பயிர் விளைச்சலை அதிகரிக்க உதவும் "அக்ரிடோன் 4.5' என்ற இயற்கை உரத்தை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தினார்.இதுதொடர்பாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் "பி.எம்.பயோ எனர்ஜி' நிறுவனம் தயாரித்த "அக்ரிடோன் 4.5' இயற்கை உரத்தை அறிமுகப்படுத்தி வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பேசியது:மண் வளத்தை இயற்கை முறையில் மேம்படுத்த தகுந்த உரத் தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்ற வேண்டும்.மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் காற்றிலுள்ள தழைச் சத்தை உள்வாங்கி மண்ணில் நிலை நிறுத்தி பயிர்களுக்கு அளிக்கின்றன.இயற்கையாக மட்கும் பொருள்கள் இல்லாவிட்டால் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறையும்.எனவே, அதன் வளம் குன்றாமல் பாதுகாப்பது விவசாயிகளின் கடமையாகும். இதை ஐ.நா. சபை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "அக்ரிடோன் 4.5' உரம் அனைத்து வகையான காய்கறிகள், பருவநிலைக்கு ஏற்றதாகும்.தோட்டப் பயிர்கள், தானியங்கள், எண்ணெய் வித்துகள், சிறுதானியங்கள், நாற்றங்கால் பண்ணைகள் ஆகியவற்றுக்கு இதைப் பயன்படுத்தலாம் என்றார் அவர்.பூமிக்கடியில் உள்ள பழுப்பு நிலக்கரியில் இருந்து எடுக்கப்படும் கழிவுப் பொருளான "அக்ரிடோன் 4.5' இயற்கையான தண்ணீரில் கரையக் கூடியது. இந்த உரத்துக்கான தொழில்நுட்பத்தை நெய்வேலி பழுப்பு நிறுவனம் உருவாக்கியுள்ளது.தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் பரிசோதித்து விளைச்சலை அதிகரிக்கவும், தரமான பொருள்களை உற்பத்தி செய்யவும் உதவும் என சான்றிதழ் வழங்கியுள்ளது என "பி.எம்.பயோ எனர்ஜி' நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment