாட்களுக்குள் முளைத்த கரணைகளைக் கொண்டு நடவு செய்திட வேண்டும்இரண்டு பதியம் கரணைகளைக் கொண்டு சந்து நிரப்புதல் வேண்டும்/ 15-20 நாட்களான பாலித்தீன் பை நாற்றுகளை நடவு செய்வதன் மூலம் பயிர் நன்றாக வளரும்.போக்கிடங்களில் நடவு செய்த பிறகு மூன்று வாரங்கள் வரையிலும் வயலில் தேவையான ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்வது கரணைகள் நன்கு முளைத்து வளர ஏதுவாகும்.
தோகை பரப்புதல்சால்மேடுகளில் காய்ந்த கரும்புத் தோகையை சீராக 10 செ.மீ உயரத்திற்கு நடவு செய்த ஒரு வாரத்திற்குள் பரப்புதல் வேண்டும். இதனால் வறட்சி காலங்களில் கரும்பு தாக்குப்பிடித்து வளர்வதற்கும் கரும்பின் நீர் தேவை குறைவதற்கும், களைச் செடிகளின் ஆதிக்கம் குறைவதற்கும் மற்றும் இளங்குருத்துப் புழுவின் தாக்குதல் குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது. களிமண் வகைகளில் தோகைபரப்புதலைநடவு செய்த 21 நாட்களுக்குப பிறகு செய்திட வேண்டும். கரையான் தொல்லை அதிகம் உள்ள இடங்களில் தோகை பரப்புதலை செய்யாமல் இருத்தல் நன்று
.ஊடுபயிர் சாகுபடிதண்ணீர் தட்டுப்பாட்டு அற்ற பகுதிகளில் சோயா மொச்சை அல்லது உளுந்து அல்லது பச்சைப்பயறு போன்ற பயிர்களை கரும்பு நடவுசால் மேடுகளின் நடுவில் ஒரு வரிசையில் விதைக்கலாம். கொளுஞ்சி அல்லது சணப்பை ஊடுபயிராக நடவுசால் மேடுகளில் விதைத்த 45ம் நாள் பிடுங்கி கரும்பு வரிசைக்கு அருகே வைத்து மண் அணைப்பதின் மூலமாக மண்ணின் சத்துக்கள் அதிகரிப்பதோடு கரும்பில் அதிக மகசூல் அடையலாம். மேலும் கோ1 என்ற சோயா மொச்சை ஊடுபயிர் செய்வதின் மூலம் கரும்பின் மகசூல் குறையாமல் சோயா மொச்சையிலிருந்து ஒரு எக்டரக்கு 800 கிலோ வரையில் மகசூல் எடுக்கலாம்
களை நிர்வாகம்களை அதிகமாக உள்ள இடத்தில் பயிர் வரிசையில் ஒரு வரி களையெடுக்க வேண்டும் மற்றும் விதைத்த 30,60 மற்றும் 90ம் நாட்களில் மண்வெட்டி கொண்டு வரப்புகளில் களையெடுக்க வேண்டும். அட்ராஜின் 2கிலோ தெளிக்கவும் அல்லது எக்டருக்கு 750மிலி ஆக்ஸிப்ளுர்ஃபென் 600 லிட்டர் தண்ணீரில் கலந்து முளைக்குமுன் களைக்கொல்லியாக நடவு செய்த 3ம் நாளில் விசிறி வடிவ குழாய் கொண்ட நேப்சாக் தெளிப்பான் கொண்டு தெளிக்கவும்.விதைத்த 3-ம் நாள் களை முளைப்பதற்கு முன் அட்ராஜின் எக்டருக்கு 1.0 கிலோ அளிக்கவும். தொடர்ந்து விதைத்த 45-ம் நாள் களை முளைத்தபின் கிளைபோசேட் எக்டருக்கு 1.0 லிட்டர் அளிக்கவும். விதைத்த 90-ம் நாள் கைக்களை எடுக்க வேண்டும். களை முளைப்பதற்கு முன் களைக்கொல்லி தெளிக்கப்படவில்லையெனில், களை முளைத்த பின் விதைத்த 21-ம் நாளில் கிராமசோன் லிட்டர் + 2,4-D சோடியம் உப்பு எக்டருக்கு 2.5 கிலோ 600 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.ஒட்டுண்ணிக் களைகள் பிரச்சனை இருப்பின் களை முளைத்த பின் 2,4-D சோடியம் உப்பு எக்டருக்கு ஒரு கிலோ 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும். அருகில் பருத்தி அல்லது வெண்டை செடி இருந்தால் 2,4-D தெளிப்பதை தவிர்க்கவும். 20% யூரியாவை நேரடியாக அளிப்பதன் மூலம் சுடு மல்லியை கட்டுப்படுத்தலாம்.நடவுக்கு முன்னர் தெளிப்பாக விதைப்பதற்கு 21 நாட்கள் முன்னர் கிளைபோசேட் 2.0 கிலோவை அமோனியம் சல்பேட் 2% கலந்து அளிக்க வேண்டும்.தொடர்ந்து களை முளைத்த பின்ளர் கிளைபோசேட் 2.0 கிலோவை அமோனியம் சல்பேட் 2% கலந்து விதைத்த 30-ம் நாள் அளிக்க வேண்டும். இதன் மூலம் கோரைபுற்களை கட்டுப்படுத்தலாம். களை இல்லாத சூழலை உருவாக்கலாம்.களைக் கொல்லிகள் வேலை செய்யாவிட்டால் சிறிய மண்வெட்டி கொண்டு வரப்புகளில் நடவு செய்த 25, 55 மற்றும் 85-ம் நாளில் களையெடுக்க வேண்டும். வாய்க்காலில் கைக்கொத்து கொண்டு களைகளை நீக்க வேண்டும்.களை முளைத்த பின் நேரடி தெளிப்பாக ஃபெர்னோசோன் (2, 4 –D சோடியம் உப்பு) 2கிராம் + 10 கிராம் யூரியா ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து படர் கொடி களைகளை அழிக்க தெளிக்கலாம்.
மேலுரமிடுதல்மண்ணில் இடுதல்தண்ணீர் பற்றாக்குறை இல்லாத இடங்களில் 275 கிலோ தழைச்சத்து மற்றும் 112.5 கிலோ சாம்பல் சத்து/ எக் என்ற அளவில் மூன்று சம பாகங்களாகப் பிரித்து கரும்பு நடவு செய்த 30, 60 மற்றும் 90ம் நாள் இடுதல் வேண்டும்கிணற்றுப் பாசனமுடைய பகுதிகளில் 225 கிலோ தழைச்சத்து மற்றும் 112.5 கிலோ சாம்பல் சத்து/ எக் என்ற அளவில் மூன்று சம பாகங்களாகப் பிரித்து கரும்பு நடவு செய்த 30, 60 மற்றும் 90ம் நாள் இடுதல் வேண்டும்கிணற்றுப் பாசனமுடைய பகுதிகளில் 225 கிலோ தழைச்சத்து மற்றும் 112.5 கிலோ சாம்பல் சத்து/ எக் என்ற அளவினை மூன்று சம பாகங்களாகப் பிரித்து நடவு செய்த 30, 60 மற்றும் 90வது நாட்களில் இடுதல் வேண்டும். தழைச்சத்து சேமிப்புவேப்பம்புண்ணாக்கு கலந்த யூரியா67.5 கிலோ தழைச்சத்து/ எக் ரூ.27.5 கிலோ வேப்பம்புண்ணாக்கினை நடவு செய்த 30, 60 மற்றும் 90 நாட்களில் இட வேண்டும்குறிப்பு: வேப்பம்புண்ணாக்கு கலத்தல் தேவையான அளவு வேப்பம்புண்ணாக்கினைப் பொடி செய்து அதனை யூரியா உரத்துடன் நன்கு கலந்து 24 மணி நேரத்திற்கு வைத்து பின்னர் உபயோகிக்கலாம். இதன் மூலம் 75 கி தழைச்சத்து/எக் மிச்சமாகிறது.அசோஸ்பைரில்லம்12 பொட்டலம் (2400 கிராம்/ எக்) அசோஸ்பைரில்லம் அல்லது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நுண்ணுயிர் கலவை எண் 1 உடன் 25 கிலோ தொழு உரம் மற்றும் 25 கிலோ மண் கலந்து நடவு செய்த 30வது நாள் கரும்புப் பயிர் குத்துக்களுக்கு அருகே இட வேண்டும். இதே போல் கரும்பு நட்ட 60வது மற்றும் 90வது நாட்களில் இதே அளவில் இடுதல் வேண்டும். (கிணற்று நீர்ப்பாசனமுடைய இடங்களுக்கு)தொடராக இடுதல்கரும்புப் பயிர் வரிசைக்கு பக்கவாட்டில் களைக் கொத்தி கொண்டு சுமார் 5 செ.மீ. ஆழசால் அமைத்து அதில் உரங்களை தொடராக இட்டு பின்னர் மண் கொண்டு மூட வேண்டும்.ஆழ்துளை முறையில் இடுதல்255 கிலோ தழைச்சத்தினை யூரியா மற்றும் பொட்டாஷ் சேர்த்து15 செ.மீ. ஆழத்தில் கரும்புப் பயிரின் ஒவ்வொரு குத்துக்கு அருகே இடுவதன் மூலம் 20 கிலோ தழைச்சத்தினை கரும்பின் மகசூல் பாதிக்காத வகையில் சேமிக்கலாம்நுண்ணூட்டச்சத்து உரங்கள்:(a) துத்தநாக பற்றாக்குறையுள்ள மண்: அடியுரமாக எக்டருக்கு 37.5 கிலோ துத்தநாக சல்பேட் அளிக்கவும்.(b) கரும்பில் துத்தநாக பற்றாக்குறை அறிகுறிகள்: இலைத் தெளிப்பாக 0.5% துத்தநாக சல்பேட்டை 1% யூரியாவுடன் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் பற்றாக்குறை மறையும் வரை தெளிக்க வேண்டும். (a) இரும்பு பற்றாக்குறையுள்ள மண்: அடியுரமாக எக்டருக்கு 100 கிலோ ஃபொரோஸ் சலடபேட் அளிக்கவும்.(b) கரும்பில் இரும்பு பற்றாக்குறை அறிகுறிகள்: இலைத் தெளிப்பாக 1% ஃபொரோஸ் சலடபேட்டை 1% யூரியாவுடன் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் பற்றாக்குறை மறையும் வரை தெளிக்க வேண்டும்.தாமிர பற்றாக்குறையுள்ள மண்ணில் தாமிர சல்பேட்டை எக்டருக்கு 5 கிலோ மண் வழியாக அளிக்க வேண்டும். மாற்றாக இலைத் தெளிப்பாக 0.2% தாமிர சல்பேட்டை இரண்டு முறை பயிர் வளர்ச்சியின் ஆரம்பத்தில் அளிக்க வேண்டும்.பொதுவான நுண்ணூட்டச்சத்து கலவை: கரும்பிற்கு எக்டருக்கு 50 கிலோ நுண்ணூட்டச்சத்துக் கலவையை அளிக்க வேண்டும். நுண்ணூட்டச்சத்துக் கலவை 20 கிலோ ஃபெரோஸ் சல்பேட், 10 கிலோ மாங்கனீசு சல்பேட், 10 கிலோ துத்தநாக சல்பேட், 100 கிலோ மக்கிய தொழுவுரத்துடன் கலந்த 5 கிலோ போரக்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவை நடவிற்கு முன்னர் மண்ணில் அளிக்க பரிந்துரைக்கப்படுகிறது.(அல்லது) கரும்பின் மகசூலை அதிகரிக்க தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நுண்ணூட்டக் கலவையை எக்டருக்கு 50 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்கலாம்.நுண்ணூட்டச்சத்து மற்றும் பேரூட்டச்சத்தின் பரிந்துரைக்கப்பட்ட அளவு
பேரூட்டச்சத்து
கரும்பு – நடவு பயிர் (சர்க்கரை ஆலைக்காக உற்பத்தி செய்யப்படும் கரும்பு) எக்டருக்கு 300:100:200 கிலோ தழைச்சத்து , மணிச்சத்து and சாம்பல் சத்து இட வேண்டும்.கரும்பு – மறுதாம்பு பயிர் (சர்க்கரை ஆலைக்காக உற்பத்தி செய்யப்படும் கரும்பு) எக்டருக்கு 300 + 25% அதிக தழைச்சத்து : 100 : 200 kg மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து இட வேண்டும்.வெல்லத்திற்காக உற்பத்தி செய்யப்படும் கரும்பு (நடவு மற்றும் மறுதாம்பு பயிர்) எக்டருக்கு 225 : 62.5 : 112.5 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துகரும்பிற்கான உயிர் உரம்அசோஸ்பைரில்லம் என்பது கரும்பு வேர்களுக்கு ஊட்டமளிக்கும் பொதுவான தழைச்சத்தாகும் மற்றும் வருடத்திற்கு ஒரு ஏக்கருக்கு 50 முதல் 75 கிலோ வளிமண்டல தழைச்சத்தை நிவர்த்தி செய்கிறது. தற்சமயம் பயிரில் வாழும் பாக்டீரியம் (குலுகன்அசிடோபேக்டர் டைஅசோட்ராபிகஸ்) கரும்பில் அசோஸ்பைரில்லமை விட அதிகமாக தழைச்சத்தை நிலை நிறுத்துகிறது. இவை கரும்பு பயிர் முழுவதிற்கும் தழைச்சத்தை எடுத்துச் செல்கிறது மற்றும் தழைச்சத்தின் அளவை அதிகரிக்கிறது. மண்ணில் பாஸ்பேட், இரும்பு மற்றும் துத்தநாக சத்தை வேர் வரை கொண்டு செல்கிறது. இது பயிர் வளர்ச்சியை அதிகரிக்கிறது மற்றும் கரும்பின் மகசூலையும் சாறில் இனிப்புத் தன்மையையும் அதிகரிக்கிறது. இது அசோஸ்பைரில்லத்தைவிட அதிக செயல்திறன் வாய்ந்தது. த.வே.ப.கழக பயோபெர்ட் -1 பாஸ்போபாக்டீரியாவை பாஸ்பரஸ் கரைப்பானாக கரும்பு பயிருக்கு பரிந்துரைக்கப்படுகிறது.குலுகன்அசிடோபேக்டர் டைஅசோட்ராபிகஸ் கொண்டு கரணை நேர்த்தி செய்தல்கரணைகளை நடுவதற்கு முன் எக்டருக்கு 10 பாக்கெட் (2 கிலோ)குலுகன்அசிடோபேக்டர் டைஅசோட்ராபிகஸை 250 லிட்டர் தண்ணீரில் கலந்து நேர்த்தி செய்ய வேண்டும். குலுகன்அசிடோபேக்டர் டைஅசோட்ராபிகஸ் கொண்டு அடியுரமிடுதல் எக்டருக்கு 12 பாக்கெட் (2.4 கிலோ) விதைத்த 30, 50 மற்றும் 90-ம் நாள் நீர்ப்பாய்ச்சிய நிலையில் அடியுரமாக அளிக்க வேண்டும்.அதே முறையில் பாஸ்போ பாக்டீரியா அளித்தல்அடியுரம் இடாவிட்டால் அதே முறையில் விதைத்த 30, 50 மற்றும் 90-ம் நாள் நீர்ப்பாய்ச்சிய நிலையில் அடியுரமாக அளிக்க வேண்டும்.நுண்ணுயிர் நேர்த்தி நடவிற்கு சற்று முன்பு அளிக்க வேண்டும். நுண்ணுயிர் உரம் அளித்தவுடன் நடவு செய்து நீர்ப்பாய்ச்ச வேண்டும்.நுண்ணுயிர் உரத்தை இரசாயன உரத்துடன் கலக்க வேண்டாம்.பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்தை 25% குறைப்பதன் மூலம் நுண்ணுயிர் உரம் அளித்ததன் பலனை அடையலாம்.13.நீர் நிர்வாகம்கரும்புப் பயிருக்கு அதன் வளர்ச்சிப் பருவங்களுக்கு ஏற்ப நீர் பாய்ச்சுதல் வேண்டும்முளைப்புப் பருவம் (0-35 நாட்கள்)கரும்புப் பயிருக்கு அதன் முளைப்புப் பருவத்தில் குறைந்தபட்சமாக 2 முதல் 3 செ.மீ. ஆழத்திற்கு குறுகிய இடைவெளியில் நீர் பாய்ச்சுதல் மணல்சாரி இடங்களில் கரும்பின் முளைப்புத் திறனை மேம்படுத்தும். தெளிப்பு நீர்ப்பாசனம் பயிரின் முளைப்பு கால வளர்ச்சிப் பருவத்திற்கு ஏற்றதாகும். பின்னர் கிளைப்பு, வளர்ச்சி மற்றும் முதிர்ச்சிப் பருவத்தில் முறையே 0.75, 0.75 மற்றும் 0.50 பாசன நீர் மொத்த ஆவியாகுதல் (IW/CPE) விகிதத்தில் நீர் பாய்ச்சிட வேண்டும்பருவம்நீர்ப்பாசன இடைவெளிமணல் நிலம்களிமண்கிளைப்புப் பருவம் (36 முதல் 100 நாட்கள்)810வளர்ச்சிப் பருவம் (101 முதல் 270 நாட்கள்810முதிர்ச்சி பருவம் (271 நாட்கள் முதல் அறுவடை வரை) 1014சொட்டு நீர்ப்பாசனம்6 முதல் 7 மாத கரும்பு நாற்றங்காலிலிருந்து தேர்வு செய்யப்பட்ட விதைக்கரணைகளை 30 × 30 × 30 / 150 செ.மீ என்ற இடைவெளியில் இரு வரிசை பாரில் நடவு செய்யவும்ஒரு வரிசையில் மீட்டர் ஒன்றிற்கு எட்டு கரணைகளை வரப்பின் இரண்டு பக்கத்திலும் நடுவதன் மூலம் வாய்க்கால் நடவு முறையை அமைக்கலாம்.12 மிமீ அகல சொட்டு நீர்ப்பாசன பக்கவாட்டு குழாய்களை நடவு சால்மேட்டின் மத்தியில் இருபக்கவாட்டு குழாய்களுக்கான இடைவெளி 240 செ.மீ. இருக்கும் விதத்தில் அமைக்க வேண்டும். இந்த பக்கவாட்டு குழாய்களிலிருந்து 75 செ.மீ. இடைவெளியில் ஒரு மணி நேரத்திற்கு 8 லிட்டர் பாசன சொட்டு நீர் வெளியாகும் விதமாக வடிவமைக்க வேண்டும். பக்கவாட்டு குழாய்களின் நீளம் 30 லிருந்து 40 மீட்டர்க்கு மேல் போகாமல் இருக்க வேண்டும்62.5 கி/ எக் என்ற அளவில் மணிச்சத்தினை அடியுரமாக நடவிற்கு முன்னர்இடவேண்டும்தழை மற்றும் சாம்பல் சத்தினை முறையே 275 1125 கி/ எக். என்ற அளவில் சொட்டு நீர்க் குழாய்களின் வழியே ’வென்ட்சூரி’ உபகரணம் கொண்டு 10 முதல் 12 பகுதியாக நடவு செய்த 15 முதல் 180 நாட்கள் வரை கொடுக்க வேண்டும்குறைந்த மற்றும் மிதமான ஊட்டச்சத்து வயல்களில் 50 சத தழை மற்றும் சாம்பல் சத்துக்களை அதிக அளவில் இட வேண்டும்தண்ணீரானது மண் மற்றும் பயிரிலிருந்து ஆவியாக வெளியேறுதலைப் பொருத்து கரும்பிற்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை சொட்டு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும் நிலத்தடியில் 120+40 செ.மீ பக்கவாட்டு இடைவெளியில் கரும்பை இரண்டு புறமும் நடவு செய்ய வேண்டும். சொட்டு நீர் பாசன உரமிடுதல் மகசூலை அதிகரிக்கும்பரிந்துரைக்கப்பட்ட 125 % தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தை (275:63:112..5 கிலோ/எக்டர்) குழி வழி முறை உரப்பாசனம் அளிப்பதன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம்.
எதிர்பாராசூழ்நிலைக்கேற்ற நிவாரணத் திட்டம்இடர்பாடான சூழ்நிலைகளில் படிப்படியாக சால்களை அகலப்படுத்துதல்நடவு சமயத்தில் 30 செ.மீ. அகலத்தில் நீர்ப்பாசனம் வாய்க்கால் அமைத்து பின்னர் அதனை 45 செ.மீ. அளவிற்கு நடவு செய்த 45ம் நாள் முதல் மண் அணைக்கும்போது அகலப்படுத்தி மேலும் 90ம் நாள் மேற்கொள்ளும் ஆழப்படுத்துவதின் மூலம் 35 சதவிகிதத் தண்ணீரினைச் சேமிக்கலாம்வறட்சி நிர்வாகம்கரும்பு விதைக்கரணைகளை 80 கிலோ நீர்த்த சுண்ணாம்புடன் 400 லிட்டர் தண்ணீர் கலந்த கலவையில் 1மணி நேரம் ஊறவைத்தல்30 செ.மீ. ஆழமான நடவு சால்களில் கரணைகளை நடவு செய்தல்பொட்டாஷ் மற்றும் யூரியா 2.5 சத சரைசலை வறட்சி காலங்களில் 15 நாட்கள் இடைவெளியில் தெளித்தல்6 சத கயோலின் (60 கிராம் கயோலின் 1 லிட்டர் தண்ணீருக்கு) தெளித்து நீர்த்தேவையினைக் குறைத்தல்தண்ணீர் தட்டுப்பாடான பகுதியில் மாறுசால் அல்லது விடுசால் பாசனம் நன்மைக்குறியதாகும்நடவு செய்த 120ம் நாள் கூடுதலாக 125 கி பொட்டாஷ்/ எக் என்ற அளவில் இட வேண்டும்கடைசி உழவின் பொழுது தென்னை நார்க்கழிவு 25 டன்/ எக் என்ற அளவில் இடுதல்காய்ந்த சோகைகளை 5வது மாதம் உரித்து கரும்பு வரிசைக்கு இடையே பரப்புதல்வறட்சி மேலாண்மைநீர் பற்றாக்குறையை சரிகட்ட எத்தரல் 200 பி.பி.எம். அல்லது சுண்ணாம்புக் கரைசல் (80 கிலோ சுண்ணாம்பை 400 லிட்டர் நீரில் கரைத்து கிடைக்கும் கரைசல்) போன்றவற்றில் விதைக்க கரணைகளை ஒரு மணி நேரம் நனைத்து வைத்திருந்த 30 செ.மீ. ஆழத்தில் நடவு செய்ய வேண்டும். பின்பு நீர் பற்றாக்குறை காலங்களில் பொட்டாஷ் மற்றும் யூரியா 2.5 சதவிகித கரைசல் ஒவ்வொன்றையும் 15 லிட்டர் நீரில் கரைத்து கிடைக்கும் கரைசல்) கரைசலை தெளிப்புச் செய்ய வேண்டும். நீர்ப்பற்றாக்குறையான சூழ்நிலைகளில் மாற்று சால் மற்றும் சால் விட்டு சால் பாசன முறைகளைக் கையாளுவது நன்மை பயப்பனவாக அமைகிறது.14. அறுவடை முன் நேர்த்திகள்அ.கரும்பு முதிர்ச்சி ஊக்கி தெளித்தல்சோடியம் மெட்டா சிலிகேட் 4 கிலோ / எக் என்ற அளவில் 750 லிட்டர் தண்ணீர் கலந்து கரும்பு நடவு செய்த 6ம் மாதம் தெளிக்க வேண்டும். பின்னர் அதே இரசாயனத்தை 8 மற்றும் 10வது மாதத்தில் இருமுறை தெளிப்பதன் மூலம் கரும்பு மகசூல் மற்றும் சர்க்கரை கட்டுமானத்தை அதிகரிக்கலாம்.ஆ.கரும்பின் முதிர்ச்சி அறிதல்கரும்பின் முதிர்ச்சியை பிரிக்ஸ் மீட்டர் என்ற கருவியின் மூலம் அறியலாம். 18 முதல் 20 சத பிரிக்ஸ் அளவு கரும்பின் முதிர்ச்சியை குறிக்கும். கரும்பின் நுனி மற்றும் கீழ் பகுதி பிரிக்ஸ் அளவு 11 விகித அளவில் இருத்தல் வேண்டும்.15. அறுவடைமுன்பட்ட கரும்பு இரகங்களை 10 முதல் 11 மாதத்திற்குள்ளும் பின்பட்ட இரகங்களை 11 முதல் 12 மாதத்திற்குள்ளும் அறுவடை செய்ய வேண்டும்கரும்பினை அதன் உச்ச கட்ட முதிர்ச்சி காலத்தில் அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்யும்போது நடவுப் பயிராக இருந்தாலும் அல்லது மறுதாம்புப் பயிராக இருந்தாலும் தரையோடு தரையாக பூமி மட்டத்திற்கு அறுவடை செய்ய வேண்டும்மறுதாம்பு பயிர்1.நடவு கரும்பின் அறுவடைக்கு பின் செய்ய வேண்டியவைகரும்பு அறுவடைக்குப் பின் கீழ்க்கண்ட செய் நேர்த்திகளை 10 நாட்களுக்குள் முடிப்பதன் மூலமாக கட்டை கரும்பின் துளிர்ப்பு மற்றும் வளர்ச்சி சீராக அமையும் கரும்பு தோகைகளை வயலில் இருந்து வெளியே எடுத்துவிட வேண்டும்.தோகைகளை எரித்தல் கூடாது.மண் நிறைக்க நீர்ப்பாசனம் செய்யவும் நல்ல ஈரப்பதத்தில் கூரிய மண்வெட்டி கொண்டு மண் மட்டத்திற்கு கீழ் 4-6 செ.மீ. அளவிற்கு கரும்பு கட்டையை சீவ வேண்டும். கூப்பர் கலப்பை கொண்டு கரும்பு பயிரின் இரு கரைகளையும் உடைத்துவிட வேண்டும். கட்டைக் கரும்பின் போக்கிடங்களை கட்டை சீவிய 30 நாட்களுக்குள் நிரப்ப வேண்டும். இதற்கு அதே நிலத்தில் இருந்து எடுக்கப்பட்ட கரும்பு குத்துக்களை பிரித்து நடவு செய்யலாம். அல்லது பாலித்தீன் பை நாற்றுகளைக் கொண்டும் போக்கிடங்களை நிரப்பலாம். நடவு பயிருக்கு பரிந்துரை செய்யப்படும் அதே அளவில் அங்கக உரம் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரத்தினை இடுதல் வேண்டும்மறுதாம்புப் பயிர் நிர்வாகம்ஐஐ.பயிர் நிர்வாகம்25 சத அதிகப்படியான தழைச்சத்தினை கட்டைவிட்ட 5-7 நாட்களில் அளித்தல்பயிர் இரும்புசத்து பற்றாக்குறையால் மஞ்சளாக மாறும் போது அன்னபேதி உப்பினை 2.5 கி/எக் என்ற அளவில் கட்டைவிட்ட 15ம் நாள் தெளித்தல் பயிர் மீண்டும் மஞ்சளாக இருந்தால்15 நாள் இடைவெளியில் திரும்பவும் தெளிக்க வேண்டும். கடைசி தெளிப்பபுடன் எக்டருக்கு 2.5 கிலோ யூரியாவையும் சேர்த்துக்கொள்ளலாம்கட்டைவிட்ட 20வது 40வது மற்றும் 60வது நாளில் களையெடுத்தல்முதல் மேலுரத்தினை 25ம்நாளும், 2வது மேலுரத்தினை 45 முதல் 50 நாட்களுக்குள் இடுதல்இறுதி மேலுரத்தினை 70-75 நாட்களுக்குள் இட வேண்டும்கட்டைவிட்ட 50 வது நாளில் பகுதி மண் அணைத்தல்90வது நாள் கடைசி மண் அணைத்தல்120வது மற்றும் 180வது நாள் தோகை உரித்தல்180 வது நாள் விட்டம் கட்டுதல்11 மாதத்திற்கு பிறகு அறுவடை செய்தல்ஊ. கரும்பு விதை (நாற்றங்கால் பயிர்)கரும்பு நடவு பயிர் பயிரிடுவதற்கு 6 முதல் 7 மாதத்திற்கு முன்னர் கரும்பு விதை நாற்றங்கால் நடவு செய்ய வேண்டும்.
விதை நாற்றங்கால் சாகுபடியில் கவனிக்க வேண்டியவைதோகை உரித்தல் கூடாதுவிட்டம் கட்டுதல் கூடாது6 முதல் 7 மாதத்தில் அறுவடைகரணை தயார் செய்யும் பொழுது காய்ந்த சோகைகளை கைகளால் நீக்க வேண்டும்பரு அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்விதைக்கரும்பினை மற்ற இடங்களுக்கு எடுத்து செல்ல வேண்டும் என்றால் முழு கரும்பாகவும் தோகை நீக்காமலும் இருக்க வேண்டும்50 கிலோ யூரியாவை மேலுரமாக விதை கரும்பு அறுவடைக்கு ஒரு மாதம் முன்னர் இடுதல் அவசியம்நோய், பூச்சிதாக்குதல் இன்றி பராமரிக்க வேண்டும்பயிர் வினையியல்எக்டருக்கு 1.0, 1.5 மற்றும் 2 கிலோ த,வே.ப.கழக கரும்பு பூஸ்டரை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து விதைத்த 45, 60 மற்றும் 75-ம் நாள் அளிப்பதன் மூலம் கரும்பின் வளர்ச்சி மற்றும் எடையை அதிகரிக்கலாம். கணுவின் நீளம், கரும்பு மகசூல் மற்றும் இனிப்புத் தன்மையை அதிகரிக்கிறது மற்றும் வறட்சியை தாங்கும் தன்மையை அளிக்கிறது.
சாகுபடி உத்திகள் கரும்பு பருவம் மற்றும் இரகங்கள்தமிழ்நாட்டில் கரும்பு பொதுவாக டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரை மூன்று பட்டங்களில் அதிகமாக நடவு செய்யப்படுகின்றது. இது தவிர திருச்சி, பெரம்பலூர், கரூர், சேலம், நாமக்கல் மற்றும் கோவை மாவட்டங்களில் ஜீன் முதல் செப்டம்பர் மாதம் வரை தனிப்பட்டமாக கரும்பு நடவு செய்யப்படுகிறது. பருவத்திற்கு ஏற்ப பட்டங்கள் பின்வருமாறு பிரிக்கப்படுகிறது.முன்பட்டம் - டிசம்பர் - ஜனவரிநடுப்பட்டம் - பிப்ரவரி - மார்ச்பின்பட்டம் - ஏப்ரல் - மேதனிப்பட்டம் - ஜீன் - ஜீலைமுன்பட்டத்திற்கு ஏற்ற இரகங்கள் தனிப்பட்டத்திற்கும் உகந்தவையாகும்
கரும்பு நடவு வயல் தயாரிப்பு1. நடவு வயல் தயாரிப்பு
அ.களிமண்நிலம்பொதுவாக களி மண் வயல்களில் நல்ல பொலபொலப்புத் தன்மை பெறும் வகையில் உழவு மேற்கொள்ள முடிவதில்லைநெல் அறுவடைக்குப் பிறகு வயலின் குறுக்காகவும் வயலைச் சுற்றியும் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் பாத்திகள் 6 மீட்டர் இடைவெளியில் 40 செ.மீ.ஆழம் மற்றும் 30 செ.மீ. அகலத்தில் அமைத்திட வேண்டும்நடவு சால் மற்றும் சால் மேடுகள் 80 செ.மீ. இடைவெளியில் மண்வெட்டி கொண்டு அமைத்திட வேண்டும்நடவு சாலினை 4 முதல் 5 நாட்கள் வரையிலும் களைகொத்தி கொண்டு கிளறி விடுதல் வேண்டும்அதிக தண்ணீர் தேங்கி பிரச்சினையாகும் நிலங்கள்அதிகமாக தண்ணீர் தேங்கி நின்று மற்றும் அதனை வடித்து வெளியேற்ற முடியாத வயல்களில் 30 செ.மீ.இடைவெளியில் 5 மீட்டர் நீளம், 80 செ.மீ. அகலம் மற்றும் 15 செ.மீ. உயரம் கொண்ட மேட்டுப் பாத்திகள் அமைத்திட வேண்டும்.உ.இருமண் மற்றும் மணல்சாரி தோட்டக்கலை நிலங்கள்ஆரம்பத்தில் இரண்டு தட்டு கலப்பை கொண்டு உழ வேண்டும். தொடர்ந்து எட்டு தட்டு கலப்பை கொண்டு உழ வேண்டும் மற்றும் உழும் கருவி பயன்படுத்தி ஆழ உழ வேண்டும். தொடர்ந்து ஒரு முறை சுழல் கலப்பை கொண்டு மண்ணை பொலபொலப்பாக்கி பண்படுத்துவதன் மூலம் களை மற்றும் பயிர்தூர் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.சீரான முறையில் நீர்ப்பாசனம் செய்திட நிலத்தினை நன்கு சமன்படுத்த வேண்டும்நடவு சால் மற்றும் சால் மேடுகள் 80 செ.மீ. இடைவெளியில் விக்டரி அல்லது பார் அமைக்கும் கலப்பை கொண்டு அமைக்க வேண்டும். நடவு சால்கள் 20 செ.மீ. ஆழம் உடையதாக இருத்தல் வேண்டும்நீர்ப்பாசன வாய்க்கால்கள் 10 மீட்டர் இடைவெளியில் இருத்தல் வேண்டும்2. அடியுரமாக அங்கக உரங்கள் இடுதல்தோட்டக்கால் நிலங்களில் கடைசி உழவிற்கு முன்னதாக தொழுஉரம் 12.5 டன்/ எக்(ஆழ் குப்பை உரம் 25 டன்/ எக்(அ) ஆலை அழுக்கு 37.5 டன்/ எக் என்ற அளவில் இட வேண்டும். களி மண் நிலங்களில் மேற்கண்ட அங்கக உரங்களை நடவு சால்களில் இட்டு நன்கு கலந்து விடவேண்டும்.கரும்புத் தோகை மற்றும் ஆலை அழுக்கு கொண்டு ஊட்டமேற்றிய குப்பை எரு தயாரித்தல்காய்ந்த கரும்புத் தோகையை 15 செ.மீ. உயரத்திற்கு சுமார் 7 மீட்டர் நீளம் மற்றும் 3 மீட்டர் அகலப் பாத்திகளாக பரப்பவும். அதற்கு மேல் 5 செ.மீ. உயரத்திற்கு கரும்பு ஆலை அழுக்கினை பரப்பி விடுதல் வேண்டும். மசூரி ராக் பாஸ்பேட், ஜிப்சம் மற்றும் யூரியா உரங்களை முறையே 2:2:1 என்ற விகிதாச்சாரத்தில் கலந்து தோகை மற்றும் ஆலை அழுக்கு அடுக்கின் மீது 100 கிலோ தோகைக்கு 5 கிலோ உரக்கலவை என்ற விகிதத்தில் பரவலாகத் தூவி விட வேண்டும். பின்னர் அடுக்கு முழுவதும் நன்கு நனையும் வண்ணம் தண்ணீர் தெளிக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள இடுபொருள்கள். ஒவ்வொன்றையும் அதே அளவில் மற்றும் அதே முறையில் திரும்பவும் கொடுத்து கடைசியாக அடுக்கின் மொத்த உயரம் 1.5 மீட்டர் அளவு வருமாறு செய்ய வேண்டும். தண்ணீர் தெளிப்பதற்கு பதிலாக கிடைக்கும் இடங்களில் தொழு உரக் கரைசல் பயன்படுத்தலாம். பின்னர் அடுக்கு முழுவதையும் மண் மற்றும் ஆலை அழுக்கு முறையே 11 என்ற விகித அளவில் கலந்த கலவை கொண்டு 15 செ.மீ. உயர அளவிற்கு மூடி விட வேண்டும். இவ்வடுக்கினை மூன்று மாதத்திற்கு மக்குவதற்காக அப்படியே விட்டுவிடவேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை அடுக்கு முழுவதும் நனையும் வண்ணம் நீர் தெளிக்க வேண்டும். மூன்று மாதமானதும் அடுக்கினை புரட்டி பின்னர் நன்கு கலந்து விட்டு ஒரு மாதத்திற்கு அப்படியே விட வேண்டும். நான்காவது மாத முடிவில் மறுபடியும் புரட்டி விட்டு பின் கலந்து 5வது மாத முடிவு வரை 15 நாள் இடைவெளியில் தண்ணீர் தெளிக்க வெண்டும். இம்முறையில் தயாரிக்கப்படும் கரும்புத்தோகை கம்போஸ்டில் தழை, மணி மற்றும் கால்சியம் சத்துக்களின் அளவு அதிகமாக இருப்பதோடு கரிமம் மற்றும் தழைச்சத்தின் விகிதாச்சாரம் கரும்புத் தோகையின் அளவை விட 10 மடங்கு குறைவாக இருக்கும்.
அடியுரமாக இரசாயன உரங்கள் இடுதல்மண் பரிசோதனை செய்யப்படவில்லையெனில் பொதுப்பரிந்துரையாக தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து முறையே எக்டருக்கு 300:100:200 கிகி அளிக்க வேண்டும். சூப்பர் பாஸ்பேட் (625 கிகி/எக்டர்) மண்வெட்டி கொண்டு அளிக்க வேண்டும். துத்தநாக சத்து மற்றும் இரும்புச்சத்துக் குறைபாடு உள்ள வயல்களில் முறையே 37.5 கிலோ/எக் துத்தநாக சல்பேட் மற்றும் 100 கிலோ/எக் பெரஸ் சல்பேட் இடுதல் வேண்டும். கந்தக பற்றாக்குறையுள்ள மணலில் ஜிப்சம் வடிவில் கந்தகத்தை எக்டருக்கு 500 கிகி அளிப்பதன் மூலம் கரும்பு விளைச்சல் மற்றும் சாறின் தரத்தை உயர்த்தலாம்.ஐ.ஏ.நடவு வயல் பராமரிப்பு1.கரும்பு நடவிற்கு விதைக்கரணை தயாரித்தல்விதைக்கரணைகளை, நோய் மற்றும் பூச்சிகள் தாக்காத 6 முதல் 7 மாதமுடைய விதை நாற்றங்காலிலிருந்து தேர்வு செய்ய வேண்டும்விதைக்கரணைகளில் ஒட்டியிருக்கும் காய்ந்த தோகைகளை ஆட்கள் கொண்டு கைகளால் நீக்க வேண்டும்பிளவு இல்லாத விதை கரணைகளை பெற கூர்மையான கத்தி அல்லது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கரணை வெட்டும் இயந்திரம் பயன்படுத்த வேண்டும்.விதைக்கரணைகள் பக்கவாட்டில் விளந்து விடாமல் இருக்க கூரிய கத்தி கொண்டு தயார் செய்திடல் வேண்டும்அடிப்பட்ட பருக்கள், பருக்கள் முளைத்த மற்றும் பிளவுபட்ட விதைக்கரணைகளை நீக்கி விட வேண்டும்அசோஸ்பைரில்லம்
விதை நேர்த்தி:
நடவுக்கு முன்னர் 10 பொட்டலங்கள் (2 கிலோ/எக்) அஸோஸ்பைரில்லம் நுண்ணுயிருடன் தேவையான அளவு நீர் கலந்து அக்கலவையில் கரும்பு விதைக்கரணைகளை 15 நிமிடம் வரையில் நனைத்து பின் நடவு செய்ய வேண்டும்2. கரணை நேர்த்திஆரோக்கியமான கரணைகளைத் தேர்வு செய்திடவேண்டும்கரணைகளை 100 லிட்டர் தண்ணீரில் 50கி கார்பன்டிசம், 200மிலி மாலதியான் மற்றும் 1கிகி யூரியா கலந்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.கரணைகளை புல்தண்டு நோயிலிருந்து பாதுகாத்திட 1 மணி நேரத்திற்கு 50 டிகிரி சென்டிகிரேட் என்ற அளவில் வெப்ப நீராவி நேர்த்தி செய்திட வேண்டும்
.கரணை அளவு : 75,000 இரு பரு கரணைகள் எக்டருக்கு
கரும்பு நடவு முறையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள்இயந்திர முறை நடவுதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இயந்திர நடவு கருவி எக்டருக்கு ரூ.3750/- சேமிக்க உதவுகிறது மற்றும் நாள் ஒன்றிற்கு 1.5 எக்டர் பரப்பளவு நடவு செய்கிறது.மனித ஆற்றலைக் குறைக்கிறது மற்றும் விதை அளவு எக்டருக்கு 5 டன்னாக குறைக்கிறது.இணைவரிசை நடவுமுறையில் இரண்டு புறமும் கரணைகளை 150 + 30 செ.மீ இடைவெளியில் அஸ்ட்ராப் 8000 வகை (அறுவடை இயந்திரம்) கொண்டு அறுவடை செய்யுமாறு நட வேண்டும் மற்றும் 150 + 30 செ.மீ இடைவெளியில் நியூ ஹாலண்ட் 4000 வகை அறுவடை இயந்திரம் கொண்டு அறுவடை செய்யுமாறு ஒரு வரிசையில் நடவு செய்ய வேண்டும்.நிலத்தடி சொட்டு நீர் பாசன முறையில் கரும்பை பயிர் செய்யும்போது சொட்டு நீர் குழாய்களை 20 செ.மீ ஆழத்தில் வாய்க்காலில் பதிக்க வேண்டும் மற்றும் விதை கரணைகளை சொட்டு நீர் குழாய்க்கு 5 செ.மீ மேல் இருக்குமாறு பதிக்க வேண்டும்.செம்மை கரும்பு சாகுபடியில் 25-35 நாட்கள் வளர்ந்த நாற்றுகளை 5x2 அடி இடைவெளியில் விளைநிலத்தில் நட்டு சொட்டு நீர் பாசனம் அமைக்க வேண்டும்.பரந்த இடைவெளி கரும்பு சாகுபடியில் ஊடுபயிராக தக்கைப் பூண்டு மற்றும் சணப்பை பயிரிடுவதன் மூலம் மண் வளம் மேம்படும் மற்றும் களைகளை கட்டுபடுத்தலாம். இது இளங்குருத்துப் புழு நோய் நிகழ்வைக் குறைக்கிறது மற்றும் கரும்பு விளைச்சல் அதிகரிக்கிறது.கடின மண்ணில் வரப்பில் கரணைகளை 80 செ.மீ இடைவெளியில் நடுவதன் மூலம் கரணை அழுகல்நோயை தவிர்க்கலாம் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.நடவு செய்த மூன்று நாட்களுக்குள் வரப்பின் எதிர் திசையில்10 செ.மீ இடைவெளியில் ரைசோபிம் கொண்டு விதை நேர்த்தி செய்யப்பட்ட பசுந்தாள் விதைகளை எக்டருக்கு 10 கிலோ அளவு விதைக்க வேண்டும்.அதிக இடைவெளியுள்ள பயிர்களில் நடவு செய்த 50-60 நாட்களில் பசுந்தாளை உழுதுவிட வேண்டும் மற்றும் நடவு செய்த 90-100 வது நாளில் பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்துடன் மண் அணைக்க வேண்டும்.சுழல் கலப்பை பொருத்திய எந்திரக் களையெடுக்கும் கருவியை கொண்டு களை எடுக்க வேண்டும் மற்றும் சால் அமைக்கும் கருவி கொண்டு மண் அணைப்பதன் மூலம் ஆட்கள் செலவை சேமிக்கிறது மற்றும் தொழிலாளர் வேலைபளுவைக் குறைக்கிறது. நான்கு அடி வரிசை. ஒவ்வொரு வரிசையிலும் இரண்டு வரி நடவு. மண்ணின் வளத்தை அதிகரிக்க ஊடுபயிராக தக்கைப் பூண்டு/ சணப்பை நடவு செய்ய வேண்டும். இது மேலும் இளங்குருத்துப் புழு நோய் நிகழ்வைக் குறைக்கிறது மற்றும் விளைச்சலை அதிகரிக்கிறது. கரணைகளை வரப்பின் ஒரு பக்கத்தில் நடவு செய்ய வேண்டும். வரப்பின் எதிர் புறத்தில் 10 செ.மீ உயரம் கொண்ட வரப்பில் ரைசோபியம் விதை நேர்த்தி செய்யப்பட்ட பசுந்தாள் விதைகளை 10 கிலோ/ எக்டர் விதைக்க வேண்டும்.நடவு செய்த 50-60 நாட்களுக்குப் பிறகு பசுந்தாள் உரத்தை அளிக்க வேண்டும் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்து கொண்டு பகுதி மண் அணைத்தல் வேண்டும்.களையெடுக்கும் கருவி கொண்டு களையெடுக்க வேண்டும் மற்றும் மண் அணைத்தல் மூலம் பணியாளர்கள் கூலி செலவைக் குறைக்கிறது மற்றும் மனித வேலைபளுவைக் குறைக்கிறது.
