Saturday, 3 January 2015

கரும்பு




சாகுபடி உத்திகள் கரும்பு பருவம் மற்றும் இரகங்கள்தமிழ்நாட்டில் கரும்பு பொதுவாக டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரை மூன்று பட்டங்களில் அதிகமாக நடவு செய்யப்படுகின்றது. இது தவிர திருச்சி, பெரம்பலூர், கரூர், சேலம், நாமக்கல் மற்றும் கோவை மாவட்டங்களில் ஜீன் முதல் செப்டம்பர் மாதம் வரை தனிப்பட்டமாக கரும்பு நடவு செய்யப்படுகிறது. பருவத்திற்கு ஏற்ப பட்டங்கள் பின்வருமாறு பிரிக்கப்படுகிறது.முன்பட்டம் - டிசம்பர் - ஜனவரிநடுப்பட்டம் -    பிப்ரவரி - மார்ச்பின்பட்டம் - ஏப்ரல் - மேதனிப்பட்டம் - ஜீன் - ஜீலைமுன்பட்டத்திற்கு ஏற்ற இரகங்கள் தனிப்பட்டத்திற்கும் உகந்தவையாகும்

கரும்பு நடவு வயல் தயாரிப்பு1. நடவு வயல் தயாரிப்பு

அ.களிமண்நிலம்பொதுவாக களி மண் வயல்களில் நல்ல பொலபொலப்புத் தன்மை பெறும் வகையில் உழவு மேற்கொள்ள முடிவதில்லைநெல் அறுவடைக்குப் பிறகு வயலின் குறுக்காகவும் வயலைச் சுற்றியும் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் பாத்திகள் 6 மீட்டர் இடைவெளியில் 40 செ.மீ.ஆழம் மற்றும் 30 செ.மீ. அகலத்தில் அமைத்திட வேண்டும்நடவு சால் மற்றும் சால் மேடுகள் 80 செ.மீ. இடைவெளியில் மண்வெட்டி கொண்டு அமைத்திட வேண்டும்நடவு சாலினை 4 முதல் 5 நாட்கள் வரையிலும் களைகொத்தி கொண்டு கிளறி விடுதல் வேண்டும்அதிக தண்ணீர் தேங்கி பிரச்சினையாகும் நிலங்கள்அதிகமாக தண்ணீர் தேங்கி நின்று மற்றும் அதனை வடித்து வெளியேற்ற முடியாத வயல்களில் 30 செ.மீ.இடைவெளியில் 5 மீட்டர் நீளம், 80 செ.மீ. அகலம் மற்றும் 15 செ.மீ. உயரம் கொண்ட மேட்டுப் பாத்திகள் அமைத்திட வேண்டும்.உ.இருமண் மற்றும் மணல்சாரி தோட்டக்கலை நிலங்கள்ஆரம்பத்தில் இரண்டு தட்டு கலப்பை கொண்டு உழ வேண்டும். தொடர்ந்து எட்டு தட்டு கலப்பை கொண்டு உழ வேண்டும் மற்றும் உழும் கருவி பயன்படுத்தி ஆழ உழ வேண்டும். தொடர்ந்து ஒரு முறை சுழல் கலப்பை கொண்டு மண்ணை பொலபொலப்பாக்கி பண்படுத்துவதன் மூலம் களை மற்றும் பயிர்தூர் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.சீரான முறையில் நீர்ப்பாசனம் செய்திட நிலத்தினை நன்கு சமன்படுத்த வேண்டும்நடவு சால் மற்றும் சால் மேடுகள் 80 செ.மீ. இடைவெளியில் விக்டரி அல்லது பார் அமைக்கும் கலப்பை கொண்டு அமைக்க வேண்டும். நடவு சால்கள் 20 செ.மீ.  