போக்கிடங்களை நிரப்புதல்வயலில் போக்கிடங்கள் இருந்தால் நடவு செய்த 30 நாட்களுக்குள் முளைத்த கரணைகளைக் கொண்டு நடவு செய்திட வேண்டும்இரண்டு பதியம் கரணைகளைக் கொண்டு சந்து நிரப்புதல் வேண்டும்/ 15-20 நாட்களான பாலித்தீன் பை நாற்றுகளை நடவு செய்வதன் மூலம் பயிர் நன்றாக வளரும்.போக்கிடங்களில் நடவு செய்த பிறகு மூன்று வாரங்கள் வரையிலும் வயலில் தேவையான ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்வது கரணைகள் நன்கு முளைத்து வளர ஏதுவாகும்.
தோகை பரப்புதல்சால்மேடுகளில் காய்ந்த கரும்புத் தோகையை சீராக 10 செ.மீ உயரத்திற்கு நடவு செய்த ஒரு வாரத்திற்குள் பரப்புதல் வேண்டும். இதனால் வறட்சி காலங்களில் கரும்பு தாக்குப்பிடித்து வளர்வதற்கும் கரும்பின் நீர் தேவை குறைவதற்கும், களைச் செடிகளின் ஆதிக்கம் குறைவதற்கும் மற்றும் இளங்குருத்துப் புழுவின் தாக்குதல் குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது. களிமண் வகைகளில் தோகைபரப்புதலைநடவு செய்த 21 நாட்களுக்குப பிறகு செய்திட வேண்டும். கரையான் தொல்லை அதிகம் உள்ள இடங்களில் தோகை பரப்புதலை செய்யாமல் இருத்தல் நன்று
.ஊடுபயிர் சாகுபடிதண்ணீர் தட்டுப்பாட்டு அற்ற பகுதிகளில் சோயா மொச்சை அல்லது உளுந்து அல்லது பச்சைப்பயறு போன்ற பயிர்களை கரும்பு நடவுசால் மேடுகளின் நடுவில் ஒரு வரிசையில் விதைக்கலாம். கொளுஞ்சி அல்லது சணப்பை ஊடுபயிராக நடவுசால் மேடுகளில் விதைத்த 45ம் நாள் பிடுங்கி கரும்பு வரிசைக்கு அருகே வைத்து மண் அணைப்பதின் மூலமாக மண்ணின் சத்துக்கள் அதிகரிப்பதோடு கரும்பில் அதிக மகசூல் அடையலாம். மேலும் கோ1 என்ற சோயா மொச்சை ஊடுபயிர் செய்வதின் மூலம் கரும்பின் மகசூல் குறையாமல் சோயா மொச்சையிலிருந்து ஒரு எக்டரக்கு 800 கிலோ வரையில் மகசூல் எடுக்கலாம்
களை நிர்வாகம்களை அதிகமாக உள்ள இடத்தில் பயிர் வரிசையில் ஒரு வரி களையெடுக்க வேண்டும் மற்றும் விதைத்த 30,60 மற்றும் 90ம் நாட்களில் மண்வெட்டி கொண்டு வரப்புகளில் களையெடுக்க வேண்டும். அட்ராஜின் 2கிலோ தெளிக்கவும் அல்லது எக்டருக்கு 750மிலி ஆக்ஸிப்ளுர்ஃபென் 600 லிட்டர் தண்ணீரில் கலந்து முளைக்குமுன் களைக்கொல்லியாக நடவு செய்த 3ம் நாளில் விசிறி வடிவ குழாய் கொண்ட நேப்சாக் தெளிப்பான் கொண்டு தெளிக்கவும்.விதைத்த 3-ம் நாள் களை முளைப்பதற்கு முன் அட்ராஜின் எக்டருக்கு 1.0 கிலோ அளிக்கவும். தொடர்ந்து விதைத்த 45-ம் நாள் களை முளைத்தபின் கிளைபோசேட் எக்டருக்கு 1.0 லிட்டர் அளிக்கவும். விதைத்த 90-ம் நாள் கைக்களை எடுக்க வேண்டும். களை முளைப்பதற்கு முன் களைக்கொல்லி தெளிக்கப்படவில்லையெனில், களை முளைத்த பின் விதைத்த 21-ம் நாளில் கிராமசோன் லிட்டர் + 2,4-D சோடியம் உப்பு எக்டருக்கு 2.5 கிலோ 600 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.ஒட்டுண்ணிக் களைகள் பிரச்சனை இருப்பின் களை முளைத்த பின் 2,4-D சோடியம் உப்பு எக்டருக்கு ஒரு கிலோ 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும். அருகில் பருத்தி அல்லது வெண்டை செடி இருந்தால் 2,4-D தெளிப்பதை தவிர்க்கவும். 20% யூரியாவை நேரடியாக அளிப்பதன் மூலம் சுடு மல்லியை கட்டுப்படுத்தலாம்.நடவுக்கு முன்னர் தெளிப்பாக விதைப்பதற்கு 21 நாட்கள் முன்னர் கிளைபோசேட் 2.0 கிலோவை அமோனியம் சல்பேட் 2% கலந்து அளிக்க வேண்டும்.தொடர்ந்து களை முளைத்த பின்ளர் கிளைபோசேட் 2.0 கிலோவை அமோனியம் சல்பேட் 2% கலந்து விதைத்த 30-ம் நாள் அளிக்க வேண்டும். இதன் மூலம் கோரைபுற்களை கட்டுப்படுத்தலாம். களை இல்லாத சூழலை உருவாக்கலாம்.களைக் கொல்லிகள் வேலை செய்யாவிட்டால் சிறிய மண்வெட்டி கொண்டு வரப்புகளில் நடவு செய்த 25, 55 மற்றும் 85-ம் நாளில் களையெடுக்க வேண்டும். வாய்க்காலில் கைக்கொத்து கொண்டு களைகளை நீக்க வேண்டும்.களை முளைத்த பின் நேரடி தெளிப்பாக ஃபெர்னோசோன் (2, 4 –D சோடியம் உப்பு) 2கிராம் + 10 கிராம் யூரியா ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து படர் கொடி களைகளை அழிக்க தெளிக்கலாம்.
மேலுரமிடுதல்மண்ணில் இடுதல்தண்ணீர் பற்றாக்குறை இல்லாத இடங்களில் 275 கிலோ தழைச்சத்து மற்றும் 112.5 கிலோ சாம்பல் சத்து/ எக் என்ற அளவில் மூன்று சம பாகங்களாகப் பிரித்து கரும்பு நடவு செய்த 30, 60 மற்றும் 90ம் நாள் இடுதல் வேண்டும்கிணற்றுப் பாசனமுடைய பகுதிகளில் 225 கிலோ தழைச்சத்து மற்றும் 112.5 கிலோ சாம்பல் சத்து/ எக் என்ற அளவில் மூன்று சம பாகங்களாகப் பிரித்து கரும்பு நடவு செய்த 30, 60 மற்றும் 90ம் நாள் இடுதல் வேண்டும்கிணற்றுப் பாசனமுடைய பகுதிகளில் 225 கிலோ தழைச்சத்து மற்றும் 112.5 கிலோ சாம்பல் சத்து/ எக் என்ற அளவினை மூன்று சம பாகங்களாகப் பிரித்து நடவு செய்த 30, 60 மற்றும் 90வது நாட்களில் இடுதல் வேண்டும். தழைச்சத்து சேமிப்புவேப்பம்புண்ணாக்கு கலந்த யூரியா67.5 கிலோ தழைச்சத்து/ எக் ரூ.27.5 கிலோ வேப்பம்புண்ணாக்கினை நடவு செய்த 30, 60 மற்றும் 90 நாட்களில் இட வேண்டும்குறிப்பு: வேப்பம்புண்ணாக்கு கலத்தல் தேவையான அளவு வேப்பம்புண்ணாக்கினைப் பொடி செய்து அதனை யூரியா உரத்துடன் நன்கு கலந்து 24 மணி நேரத்திற்கு வைத்து பின்னர் உபயோகிக்கலாம். இதன் மூலம் 75 கி தழைச்சத்து/எக் மிச்சமாகிறது.அசோஸ்பைரில்லம்12 பொட்டலம் (2400 கிராம்/ எக்) அசோஸ்பைரில்லம் அல்லது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நுண்ணுயிர் கலவை எண் 1 உடன் 25 கிலோ தொழு உரம் மற்றும் 25 கிலோ மண் கலந்து நடவு செய்த 30வது நாள் கரும்புப் பயிர் குத்துக்களுக்கு அருகே இட வேண்டும். இதே போல் கரும்பு நட்ட 60வது மற்றும் 90வது நாட்களில் இதே அளவில் இடுதல் வேண்டும். (கிணற்று நீர்ப்பாசனமுடைய இடங்களுக்கு)தொடராக இடுதல்கரும்புப் பயிர் வரிசைக்கு பக்கவாட்டில் களைக் கொத்தி கொண்டு சுமார் 5 செ.மீ. ஆழசால் அமைத்து அதில் உரங்களை தொடராக இட்டு பின்னர் மண் கொண்டு மூட வேண்டும்.ஆழ்துளை முறையில் இடுதல்255 கிலோ தழைச்சத்தினை யூரியா மற்றும் பொட்டாஷ் சேர்த்து15 செ.மீ. ஆழத்தில் கரும்புப் பயிரின் ஒவ்வொரு குத்துக்கு அருகே இடுவதன் மூலம் 20 கிலோ தழைச்சத்தினை கரும்பின் மகசூல் பாதிக்காத வகையில் சேமிக்கலாம்நுண்ணூட்டச்சத்து உரங்கள்:(a) துத்தநாக பற்றாக்குறையுள்ள மண்: அடியுரமாக எக்டருக்கு 37.5 கிலோ துத்தநாக சல்பேட் அளிக்கவும்.(b) கரும்பில் துத்தநாக பற்றாக்குறை அறிகுறிகள்: இலைத் தெளிப்பாக 0.5% துத்தநாக சல்பேட்டை 1% யூரியாவுடன் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் பற்றாக்குறை மறையும் வரை தெளிக்க வேண்டும். (a) இரும்பு பற்றாக்குறையுள்ள மண்: அடியுரமாக எக்டருக்கு 100 கிலோ ஃபொரோஸ் சலடபேட் அளிக்கவும்.(b) கரும்பில் இரும்பு பற்றாக்குறை அறிகுறிகள்: இலைத் தெளிப்பாக 1% ஃபொரோஸ் சலடபேட்டை 1% யூரியாவுடன் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் பற்றாக்குறை மறையும் வரை தெளிக்க வேண்டும்.தாமிர பற்றாக்குறையுள்ள மண்ணில் தாமிர சல்பேட்டை எக்டருக்கு 5 கிலோ மண் வழியாக அளிக்க வேண்டும். மாற்றாக இலைத் தெளிப்பாக 0.2% தாமிர சல்பேட்டை இரண்டு முறை பயிர் வளர்ச்சியின் ஆரம்பத்தில் அளிக்க வேண்டும்.பொதுவான நுண்ணூட்டச்சத்து கலவை: கரும்பிற்கு எக்டருக்கு 50 கிலோ நுண்ணூட்டச்சத்துக் கலவையை அளிக்க வேண்டும். நுண்ணூட்டச்சத்துக் கலவை 20 கிலோ ஃபெரோஸ் சல்பேட், 10 கிலோ மாங்கனீசு சல்பேட், 10 கிலோ துத்தநாக சல்பேட், 100 கிலோ மக்கிய தொழுவுரத்துடன் கலந்த 5 கிலோ போரக்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவை நடவிற்கு முன்னர் மண்ணில் அளிக்க பரிந்துரைக்கப்படுகிறது.(அல்லது) கரும்பின் மகசூலை அதிகரிக்க தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நுண்ணூட்டக் கலவையை எக்டருக்கு 50 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்கலாம்.நுண்ணூட்டச்சத்து மற்றும் பேரூட்டச்சத்தின் பரிந்துரைக்கப்பட்ட அளவு
பேரூட்டச்சத்து
கரும்பு – நடவு பயிர் (சர்க்கரை ஆலைக்காக உற்பத்தி செய்யப்படும் கரும்பு) எக்டருக்கு 300:100:200 கிலோ தழைச்சத்து , மணிச்சத்து and சாம்பல் சத்து இட வேண்டும்.கரும்பு – மறுதாம்பு பயிர் (சர்க்கரை ஆலைக்காக உற்பத்தி செய்யப்படும் கரும்பு) எக்டருக்கு 300 + 25% அதிக தழைச்சத்து : 100 : 200 kg மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து இட வேண்டும்.வெல்லத்திற்காக உற்பத்தி செய்யப்படும் கரும்பு (நடவு மற்றும் மறுதாம்பு பயிர்) எக்டருக்கு 225 : 62.5 : 112.5 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துகரும்பிற்கான உயிர் உரம்அசோஸ்பைரில்லம் என்பது கரும்பு வேர்களுக்கு ஊட்டமளிக்கும் பொதுவான தழைச்சத்தாகும் மற்றும் வருடத்திற்கு ஒரு ஏக்கருக்கு 50 முதல் 75 கிலோ வளிமண்டல தழைச்சத்தை நிவர்த்தி செய்கிறது. தற்சமயம் பயிரில் வாழும் பாக்டீரியம் (குலுகன்அசிடோபேக்டர் டைஅசோட்ராபிகஸ்) கரும்பில் அசோஸ்பைரில்லமை விட அதிகமாக தழைச்சத்தை நிலை நிறுத்துகிறது. இவை கரும்பு பயிர் முழுவதிற்கும் தழைச்சத்தை எடுத்துச் செல்கிறது மற்றும் தழைச்சத்தின் அளவை அதிகரிக்கிறது. மண்ணில் பாஸ்பேட், இரும்பு மற்றும் துத்தநாக சத்தை வேர் வரை கொண்டு செல்கிறது. இது பயிர் வளர்ச்சியை அதிகரிக்கிறது மற்றும் கரும்பின் மகசூலையும் சாறில் இனிப்புத் தன்மையையும் அதிகரிக்கிறது. இது அசோஸ்பைரில்லத்தைவிட அதிக செயல்திறன் வாய்ந்தது. த.வே.ப.கழக பயோபெர்ட் -1 பாஸ்போபாக்டீரியாவை பாஸ்பரஸ் கரைப்பானாக கரும்பு பயிருக்கு பரிந்துரைக்கப்படுகிறது.குலுகன்அசிடோபேக்டர் டைஅசோட்ராபிகஸ் கொண்டு கரணை நேர்த்தி செய்தல்கரணைகளை நடுவதற்கு முன் எக்டருக்கு 10 பாக்கெட் (2 கிலோ)குலுகன்அசிடோபேக்டர் டைஅசோட்ராபிகஸை 250 லிட்டர் தண்ணீரில் கலந்து நேர்த்தி செய்ய வேண்டும். குலுகன்அசிடோபேக்டர் டைஅசோட்ராபிகஸ் கொண்டு அடியுரமிடுதல் எக்டருக்கு 12 பாக்கெட் (2.4 கிலோ) விதைத்த 30, 50 மற்றும் 90-ம் நாள் நீர்ப்பாய்ச்சிய நிலையில் அடியுரமாக அளிக்க வேண்டும்.அதே முறையில் பாஸ்போ பாக்டீரியா அளித்தல்அடியுரம் இடாவிட்டால் அதே முறையில் விதைத்த 30, 50 மற்றும் 90-ம் நாள் நீர்ப்பாய்ச்சிய நிலையில் அடியுரமாக அளிக்க வேண்டும்.நுண்ணுயிர் நேர்த்தி நடவிற்கு சற்று முன்பு அளிக்க வேண்டும். நுண்ணுயிர் உரம் அளித்தவுடன் நடவு செய்து நீர்ப்பாய்ச்ச வேண்டும்.நுண்ணுயிர் உரத்தை இரசாயன உரத்துடன் கலக்க வேண்டாம்.பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்தை 25% குறைப்பதன் மூலம் நுண்ணுயிர் உரம் அளித்ததன் பலனை அடையலாம்.13.நீர் நிர்வாகம்கரும்புப் பயிருக்கு அதன் வளர்ச்சிப் பருவங்களுக்கு ஏற்ப நீர் பாய்ச்சுதல் வேண்டும்முளைப்புப் பருவம் (0-35 நாட்கள்)கரும்புப் பயிருக்கு அதன் முளைப்புப் பருவத்தில் குறைந்தபட்சமாக 2 முதல் 3 செ.மீ. ஆழத்திற்கு குறுகிய இடைவெளியில் நீர் பாய்ச்சுதல் மணல்சாரி இடங்களில் கரும்பின் முளைப்புத் திறனை மேம்படுத்தும். தெளிப்பு நீர்ப்பாசனம் பயிரின் முளைப்பு கால வளர்ச்சிப் பருவத்திற்கு ஏற்றதாகும். பின்னர் கிளைப்பு, வளர்ச்சி மற்றும் முதிர்ச்சிப் பருவத்தில் முறையே 0.75, 0.75 மற்றும் 0.50 பாசன நீர் மொத்த ஆவியாகுதல் (IW/CPE) விகிதத்தில் நீர் பாய்ச்சிட வேண்டும்பருவம்நீர்ப்பாசன இடைவெளிமணல் நிலம்களிமண்கிளைப்புப் பருவம் (36 முதல் 100 நாட்கள்)810வளர்ச்சிப் பருவம் (101 முதல் 270 நாட்கள்810முதிர்ச்சி பருவம் (271 நாட்கள் முதல் அறுவடை வரை) 1014சொட்டு நீர்ப்பாசனம்6 முதல் 7 மாத கரும்பு நாற்றங்காலிலிருந்து தேர்வு செய்யப்பட்ட விதைக்கரணைகளை 30 × 30 × 30 / 150 செ.மீ என்ற இடைவெளியில் இரு வரிசை பாரில் நடவு செய்யவும்ஒரு வரிசையில் மீட்டர் ஒன்றிற்கு எட்டு கரணைகளை வரப்பின் இரண்டு பக்கத்திலும் நடுவதன் மூலம் வாய்க்கால் நடவு முறையை அமைக்கலாம்.12 மிமீ அகல சொட்டு நீர்ப்பாசன பக்கவாட்டு குழாய்களை நடவு சால்மேட்டின் மத்தியில் இருபக்கவாட்டு குழாய்களுக்கான இடைவெளி 240 செ.மீ. இருக்கும் விதத்தில் அமைக்க வேண்டும். இந்த பக்கவாட்டு குழாய்களிலிருந்து 75 செ.மீ. இடைவெளியில் ஒரு மணி நேரத்திற்கு 8 லிட்டர் பாசன சொட்டு நீர் வெளியாகும் விதமாக வடிவமைக்க வேண்டும். பக்கவாட்டு குழாய்களின் நீளம் 30 லிருந்து 40 மீட்டர்க்கு மேல் போகாமல் இருக்க வேண்டும்62.5 கி/ எக் என்ற அளவில் மணிச்சத்தினை அடியுரமாக நடவிற்கு முன்னர்இடவேண்டும்தழை மற்றும் சாம்பல் சத்தினை முறையே 275 1125 கி/ எக். என்ற அளவில் சொட்டு நீர்க் குழாய்களின் வழியே ’வென்ட்சூரி’ உபகரணம் கொண்டு 10 முதல் 12 பகுதியாக நடவு செய்த 15 முதல் 180 நாட்கள் வரை கொடுக்க வேண்டும்குறைந்த மற்றும் மிதமான ஊட்டச்சத்து வயல்களில் 50 சத தழை மற்றும் சாம்பல் சத்துக்களை அதிக அளவில் இட வேண்டும்தண்ணீரானது மண் மற்றும் பயிரிலிருந்து ஆவியாக வெளியேறுதலைப் பொருத்து கரும்பிற்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை சொட்டு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும் நிலத்தடியில் 120+40 செ.மீ பக்கவாட்டு இடைவெளியில் கரும்பை இரண்டு புறமும் நடவு செய்ய வேண்டும். சொட்டு நீர் பாசன உரமிடுதல் மகசூலை அதிகரிக்கும்பரிந்துரைக்கப்பட்ட 125 % தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தை (275:63:112..5 கிலோ/எக்டர்) குழி வழி முறை உரப்பாசனம் அளிப்பதன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம்.
எதிர்பாராசூழ்நிலைக்கேற்ற நிவாரணத் திட்டம்இடர்பாடான சூழ்நிலைகளில் படிப்படியாக சால்களை அகலப்படுத்துதல்நடவு சமயத்தில் 30 செ.மீ. அகலத்தில் நீர்ப்பாசனம் வாய்க்கால் அமைத்து பின்னர் அதனை 45 செ.மீ. அளவிற்கு நடவு செய்த 45ம் நாள் முதல் மண் அணைக்கும்போது அகலப்படுத்தி மேலும் 90ம் நாள் மேற்கொள்ளும் ஆழப்படுத்துவதின் மூலம் 35 சதவிகிதத் தண்ணீரினைச் சேமிக்கலாம்வறட்சி நிர்வாகம்கரும்பு விதைக்கரணைகளை 80 கிலோ நீர்த்த சுண்ணாம்புடன் 400 லிட்டர் தண்ணீர் கலந்த கலவையில் 1மணி நேரம் ஊறவைத்தல்30 செ.மீ. ஆழமான நடவு சால்களில் கரணைகளை நடவு செய்தல்பொட்டாஷ் மற்றும் யூரியா 2.5 சத சரைசலை வறட்சி காலங்களில் 15 நாட்கள் இடைவெளியில் தெளித்தல்6 சத கயோலின் (60 கிராம் கயோலின் 1 லிட்டர் தண்ணீருக்கு) தெளித்து நீர்த்தேவையினைக் குறைத்தல்தண்ணீர் தட்டுப்பாடான பகுதியில் மாறுசால் அல்லது விடுசால் பாசனம் நன்மைக்குறியதாகும்நடவு செய்த 120ம் நாள் கூடுதலாக 125 கி பொட்டாஷ்/ எக் என்ற அளவில் இட வேண்டும்கடைசி உழவின் பொழுது தென்னை நார்க்கழிவு 25 டன்/ எக் என்ற அளவில் இடுதல்காய்ந்த சோகைகளை 5வது மாதம் உரித்து கரும்பு வரிசைக்கு இடையே பரப்புதல்வறட்சி மேலாண்மைநீர் பற்றாக்குறையை சரிகட்ட எத்தரல் 200 பி.பி.எம். அல்லது சுண்ணாம்புக் கரைசல் (80 கிலோ சுண்ணாம்பை 400 லிட்டர் நீரில் கரைத்து கிடைக்கும் கரைசல்) போன்றவற்றில் விதைக்க கரணைகளை ஒரு மணி நேரம் நனைத்து வைத்திருந்த 30 செ.மீ. ஆழத்தில் நடவு செய்ய வேண்டும். பின்பு நீர் பற்றாக்குறை காலங்களில் பொட்டாஷ் மற்றும் யூரியா 2.5 சதவிகித கரைசல் ஒவ்வொன்றையும் 15 லிட்டர் நீரில் கரைத்து கிடைக்கும் கரைசல்) கரைசலை தெளிப்புச் செய்ய வேண்டும். நீர்ப்பற்றாக்குறையான சூழ்நிலைகளில் மாற்று சால் மற்றும் சால் விட்டு சால் பாசன முறைகளைக் கையாளுவது நன்மை பயப்பனவாக அமைகிறது.14. அறுவடை முன் நேர்த்திகள்அ.கரும்பு முதிர்ச்சி ஊக்கி தெளித்தல்சோடியம் மெட்டா சிலிகேட் 4 கிலோ / எக் என்ற அளவில் 750 லிட்டர் தண்ணீர் கலந்து கரும்பு நடவு செய்த 6ம் மாதம் தெளிக்க வேண்டும். பின்னர் அதே இரசாயனத்தை 8 மற்றும் 10வது மாதத்தில் இருமுறை தெளிப்பதன் மூலம் கரும்பு மகசூல் மற்றும் சர்க்கரை கட்டுமானத்தை அதிகரிக்கலாம்.ஆ.கரும்பின் முதிர்ச்சி அறிதல்கரும்பின் முதிர்ச்சியை பிரிக்ஸ் மீட்டர் என்ற கருவியின் மூலம் அறியலாம். 18 முதல் 20 சத பிரிக்ஸ் அளவு கரும்பின் முதிர்ச்சியை குறிக்கும். கரும்பின் நுனி மற்றும் கீழ் பகுதி பிரிக்ஸ் அளவு 11 விகித அளவில் இருத்தல் வேண்டும்.15. அறுவடைமுன்பட்ட கரும்பு இரகங்களை 10 முதல் 11 மாதத்திற்குள்ளும் பின்பட்ட இரகங்களை 11 முதல் 12 மாதத்திற்குள்ளும் அறுவடை செய்ய வேண்டும்கரும்பினை அதன் உச்ச கட்ட முதிர்ச்சி காலத்தில் அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்யும்போது நடவுப் பயிராக இருந்தாலும் அல்லது மறுதாம்புப் பயிராக இருந்தாலும் தரையோடு தரையாக பூமி மட்டத்திற்கு அறுவடை செய்ய வேண்டும்மறுதாம்பு பயிர்1.நடவு கரும்பின் அறுவடைக்கு பின் செய்ய வேண்டியவைகரும்பு அறுவடைக்குப் பின் கீழ்க்கண்ட செய் நேர்த்திகளை 10 நாட்களுக்குள் முடிப்பதன் மூலமாக கட்டை கரும்பின் துளிர்ப்பு மற்றும் வளர்ச்சி சீராக அமையும் கரும்பு தோகைகளை வயலில் இருந்து வெளியே எடுத்துவிட வேண்டும்.தோகைகளை எரித்தல் கூடாது.மண் நிறைக்க நீர்ப்பாசனம் செய்யவும் நல்ல ஈரப்பதத்தில் கூரிய மண்வெட்டி கொண்டு மண் மட்டத்திற்கு கீழ் 4-6 செ.மீ. அளவிற்கு கரும்பு கட்டையை சீவ வேண்டும். கூப்பர் கலப்பை கொண்டு கரும்பு பயிரின் இரு கரைகளையும் உடைத்துவிட வேண்டும். கட்டைக் கரும்பின் போக்கிடங்களை கட்டை சீவிய 30 நாட்களுக்குள் நிரப்ப வேண்டும். இதற்கு அதே நிலத்தில் இருந்து எடுக்கப்பட்ட கரும்பு குத்துக்களை பிரித்து நடவு செய்யலாம். அல்லது பாலித்தீன் பை நாற்றுகளைக் கொண்டும் போக்கிடங்களை நிரப்பலாம். நடவு பயிருக்கு பரிந்துரை செய்யப்படும் அதே அளவில் அங்கக உரம் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரத்தினை இடுதல் வேண்டும்மறுதாம்புப் பயிர் நிர்வாகம்ஐஐ.பயிர் நிர்வாகம்25 சத அதிகப்படியான தழைச்சத்தினை கட்டைவிட்ட 5-7 நாட்களில் அளித்தல்பயிர் இரும்புசத்து பற்றாக்குறையால் மஞ்சளாக மாறும் போது அன்னபேதி உப்பினை 2.5 கி/எக் என்ற அளவில் கட்டைவிட்ட 15ம் நாள் தெளித்தல் பயிர் மீண்டும் மஞ்சளாக இருந்தால்15 நாள் இடைவெளியில் திரும்பவும் தெளிக்க வேண்டும். கடைசி தெளிப்பபுடன் எக்டருக்கு 2.5 கிலோ யூரியாவையும் சேர்த்துக்கொள்ளலாம்கட்டைவிட்ட 20வது 40வது மற்றும் 60வது நாளில் களையெடுத்தல்முதல் மேலுரத்தினை 25ம்நாளும், 2வது மேலுரத்தினை 45 முதல் 50 நாட்களுக்குள் இடுதல்இறுதி மேலுரத்தினை 70-75 நாட்களுக்குள் இட வேண்டும்கட்டைவிட்ட 50 வது நாளில் பகுதி மண் அணைத்தல்90வது நாள் கடைசி மண் அணைத்தல்120வது மற்றும் 180வது நாள் தோகை உரித்தல்180 வது நாள் விட்டம் கட்டுதல்11 மாதத்திற்கு பிறகு அறுவடை செய்தல்ஊ. கரும்பு விதை (நாற்றங்கால் பயிர்)கரும்பு நடவு பயிர் பயிரிடுவதற்கு 6 முதல் 7 மாதத்திற்கு முன்னர் கரும்பு விதை நாற்றங்கால் நடவு செய்ய வேண்டும்.