ஆழம் உடையதாக இருத்தல் வேண்டும்நீர்ப்பாசன வாய்க்கால்கள் 10 மீட்டர் இடைவெளியில் இருத்தல் வேண்டும்2. அடியுரமாக அங்கக உரங்கள் இடுதல்தோட்டக்கால் நிலங்களில் கடைசி உழவிற்கு முன்னதாக தொழுஉரம் 12.5 டன்/ எக்(ஆழ் குப்பை உரம் 25 டன்/ எக்(அ) ஆலை அழுக்கு 37.5 டன்/ எக் என்ற அளவில் இட வேண்டும். களி மண் நிலங்களில் மேற்கண்ட அங்கக உரங்களை நடவு சால்களில் இட்டு நன்கு கலந்து விடவேண்டும்.கரும்புத் தோகை மற்றும் ஆலை அழுக்கு கொண்டு ஊட்டமேற்றிய குப்பை எரு தயாரித்தல்காய்ந்த கரும்புத் தோகையை 15 செ.மீ. உயரத்திற்கு சுமார் 7 மீட்டர் நீளம் மற்றும் 3 மீட்டர் அகலப் பாத்திகளாக பரப்பவும். அதற்கு மேல் 5 செ.மீ. உயரத்திற்கு கரும்பு ஆலை அழுக்கினை பரப்பி விடுதல் வேண்டும். மசூரி ராக் பாஸ்பேட், ஜிப்சம் மற்றும் யூரியா உரங்களை முறையே 2:2:1 என்ற விகிதாச்சாரத்தில் கலந்து தோகை மற்றும் ஆலை அழுக்கு அடுக்கின் மீது 100 கிலோ தோகைக்கு 5 கிலோ உரக்கலவை என்ற விகிதத்தில் பரவலாகத் தூவி விட வேண்டும். பின்னர் அடுக்கு முழுவதும் நன்கு நனையும் வண்ணம் தண்ணீர் தெளிக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள இடுபொருள்கள். ஒவ்வொன்றையும் அதே அளவில் மற்றும் அதே முறையில் திரும்பவும் கொடுத்து கடைசியாக அடுக்கின் மொத்த உயரம் 1.5 மீட்டர் அளவு வருமாறு செய்ய வேண்டும். தண்ணீர் தெளிப்பதற்கு பதிலாக கிடைக்கும் இடங்களில் தொழு உரக் கரைசல் பயன்படுத்தலாம். பின்னர் அடுக்கு முழுவதையும் மண் மற்றும் ஆலை அழுக்கு முறையே 11 என்ற விகித அளவில் கலந்த கலவை கொண்டு 15 செ.மீ. உயர அளவிற்கு மூடி விட வேண்டும். இவ்வடுக்கினை மூன்று மாதத்திற்கு மக்குவதற்காக அப்படியே விட்டுவிடவேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை அடுக்கு முழுவதும் நனையும் வண்ணம் நீர் தெளிக்க வேண்டும். மூன்று மாதமானதும் அடுக்கினை புரட்டி பின்னர் நன்கு கலந்து விட்டு ஒரு மாதத்திற்கு அப்படியே விட வேண்டும். நான்காவது மாத முடிவில் மறுபடியும் புரட்டி விட்டு பின் கலந்து 5வது மாத முடிவு வரை 15 நாள் இடைவெளியில் தண்ணீர் தெளிக்க வெண்டும். இம்முறையில் தயாரிக்கப்படும் கரும்புத்தோகை கம்போஸ்டில் தழை, மணி மற்றும் கால்சியம் சத்துக்களின் அளவு அதிகமாக இருப்பதோடு கரிமம் மற்றும் தழைச்சத்தின் விகிதாச்சாரம் கரும்புத் தோகையின் அளவை விட 10 மடங்கு குறைவாக இருக்கும்.