விதை நாற்றங்கால் சாகுபடியில் கவனிக்க வேண்டியவைதோகை உரித்தல் கூடாதுவிட்டம் கட்டுதல் கூடாது6 முதல் 7 மாதத்தில் அறுவடைகரணை தயார் செய்யும் பொழுது காய்ந்த சோகைகளை கைகளால் நீக்க வேண்டும்பரு அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்விதைக்கரும்பினை மற்ற இடங்களுக்கு எடுத்து செல்ல வேண்டும் என்றால் முழு கரும்பாகவும் தோகை நீக்காமலும் இருக்க வேண்டும்50 கிலோ யூரியாவை மேலுரமாக விதை கரும்பு அறுவடைக்கு ஒரு மாதம் முன்னர் இடுதல் அவசியம்நோய், பூச்சிதாக்குதல் இன்றி பராமரிக்க வேண்டும்பயிர் வினையியல்எக்டருக்கு 1.0, 1.5 மற்றும் 2 கிலோ த,வே.ப.கழக கரும்பு பூஸ்டரை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து விதைத்த 45, 60 மற்றும் 75-ம் நாள் அளிப்பதன் மூலம் கரும்பின் வளர்ச்சி மற்றும் எடையை அதிகரிக்கலாம். கணுவின் நீளம், கரும்பு மகசூல் மற்றும் இனிப்புத் தன்மையை அதிகரிக்கிறது மற்றும் வறட்சியை தாங்கும் தன்மையை அளிக்கிறது.
புதினா
நறுமணப் பர்கள் ::
புதினாஇரகங்கள்ஜப்பான் புதினா - எம்ஏஸ் 1, எம்ஏ 2, ஹபிரட் 77, சிவாலிக் ஈசி – 41911ஸ்பியர் - எம்எஸ்எஸ்-1,5, பஞ்சாப் ஸ்பியர் மின்ட் -1பெர்கோ - சிரன்மிளகு - குக்ரைல்மண் மற்றும் தட்பவெப்பநிலைவடிகால் வசதியுடைய இருபொறை மண், காரத்தன்மையுடைய மற்றும் அங்க்கச் சத்த நிறைந்த மண்வகைகள் அனைத்தும் சாகுபடிக்கு உகந்தவை. மிதவெப்ப மண்டலங்களில் சராசரி ஆண்டு மழையளவு 100-150 செ.மீ இருத்தல்வேண்டும். விதை மற்றும் விதைப்புவேர் விட்ட தண்டுக்குச்சிகள் மூலம் புதினா இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது
.நிலம் தயாரித்தல்நிலத்தை உழுது நன்கு பண்படுத்தவேண்டும்.
பின் எக்டருக்கு 10 டன் மக்கிய தொழு உரம் இட்டு தேவையான அளவில் பாத்திகள் அமைக்கவேண்டும்.
பின் வேர் விட்ட தண்டுக்குச்சிகளை 40 x 40 செ.மீ இடைவெளியில் ஜ¤ன் - ஜ¤லை மாதங்களில் நடவு செய்யவேண்டும்
.ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மைஅடியுரம் : ஒரு எக்டருக்கு 30,60,10 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து இடவேண்டும்
.மேலுரம் : நடவு செய்த 60 மற்றும் 120வது நாளில் ஒரு எக்டருக்கு 30 கிலே தழைச்சத்து உரத்தை இரண்டு முறை பிரித்து இடவேண்டும்.நீர் நிர்வாகம்பின்செய்நேர்த்திதேவைக்கேற்ப கைக்களை எடுத்து களைகளை கட்டுப்படுத்தவேண்டும்.ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்புபொதுவாக புதியானவை பெருமளவில் பூச்சி மற்றும் நோய் தாக்குவதில்லை.அறுவடைநடவுசெய்த 5வது மாதத்தில் முதல் அறுயடையும் அதன் பினான்ர் மூன்று மாத இடைவெளியிலும் அறுவடை செய்யவேண்டும். நல்ல முறையில் பராமரிப்பு செய்தால் நான்கு ஆண்டுகள் வரை லாபகலமான மகசூல் எடுக்கலாம்.மகசூல்இலைப்பாகம் -
ஒரு வருடத்திற்கு ஒரு எக்டரிலிருந்து 15 - 20 டன்எண்ணை - ஒரு வருடத்திற்கு ஒரு எக்டரிலிருந்து 50 - 100 டன்
புதினாஇரகங்கள்ஜப்பான் புதினா - எம்ஏஸ் 1, எம்ஏ 2, ஹபிரட் 77, சிவாலிக் ஈசி – 41911ஸ்பியர் - எம்எஸ்எஸ்-1,5, பஞ்சாப் ஸ்பியர் மின்ட் -1பெர்கோ - சிரன்மிளகு - குக்ரைல்மண் மற்றும் தட்பவெப்பநிலைவடிகால் வசதியுடைய இருபொறை மண், காரத்தன்மையுடைய மற்றும் அங்க்கச் சத்த நிறைந்த மண்வகைகள் அனைத்தும் சாகுபடிக்கு உகந்தவை. மிதவெப்ப மண்டலங்களில் சராசரி ஆண்டு மழையளவு 100-150 செ.மீ இருத்தல்வேண்டும். விதை மற்றும் விதைப்புவேர் விட்ட தண்டுக்குச்சிகள் மூலம் புதினா இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது
.நிலம் தயாரித்தல்நிலத்தை உழுது நன்கு பண்படுத்தவேண்டும்.
பின் எக்டருக்கு 10 டன் மக்கிய தொழு உரம் இட்டு தேவையான அளவில் பாத்திகள் அமைக்கவேண்டும்.
பின் வேர் விட்ட தண்டுக்குச்சிகளை 40 x 40 செ.மீ இடைவெளியில் ஜ¤ன் - ஜ¤லை மாதங்களில் நடவு செய்யவேண்டும்
.ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மைஅடியுரம் : ஒரு எக்டருக்கு 30,60,10 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து இடவேண்டும்
.மேலுரம் : நடவு செய்த 60 மற்றும் 120வது நாளில் ஒரு எக்டருக்கு 30 கிலே தழைச்சத்து உரத்தை இரண்டு முறை பிரித்து இடவேண்டும்.நீர் நிர்வாகம்பின்செய்நேர்த்திதேவைக்கேற்ப கைக்களை எடுத்து களைகளை கட்டுப்படுத்தவேண்டும்.ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்புபொதுவாக புதியானவை பெருமளவில் பூச்சி மற்றும் நோய் தாக்குவதில்லை.அறுவடைநடவுசெய்த 5வது மாதத்தில் முதல் அறுயடையும் அதன் பினான்ர் மூன்று மாத இடைவெளியிலும் அறுவடை செய்யவேண்டும். நல்ல முறையில் பராமரிப்பு செய்தால் நான்கு ஆண்டுகள் வரை லாபகலமான மகசூல் எடுக்கலாம்.மகசூல்இலைப்பாகம் -
ஒரு வருடத்திற்கு ஒரு எக்டரிலிருந்து 15 - 20 டன்எண்ணை - ஒரு வருடத்திற்கு ஒரு எக்டரிலிருந்து 50 - 100 டன்
கீரை வகைகள்
இரகங்கள்கோ
1 (முளைக்கீரை மற்றும் தண்டுக்கீரை)
கோ 2 (முளைக்கீரை மற்றும் தண்டுக்கீரை)
கோ 3 (கிள்ளுக்கீரை மற்றும் அரைக்கீரை
)கோ 4 (தானயக் கீரை)
கோ 5 (முளைக்கீரை மற்றும் தண்டுக்கீரை
)மண் மற்றும் தட்பவெப்பநிலை : நல்ல மண்ணும், மணலும் கலந்த சற்றே அமிலத்தன்மை கொண்ட இரு மண் பாட்டு நிலம் கீரை சாகுபடிக்கு உகந்தது. அதிகக் களிமண் மற்றும் முற்றிலும் மணல் கொண்ட நிலத்தை தவிர்க்கவேண்டும். உப்பு நீர் விதை முளைப்புத் திறனைப் பாதிப்பதால் முளைக்கும் வரை நல்ல நீரும் பின் செடி வளர்ந்த பின் ஓரளவு உப்பு நீரும் உபயோகிக்கலாம்.கீரை வகைகள் அதிக சூரிய ஒளியில் அதிக விளைச்சல் தரவல்லது. 25-30 டிகிரி செல்சியஸ் என்ற வெப்பநிலையில் நன்கு வளரும். தானியக்கீரை வெப்ப மண்டலத்திலும் குளிர் மண்டலத்திலும் பயிரிட ஏற்றது.
பருவம் : ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம்.நிலம் தயாரித்தல்நிலத்தை மூன்று முறை நன்கு எக்டருக்கு 25 டன்கள் நன்கு மக்கிய தொழு எருவை கடைசி உழவின் போது இட்டு மண்ணுடன் நன்கு கலக்கவேண்டும். பின் 2 x 1.5 மீ என்ற அளவில் சமபாத்திகளும் பக்கத்தில் நீர்ப்பாசனத்திற்கு வாய்க்கால்களும் அமைக்கவேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மைஉரமிடுதல் :
எக்டருக்கு அடியுரமாக தழைச்சத்து 75 கிலோ, மணிச்சத்து 50 கிலோ, சாம்பல் சத்து 25 கிலோ கொடுக்கக்கூடிய அராசயன உரங்களை அளிக்கவேண்டும்.பயிர் இடவேண்டிய சத்துக்கள்(கிலோவில்)இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிலோவில்) தழைமணிசாம்பல்10:26:26யூரியாசூப்பர் பாஸ்பேட்கீரை வகைகள்அடியுரம்75502597142157
விதையும் விதைப்பும்விதையளவு : எக்டருக்கு 2.5 கிலோவிதைத்தல் : விதைகள் மிகவம் சிறியவையாக இருப்பதால் சீராக விதைக்க விதையுடன் 2 கிலோ மணல் கலந்து பாத்திகளில் நேரடியாகத் தூவவேண்டும். பின் விதைகளின் மேல் மண் அல்லது மணலை மெல்லிய போர்வை போல் தூவி மூடிவிடவேண்டும்.
நீர் நிர்வாகம்நீர்ப்பாய்ச்சுதல் : விதைத்தவுடன் பாத்திகளில் நிதானமாக நீர்ப்பாய்ச்சவேண்டும். அப்போதுதான் விதைகள் ஒரு பக்கமாக அடித்துச் செல்லாமல் இருக்கும். பின்னர் விதைத்த 3ம் நாள் உயிர்த் தண்ணீர் விடவேண்டும். அதன் பின்னர் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும். விதைத்த 6-8 நாட்களில் விதைகள் முளைத்துவிடும். பிறகு 12-15 செ.மீ இடைவெளியில் செடிகளை கலைத்து விடவும்.ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்புவிதைத்த 21 நாட்களில் இருந்தே அறுவடை செய்யப்படுவதால் மருந்துகள் தெளிக்காமல் இருப்பது நல்லது. எனினும் இலை கடிக்கும் புழுக்களை கட்டுப்படுத்த கார்பரில் நனையும் தூள் 2 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும்.ஒரு எக்டருக்கு லிண்டேன் தூவும் மருந்து 1.3 சதம் மருந்தை 10 கிலோ என்ற அளவில் பாத்திகளைச் சுற்றி தூவி, எறும்புகள், கரையான்கள் மற்றும் மற்ற பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
அறுவடைஅரைக்கீரை : விதைத்த 25 நாட்களில் தரையிலிருந்து 5 செ.மீ அளவில் கிள்ளி எடுக்கவேண்டும். பின் 7 நாட்கள் இடைவெளியில் 10 முறை அறுவடை செய்யலாம். எக்டருக்கு மகசூல் 30 டன்கள்
.முளைக்கீரை : விதைத்த 21-25 நாட்களில் வேருடன் பறிக்கவேண்டும். சிறிய செடிகளை 10 நாட்கள் இடைவெளியில் மற்றொரு முறை அறுவடை செய்யலாம். மகசூல் எக்டருக்கு 10 டன்கள்
.தண்டுக்கீரை : விதைத்த 35-40 நாட்களில் வேருடன் அல்லது கிளைகளை மட்டும் அறுவடை செய்யலாம். மகசூல் எக்டருக்கு 16 டன்கள்.
தானியக்கீரை : விதைத்த 25 நாட்களில் பசுங்கீரை எக்டருக்கு 8 டன்கள், விதைத்த 90-100 நாட்களில் அறுவடை செய்து விதைகளைப் பிரித்தெடுக்கலாம். தானியம் எக்டருக்கு 2.4 டன்கள்.
இரகங்கள்கோ
1 (முளைக்கீரை மற்றும் தண்டுக்கீரை)
கோ 2 (முளைக்கீரை மற்றும் தண்டுக்கீரை)
கோ 3 (கிள்ளுக்கீரை மற்றும் அரைக்கீரை
)கோ 4 (தானயக் கீரை)
கோ 5 (முளைக்கீரை மற்றும் தண்டுக்கீரை
)மண் மற்றும் தட்பவெப்பநிலை : நல்ல மண்ணும், மணலும் கலந்த சற்றே அமிலத்தன்மை கொண்ட இரு மண் பாட்டு நிலம் கீரை சாகுபடிக்கு உகந்தது. அதிகக் களிமண் மற்றும் முற்றிலும் மணல் கொண்ட நிலத்தை தவிர்க்கவேண்டும். உப்பு நீர் விதை முளைப்புத் திறனைப் பாதிப்பதால் முளைக்கும் வரை நல்ல நீரும் பின் செடி வளர்ந்த பின் ஓரளவு உப்பு நீரும் உபயோகிக்கலாம்.கீரை வகைகள் அதிக சூரிய ஒளியில் அதிக விளைச்சல் தரவல்லது. 25-30 டிகிரி செல்சியஸ் என்ற வெப்பநிலையில் நன்கு வளரும். தானியக்கீரை வெப்ப மண்டலத்திலும் குளிர் மண்டலத்திலும் பயிரிட ஏற்றது.
பருவம் : ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம்.நிலம் தயாரித்தல்நிலத்தை மூன்று முறை நன்கு எக்டருக்கு 25 டன்கள் நன்கு மக்கிய தொழு எருவை கடைசி உழவின் போது இட்டு மண்ணுடன் நன்கு கலக்கவேண்டும். பின் 2 x 1.5 மீ என்ற அளவில் சமபாத்திகளும் பக்கத்தில் நீர்ப்பாசனத்திற்கு வாய்க்கால்களும் அமைக்கவேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மைஉரமிடுதல் :
எக்டருக்கு அடியுரமாக தழைச்சத்து 75 கிலோ, மணிச்சத்து 50 கிலோ, சாம்பல் சத்து 25 கிலோ கொடுக்கக்கூடிய அராசயன உரங்களை அளிக்கவேண்டும்.பயிர் இடவேண்டிய சத்துக்கள்(கிலோவில்)இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிலோவில்) தழைமணிசாம்பல்10:26:26யூரியாசூப்பர் பாஸ்பேட்கீரை வகைகள்அடியுரம்75502597142157
விதையும் விதைப்பும்விதையளவு : எக்டருக்கு 2.5 கிலோவிதைத்தல் : விதைகள் மிகவம் சிறியவையாக இருப்பதால் சீராக விதைக்க விதையுடன் 2 கிலோ மணல் கலந்து பாத்திகளில் நேரடியாகத் தூவவேண்டும். பின் விதைகளின் மேல் மண் அல்லது மணலை மெல்லிய போர்வை போல் தூவி மூடிவிடவேண்டும்.
நீர் நிர்வாகம்நீர்ப்பாய்ச்சுதல் : விதைத்தவுடன் பாத்திகளில் நிதானமாக நீர்ப்பாய்ச்சவேண்டும். அப்போதுதான் விதைகள் ஒரு பக்கமாக அடித்துச் செல்லாமல் இருக்கும். பின்னர் விதைத்த 3ம் நாள் உயிர்த் தண்ணீர் விடவேண்டும். அதன் பின்னர் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும். விதைத்த 6-8 நாட்களில் விதைகள் முளைத்துவிடும். பிறகு 12-15 செ.மீ இடைவெளியில் செடிகளை கலைத்து விடவும்.ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்புவிதைத்த 21 நாட்களில் இருந்தே அறுவடை செய்யப்படுவதால் மருந்துகள் தெளிக்காமல் இருப்பது நல்லது. எனினும் இலை கடிக்கும் புழுக்களை கட்டுப்படுத்த கார்பரில் நனையும் தூள் 2 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும்.ஒரு எக்டருக்கு லிண்டேன் தூவும் மருந்து 1.3 சதம் மருந்தை 10 கிலோ என்ற அளவில் பாத்திகளைச் சுற்றி தூவி, எறும்புகள், கரையான்கள் மற்றும் மற்ற பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
அறுவடைஅரைக்கீரை : விதைத்த 25 நாட்களில் தரையிலிருந்து 5 செ.மீ அளவில் கிள்ளி எடுக்கவேண்டும். பின் 7 நாட்கள் இடைவெளியில் 10 முறை அறுவடை செய்யலாம். எக்டருக்கு மகசூல் 30 டன்கள்
.முளைக்கீரை : விதைத்த 21-25 நாட்களில் வேருடன் பறிக்கவேண்டும். சிறிய செடிகளை 10 நாட்கள் இடைவெளியில் மற்றொரு முறை அறுவடை செய்யலாம். மகசூல் எக்டருக்கு 10 டன்கள்
.தண்டுக்கீரை : விதைத்த 35-40 நாட்களில் வேருடன் அல்லது கிளைகளை மட்டும் அறுவடை செய்யலாம். மகசூல் எக்டருக்கு 16 டன்கள்.
தானியக்கீரை : விதைத்த 25 நாட்களில் பசுங்கீரை எக்டருக்கு 8 டன்கள், விதைத்த 90-100 நாட்களில் அறுவடை செய்து விதைகளைப் பிரித்தெடுக்கலாம். தானியம் எக்டருக்கு 2.4 டன்கள்.
பீர்க்கன்
வகைகள் :கோ 1, கோ 2, பி.கே.எம் 1
.மண்:அங்ககத் தன்மைக் கொண்ட வடிகால் வசதியுடைய மணல் கொண்ட களிமண் ஏற்றது. கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரையிலுள்ள மண் ஏற்றது
.பருவம்:நாற்று ஜ%லை மற்றும் ஜனவரி மாதங்களில் படர்கிறது
விதை அளவு:எக்டருக்கு 1.5 கிகி
விதை தேவைப்படுகிறதுவிதை நேர்த்தி:டிரைகோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் 10 கி/கிகி விதைகள் கொண்டு விதைப்பதற்கு முன் விதைநேர்த்தி செய்ய வேண்டும்
.நிலத்தை தயார் செய்தல்:நிலத்தை நன்கு உழ வேண்டும். 30 செ.மீ x 30 செ.மீ x 30 செ.மீ அளவு 2.5 x 2 மீ இடைவெளி விட்டு குழிகள் எடுக்க வேண்டும்
.விதைத்தல்:குழிக்கு 5 விதை என்ற அளவில் விதைக்க வேண்டும் மற்றும் 15 நாட்களுக்குப் பிறகு குழிக்கு இரண்டு நாற்றுகளை வைக்கவும்.
பாசனம்:விதை ஊன்றுவதற்கு முன் குழிகளில் நீர் விட வேண்டும். பின்னர் வாரம் ஒரு முறை பாசனம் செய்தால் போதுமானது.
உரமிடுதல்:10 கிகி தொழுவுரம் அளிக்கவும். 100 கிராம் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து முறையே 6:12:12 என்ற கலவையில் அடியுரமாக ஒவ்வொரு குழிக்கும் அளிக்க வேண்டும் மற்றும் விதைத்த 30 நாட்களுக்குப் பிறகு குழிக்கு 10 கிராம் என்ற அளவில் அளிக்கவும். அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா எக்டருக்கு 2 கிகி, சூடோமோனாஸ் எக்டருக்கு 2.5 கிகி இதனுடன் 50 கிகி தொழுவுரம் மற்றும் வேப்பம் பிண்ணாக்கு 100 கிராம் உழுவதற்கு முன் அளிக்க வேண்டும்.
சொட்டு நீர் பாசனம்:சொட்டு நீர் பாசனம் அமைக்க முக்கிய மற்றும் கிளை குழாய்கள் அமைக்கவும் மற்றும் 1.5 மீ இடைவெளியில் பக்கவாட்டு குழாய்கள் அமைக்கவும். பக்கவாட்டு சொட்டு நீர் குழாய்களை 60 செ.மீ மற்றும் 50 செ.மீ இடைவெளி விட்டு முறையே மணிக்கு 4 மற்றும் 3.5 லிட்டர் திறன் கொண்ட குழாய்களைப் பதிக்க வேண்டும்.
விதைத்தல்:45 x 45 x 45 செ.மீ அளவில் 2 மீ இடைவெளி மற்றும் 1.5 மீ வரிசை இடைவெளியில் குழிகள் தோண்ட வேண்டும். குழிக்கு மூன்று விதை என்ற அளவில் விதைக்க வேண்டும். முளைவந்த பிறகு ஆரோக்கியமான இரண்டு நாற்றுகளை விட்டு மற்ற நாற்றுகளை அகற்ற வேண்டும். நேரடி விதைப்பிற்கு பதிலாக, விதைகள் பாலீத்தின் பைகளில் விதைக்கபட்டு ஒரு பைக்கு 2 விதைகள் என்ற அளவில் விதைக்கவும் மற்றும் முளைவந்த 15 நாட்களுக்குப் பிறகு, குழிக்கு 2 நாற்றுகள் நட வேண்டும்.
உரப்பாசனம்:எக்டருக்கு 250:100:100 கிகி என்ற அளவில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை பயிர் காலம் முழுவதும் பகிர்ந்து அளிக்க வேண்டும்.
பின்செய் நேர்த்தி:களையைக் கட்டுப்படுத்த மண்வெட்டி கொண்டு மூன்று முறை களையெடுக்க வேண்டும். 2 மீ உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பந்தலை அடைய தாவரத்திற்கு தாங்கிகளை அமைக்க வேண்டும். விதைத்த 15 நாட்களுக்குப் பிறகு எத்தரால் 250 பி.பி.எம் (2.5 மிலி /10 லி நீர்) வார இடைவெளியில் நான்கு முறை அளிக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு:நோய்கள்:வண்டுகள், பழ ஈக்கள் மற்றும் புழுக்கள: டைக்ளோர்வோஸ் 76% ஈ.சி 6.5 மிலி/10லி அல்லது டிரைகுளோரோபன் 50% ஈ.சி 1.0 மிலி/லி தெளிக்கவும்.லின்டேன் 1.3 சதவிகிதம் தூள், தாமிரம் மற்றும் கந்தகத் தூள் ஆகியவை தாவர நச்சுத்தன்மை கொண்டவை.
நோய்கள்:சாம்பல் நோய்:டைனோகேப் 1 மிலி/லி அல்லது கார்பன்டாசிம் 0.5 கி /லி தெளிப்பதன் மூலம் சாம்பல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.அடிச்சாம்பல் நோய்:மேன்கோசெப் அல்லது குளோரோதாலோனில் 2 கி/லி 10 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்கவும்.
மகசூல்:சராசரி மகசூல் எக்டருக்கு 14 -15 டன் ஆகும்.
வகைகள் :கோ 1, கோ 2, பி.கே.எம் 1
.மண்:அங்ககத் தன்மைக் கொண்ட வடிகால் வசதியுடைய மணல் கொண்ட களிமண் ஏற்றது. கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரையிலுள்ள மண் ஏற்றது
.பருவம்:நாற்று ஜ%லை மற்றும் ஜனவரி மாதங்களில் படர்கிறது
விதை அளவு:எக்டருக்கு 1.5 கிகி
விதை தேவைப்படுகிறதுவிதை நேர்த்தி:டிரைகோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் 10 கி/கிகி விதைகள் கொண்டு விதைப்பதற்கு முன் விதைநேர்த்தி செய்ய வேண்டும்
.நிலத்தை தயார் செய்தல்:நிலத்தை நன்கு உழ வேண்டும். 30 செ.மீ x 30 செ.மீ x 30 செ.மீ அளவு 2.5 x 2 மீ இடைவெளி விட்டு குழிகள் எடுக்க வேண்டும்
.விதைத்தல்:குழிக்கு 5 விதை என்ற அளவில் விதைக்க வேண்டும் மற்றும் 15 நாட்களுக்குப் பிறகு குழிக்கு இரண்டு நாற்றுகளை வைக்கவும்.
பாசனம்:விதை ஊன்றுவதற்கு முன் குழிகளில் நீர் விட வேண்டும். பின்னர் வாரம் ஒரு முறை பாசனம் செய்தால் போதுமானது.
உரமிடுதல்:10 கிகி தொழுவுரம் அளிக்கவும். 100 கிராம் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து முறையே 6:12:12 என்ற கலவையில் அடியுரமாக ஒவ்வொரு குழிக்கும் அளிக்க வேண்டும் மற்றும் விதைத்த 30 நாட்களுக்குப் பிறகு குழிக்கு 10 கிராம் என்ற அளவில் அளிக்கவும். அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா எக்டருக்கு 2 கிகி, சூடோமோனாஸ் எக்டருக்கு 2.5 கிகி இதனுடன் 50 கிகி தொழுவுரம் மற்றும் வேப்பம் பிண்ணாக்கு 100 கிராம் உழுவதற்கு முன் அளிக்க வேண்டும்.
சொட்டு நீர் பாசனம்:சொட்டு நீர் பாசனம் அமைக்க முக்கிய மற்றும் கிளை குழாய்கள் அமைக்கவும் மற்றும் 1.5 மீ இடைவெளியில் பக்கவாட்டு குழாய்கள் அமைக்கவும். பக்கவாட்டு சொட்டு நீர் குழாய்களை 60 செ.மீ மற்றும் 50 செ.மீ இடைவெளி விட்டு முறையே மணிக்கு 4 மற்றும் 3.5 லிட்டர் திறன் கொண்ட குழாய்களைப் பதிக்க வேண்டும்.
விதைத்தல்:45 x 45 x 45 செ.மீ அளவில் 2 மீ இடைவெளி மற்றும் 1.5 மீ வரிசை இடைவெளியில் குழிகள் தோண்ட வேண்டும். குழிக்கு மூன்று விதை என்ற அளவில் விதைக்க வேண்டும். முளைவந்த பிறகு ஆரோக்கியமான இரண்டு நாற்றுகளை விட்டு மற்ற நாற்றுகளை அகற்ற வேண்டும். நேரடி விதைப்பிற்கு பதிலாக, விதைகள் பாலீத்தின் பைகளில் விதைக்கபட்டு ஒரு பைக்கு 2 விதைகள் என்ற அளவில் விதைக்கவும் மற்றும் முளைவந்த 15 நாட்களுக்குப் பிறகு, குழிக்கு 2 நாற்றுகள் நட வேண்டும்.
உரப்பாசனம்:எக்டருக்கு 250:100:100 கிகி என்ற அளவில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை பயிர் காலம் முழுவதும் பகிர்ந்து அளிக்க வேண்டும்.
பின்செய் நேர்த்தி:களையைக் கட்டுப்படுத்த மண்வெட்டி கொண்டு மூன்று முறை களையெடுக்க வேண்டும். 2 மீ உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பந்தலை அடைய தாவரத்திற்கு தாங்கிகளை அமைக்க வேண்டும். விதைத்த 15 நாட்களுக்குப் பிறகு எத்தரால் 250 பி.பி.எம் (2.5 மிலி /10 லி நீர்) வார இடைவெளியில் நான்கு முறை அளிக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு:நோய்கள்:வண்டுகள், பழ ஈக்கள் மற்றும் புழுக்கள: டைக்ளோர்வோஸ் 76% ஈ.சி 6.5 மிலி/10லி அல்லது டிரைகுளோரோபன் 50% ஈ.சி 1.0 மிலி/லி தெளிக்கவும்.லின்டேன் 1.3 சதவிகிதம் தூள், தாமிரம் மற்றும் கந்தகத் தூள் ஆகியவை தாவர நச்சுத்தன்மை கொண்டவை.
நோய்கள்:சாம்பல் நோய்:டைனோகேப் 1 மிலி/லி அல்லது கார்பன்டாசிம் 0.5 கி /லி தெளிப்பதன் மூலம் சாம்பல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.அடிச்சாம்பல் நோய்:மேன்கோசெப் அல்லது குளோரோதாலோனில் 2 கி/லி 10 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்கவும்.
மகசூல்:சராசரி மகசூல் எக்டருக்கு 14 -15 டன் ஆகும்.
Thursday, 1 January 2015
இயற்கை உரமான பஞ்சகாவ்யா செய்வது எப்படி?
பஞ்சகாவ்யா பயிர்களுக்கு நல்ல வளர்ச்சி கொடுப்பது மட்டும் இல்லாமல் பூச்சிகளில் இருந்து காப்பற்றவும் செய்கிறது. இதை எப்படி உங்கள் வீட்டிலேயே செய்வது?முதலில், கோசானம் 7 kg, கோநெய் 1 kg இரண்டையும் ஒரு பிளாஸ்டிக் பாத்ரம், concrete டான்க் அல்லது மண் பானையில் கலக்கவும். இந்த கரைசலை நன்றாக காலையிலும், மாலையிலும் கலக்கவும். மூன்று நாட்கள் ஆன பின், கோமூத்திரம் 10 லிட்டர், நீர் 10 லிட்டர் சேர்க்கவும். இந்த கரைசலை 15 நாட்கள் வைத்திருக்கவும். நன்றாக காலையிலும், மாலையிலும் கலக்கவும். 15 நாட்கள் ஆன பின், பசும்பால் 3 லிட்டர், பசும்தயிர் 2 லிட்டர், இளநீர் 3 லிட்டர், வெல்லம் 3 கிலோ, பழுத்த பூவன் பழம் ஒரு டஜன் போட்டு கலக்கவும்.இந்த கரைசல், 30 நாட்களுக்கு பின்னர் பஞ்சகாவ்யா ரெடி ஆகி விடும. ஆகா, பஞ்சகாவ்யா செய்ய, கிட்ட தட்டஒரு மாதம் வேண்டும்.சில டிப்ஸ்:- தினமும், காலை, மாலை இரு முறை கரைசலை நன்றாக கலக்க வேண்டும்- அகண்ட வாய் உள்ள பாத்ரம் இருந்தால் நல்லது- பாத்தரத்தை நிழலில் வையுங்கள்.- பத்திரத்தின் வாயை ஒரு கொசு வலை வைத்து கட்டவும். கொசு, மற்ற பூசிகள் உள்ளே போகாமல் இருக்க உதவும்.பஞ்சகாவ்யா பற்றி உயிரியல் ஆய்வில் தெரியும் உண்மைகள்….பஞ்சகாவ்யா மூலம் பயிரின் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கிறது என்று அறிவியல் பூர்வமாக நிருபித்து உள்ளார்கள் மதுரையில் உள்ள தியாகராஜர் கல்லூரியில் உள்ள உயிர்தொழில் நுட்பவியல் துறையை சேர்ந்த சந்தான மகாலிங்கம், சுரேஷ் குமார், ராஜன் பாபு என்ற மூன்று மாணவர்கள். இடுகை பொருட்கள் மூலமே விவசாயிகள் தற்சார்பை அடைய முடியும் என்கிறார்கள்.“பஞ்சகவ்யாவில் உள்ள பக்டீரியா பிரித்து எடுத்து வளர்ப்பு ஊடகத்தில் வளர்த்து நீரில் கலந்து தாவரங்களுக்கு கொடுத்து வளர்ச்சியை பார்த்தோம்.இவ்வாறு பிரித்து எடுக்க பட்ட பக்டீரியா அடங்கிய கரைசல் ஊற்றி வளர்த்த தண்டு கீரை வழக்கமான முறையில் வளர்க்க பட்ட தன்டுகீரையை விட அதிக வளர்ச்சியுடனும் அடர்த்தியாகவும் இருந்தது. பஞ்சகவ்யில் உள்ள நுண் இயிரிகள் ஒவ்வொரு 20 நிமிடதிற்கும் பெருகும். இவற்றின் மூலம் பயிர் வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்கள் பயிர்களின் கிளை பகுதிகள், மொட்டு, நுனி, அடிபாகம் வேர் பகுதி ஆகியவற்றின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன” என்கிறார் சந்தான மகாலிங்கம்“பசு மாட்டின் இரைப்பையில் பலவகையான நுண் இயிரிகள் உள்ளன. அவை அதிகமாக பெருகி சாணத்தில் வெளியேறுகின்றன. அப்படி பட்ட சாணத்தில் இருந்து தயாரிக்க பட்ட பஞ்சகவ்யா நிலத்திற்கு வளம் சேர்க்க கூடியது ” என்கிறார் சுரேஷ் குமார்.விவசாயிகளே எளிதாக குறைந்த விலையில் தயாரிக்க கூடியது தான் பஞ்சகவ்யா. இதனை பயன் படுத்தினால் தற்சார்பு அடைவது நிச்சயம் என்கிறார் அவர்.இதன் மூலம் மண் வளமும் மகசூலும் மேன்படும் என்பதில் ஐயம் இல்லை.
பஞ்சகாவ்யா பயன் படுத்தும் முறை
.பஞ்சகாவ்யா தெளிக்கும் முறைகரைசல் அதிகம் மற்றும் குறைந்த அளவு செறிவைக் காட்டிலும் 3% கரைசல் மிகவும் பயன்பாடு உள்ளது. ஒவ்வொரு 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகாவ்யாவை சேர்த்துப் பயன்படுத்தினால் அனைத்து பயிர்களுக்கும் சிறந்தது. 10 லிட்டர் கொள்ளளவு உள்ள மின் தெளிப்பிக்கு 300 மி.லி/நொடி அளவு தேவைப்படும்.மின் தெளிப்பானில் தெளிக்கும் போது வண்டல்கள் கீழே தங்கிவிடும். கைகளால் இயக்கப்படும் தெளிப்பானில் பெரிய துளைமுனை உள்ள தெளிப்பானை பயன்படுத்தவும்.பாய்வு முறைபஞ்சகாவ்யா கரைசலை நீர்ப் பாசன முறையில் 50 லி/ஹெக்டர் என்ற அளவில் கலந்து சொட்டுப்பாசனம் அல்லது பாய்வுப் பாசன முறையில் இதனை பாய்ச்சவும்.
விதை நாற்று நேர்த்திநடவு செய்வதற்கு முன்பு விதைகளை முக்கி வைக்க அல்லது நாற்றுகளை அமுக்கி வைக்க 3% பஞ்சகாவ்யா கரைசல் பயன்படுத்தப்படுகின்றது.20 நிமிடங்கள் முக்கி வைத்தால் போதும்,
மஞ்சள், பூண்டு மற்றும் கரும்பு வேர்த்துண்டுகளை நடவு செய்வதற்கு முன் 30 நிமிடங்கள் இந்தக் கரைசலில் முக்கி வைக்க வேண்டும்.விதை சேமிப்புவிதைகள் உலர்வதற்கு முன்பும், சேமித்து வைப்பதற்கு முன்பும் 3% பஞ்சகாவ்யா கரைசலில் முக்கி வைக்கவும்.
1.முன் பூர்க்கும் பருவம்15 நாட்களுக்கு ஒரு முறை, பயிரின் கால இடைவெளி பொருத்து 2 தெளிப்பு தெளிக்கவும்
2.பூக்கும் மற்றும் இரு புறமும் வெடிகனி பருவம்10 நாட்களுக்கு 2 தெளிப்பு
3.பழம்/இருபுறமும் பழங்கள் வெடித்து முதிர்ச்சி அடையும் பருவம்பழங்கள் வெடித்து முதிர்ச்சி அமையும் போது ஒரு முறை தெளிக்கவும்வெவ்வேறு பயிர்களில் பஞ்சகாவ்யாவை பயன்படுத்தப்படும் காலநிலை
பின்வருமாறுபயிர்கால அட்டவணை
நெல்10,15,30 மற்றும் 50வது நாட்களில் நாற்று நடுவதற்கு முன்பு பயன்படுத்தவு
ம்சூரியகாந்திவிதைத்தபின் 30, 45 மற்றும் 60 வது நாட்களில் தெளிக்கவும்
உளுத்தப்பருப்புமானாவாரி: முதல் பூர்ப்பிற்கும், பூர்த்தி பின் 15 நாட்கள் கழித்தும் பயன்படுத்தவும்நீர்ப்பாசனம்: விதைத்தலுக்கு பின் 15, 25 மற்றும் 40வது நாட்களில் தெளிக்கவு
ம்பச்சைப்பயிறுவிதைத்தலுக்குப் பின் 15, 25, 30, 40 மற்றும் 50 வது நாட்களில் பயன்படுத்தவும்
ஆமணக்குவிதைத்தலுக்குப் பின் 30 மற்றும் 45வது நாட்களில் பயன்படுத்தவு
ம்நிலக்கடலைவிதைத்தலுக்குப் பின் 25 மற்றும் 30வது நாட்களில் பயன்படுத்தவு
ம்வெண்டைவிதைத்தலுக்குப் பின் 30,45, 60 மற்றும் 75வது நாட்களில் பயன்படுத்தவு
ம்முருங்கைபூர்ப்பதற்கு முன்பும் மற்றும் இரு புறமும் வெடிக்கனி உருவாகும் நேரத்திலும் பயன்படுத்தவு
ம்தக்காளிநாற்றங்காலில் இருக்கும் பொழுதும் விதைத்த பின் 40வது நாளிலும் பயன்படுத்தவும் 1% கரைசலில்12மணி நேரத்திற்கு விதை நேர்த்தி செய்ய வேண்டு
ம்வெங்காயம்விதைத்தலுக்கு பின் 0,45 மற்றும் 60வது நாட்களில் பயன்படுத்தவு
ம்ரோஜாகவாத்து செய்யும் போதும், மொட்டுகள் வெளி வரும் போதும் பயன்படுத்தவு
ம்மல்லிகைமொட்டு அரும்பும் போது பயன்படுத்தவும்வனிலாகரணைகளை விதைப்பதற்கு முன் பஞ்சகாவ்யாவில் முக்கி வைக்க வேண்டும்
.பஞ்சகாவ்யா தெளிக்கும் முறைகரைசல் அதிகம் மற்றும் குறைந்த அளவு செறிவைக் காட்டிலும் 3% கரைசல் மிகவும் பயன்பாடு உள்ளது. ஒவ்வொரு 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகாவ்யாவை சேர்த்துப் பயன்படுத்தினால் அனைத்து பயிர்களுக்கும் சிறந்தது. 10 லிட்டர் கொள்ளளவு உள்ள மின் தெளிப்பிக்கு 300 மி.லி/நொடி அளவு தேவைப்படும்.மின் தெளிப்பானில் தெளிக்கும் போது வண்டல்கள் கீழே தங்கிவிடும். கைகளால் இயக்கப்படும் தெளிப்பானில் பெரிய துளைமுனை உள்ள தெளிப்பானை பயன்படுத்தவும்.பாய்வு முறைபஞ்சகாவ்யா கரைசலை நீர்ப் பாசன முறையில் 50 லி/ஹெக்டர் என்ற அளவில் கலந்து சொட்டுப்பாசனம் அல்லது பாய்வுப் பாசன முறையில் இதனை பாய்ச்சவும்.
விதை நாற்று நேர்த்திநடவு செய்வதற்கு முன்பு விதைகளை முக்கி வைக்க அல்லது நாற்றுகளை அமுக்கி வைக்க 3% பஞ்சகாவ்யா கரைசல் பயன்படுத்தப்படுகின்றது.20 நிமிடங்கள் முக்கி வைத்தால் போதும்,
மஞ்சள், பூண்டு மற்றும் கரும்பு வேர்த்துண்டுகளை நடவு செய்வதற்கு முன் 30 நிமிடங்கள் இந்தக் கரைசலில் முக்கி வைக்க வேண்டும்.விதை சேமிப்புவிதைகள் உலர்வதற்கு முன்பும், சேமித்து வைப்பதற்கு முன்பும் 3% பஞ்சகாவ்யா கரைசலில் முக்கி வைக்கவும்.
1.முன் பூர்க்கும் பருவம்15 நாட்களுக்கு ஒரு முறை, பயிரின் கால இடைவெளி பொருத்து 2 தெளிப்பு தெளிக்கவும்
2.பூக்கும் மற்றும் இரு புறமும் வெடிகனி பருவம்10 நாட்களுக்கு 2 தெளிப்பு
3.பழம்/இருபுறமும் பழங்கள் வெடித்து முதிர்ச்சி அடையும் பருவம்பழங்கள் வெடித்து முதிர்ச்சி அமையும் போது ஒரு முறை தெளிக்கவும்வெவ்வேறு பயிர்களில் பஞ்சகாவ்யாவை பயன்படுத்தப்படும் காலநிலை
பின்வருமாறுபயிர்கால அட்டவணை
நெல்10,15,30 மற்றும் 50வது நாட்களில் நாற்று நடுவதற்கு முன்பு பயன்படுத்தவு
ம்சூரியகாந்திவிதைத்தபின் 30, 45 மற்றும் 60 வது நாட்களில் தெளிக்கவும்
உளுத்தப்பருப்புமானாவாரி: முதல் பூர்ப்பிற்கும், பூர்த்தி பின் 15 நாட்கள் கழித்தும் பயன்படுத்தவும்நீர்ப்பாசனம்: விதைத்தலுக்கு பின் 15, 25 மற்றும் 40வது நாட்களில் தெளிக்கவு
ம்பச்சைப்பயிறுவிதைத்தலுக்குப் பின் 15, 25, 30, 40 மற்றும் 50 வது நாட்களில் பயன்படுத்தவும்
ஆமணக்குவிதைத்தலுக்குப் பின் 30 மற்றும் 45வது நாட்களில் பயன்படுத்தவு
ம்நிலக்கடலைவிதைத்தலுக்குப் பின் 25 மற்றும் 30வது நாட்களில் பயன்படுத்தவு
ம்வெண்டைவிதைத்தலுக்குப் பின் 30,45, 60 மற்றும் 75வது நாட்களில் பயன்படுத்தவு
ம்முருங்கைபூர்ப்பதற்கு முன்பும் மற்றும் இரு புறமும் வெடிக்கனி உருவாகும் நேரத்திலும் பயன்படுத்தவு
ம்தக்காளிநாற்றங்காலில் இருக்கும் பொழுதும் விதைத்த பின் 40வது நாளிலும் பயன்படுத்தவும் 1% கரைசலில்12மணி நேரத்திற்கு விதை நேர்த்தி செய்ய வேண்டு
ம்வெங்காயம்விதைத்தலுக்கு பின் 0,45 மற்றும் 60வது நாட்களில் பயன்படுத்தவு
ம்ரோஜாகவாத்து செய்யும் போதும், மொட்டுகள் வெளி வரும் போதும் பயன்படுத்தவு
ம்மல்லிகைமொட்டு அரும்பும் போது பயன்படுத்தவும்வனிலாகரணைகளை விதைப்பதற்கு முன் பஞ்சகாவ்யாவில் முக்கி வைக்க வேண்டும்
Subscribe to:
Comments (Atom)