 அடியுரமாக இரசாயன உரங்கள் இடுதல்மண் பரிசோதனை செய்யப்படவில்லையெனில் பொதுப்பரிந்துரையாக தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து முறையே எக்டருக்கு 300:100:200 கிகி அளிக்க வேண்டும். சூப்பர் பாஸ்பேட்                    (625 கிகி/எக்டர்) மண்வெட்டி கொண்டு அளிக்க வேண்டும். துத்தநாக சத்து மற்றும் இரும்புச்சத்துக் குறைபாடு உள்ள வயல்களில் முறையே 37.5 கிலோ/எக் துத்தநாக சல்பேட் மற்றும் 100 கிலோ/எக் பெரஸ் சல்பேட் இடுதல் வேண்டும். கந்தக பற்றாக்குறையுள்ள மணலில் ஜிப்சம் வடிவில் கந்தகத்தை எக்டருக்கு 500 கிகி அளிப்பதன் மூலம் கரும்பு விளைச்சல் மற்றும் சாறின் தரத்தை உயர்த்தலாம்.ஐ.ஏ.நடவு வயல் பராமரிப்பு1.கரும்பு நடவிற்கு விதைக்கரணை தயாரித்தல்விதைக்கரணைகளை, நோய் மற்றும் பூச்சிகள் தாக்காத 6 முதல் 7 மாதமுடைய விதை நாற்றங்காலிலிருந்து தேர்வு செய்ய வேண்டும்விதைக்கரணைகளில் ஒட்டியிருக்கும் காய்ந்த தோகைகளை ஆட்கள் கொண்டு கைகளால் நீக்க வேண்டும்பிளவு இல்லாத விதை கரணைகளை பெற கூர்மையான கத்தி அல்லது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கரணை வெட்டும் இயந்திரம் பயன்படுத்த வேண்டும்.விதைக்கரணைகள் பக்கவாட்டில் விளந்து விடாமல் இருக்க கூரிய கத்தி கொண்டு தயார் செய்திடல் வேண்டும்அடிப்பட்ட பருக்கள், பருக்கள் முளைத்த மற்றும் பிளவுபட்ட விதைக்கரணைகளை நீக்கி விட வேண்டும்அசோஸ்பைரில்லம்

 விதை நேர்த்தி:
நடவுக்கு முன்னர் 10 பொட்டலங்கள் (2 கிலோ/எக்) அஸோஸ்பைரில்லம் நுண்ணுயிருடன் தேவையான அளவு நீர் கலந்து அக்கலவையில் கரும்பு விதைக்கரணைகளை 15 நிமிடம் வரையில் நனைத்து பின் நடவு செய்ய வேண்டும்2. கரணை நேர்த்திஆரோக்கியமான கரணைகளைத் தேர்வு செய்திடவேண்டும்கரணைகளை 100 லிட்டர் தண்ணீரில் 50கி கார்பன்டிசம், 200மிலி மாலதியான் மற்றும் 1கிகி யூரியா கலந்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.கரணைகளை புல்தண்டு நோயிலிருந்து பாதுகாத்திட 1 மணி நேரத்திற்கு 50 டிகிரி சென்டிகிரேட் என்ற அளவில் வெப்ப நீராவி நேர்த்தி செய்திட வேண்டும்

.கரணை அளவு : 75,000 இரு பரு கரணைகள் எக்டருக்கு

கரும்பு நடவு முறையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள்இயந்திர முறை நடவுதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இயந்திர நடவு கருவி எக்டருக்கு ரூ.3750/- சேமிக்க உதவுகிறது மற்றும் நாள் ஒன்றிற்கு 1.5 எக்டர் பரப்பளவு நடவு செய்கிறது.மனித ஆற்றலைக் குறைக்கிறது மற்றும் விதை அளவு எக்டருக்கு 5 டன்னாக குறைக்கிறது.இணைவரிசை நடவுமுறையில் இரண்டு புறமும் கரணைகளை 150 + 30 செ.மீ இடைவெளியில் அஸ்ட்ராப் 8000 வகை (அறுவடை இயந்திரம்) கொண்டு அறுவடை செய்யுமாறு நட வேண்டும் மற்றும் 150 + 30 செ.மீ இடைவெளியில் நியூ ஹாலண்ட் 4000 வகை அறுவடை இயந்திரம் கொண்டு அறுவடை செய்யுமாறு ஒரு வரிசையில் நடவு செய்ய வேண்டும்.நிலத்தடி சொட்டு நீர் பாசன முறையில் கரும்பை பயிர் செய்யும்போது சொட்டு நீர் குழாய்களை 20 செ.மீ ஆழத்தில் வாய்க்காலில் பதிக்க வேண்டும் மற்றும் விதை கரணைகளை  சொட்டு நீர் குழாய்க்கு 5 செ.மீ மேல் இருக்குமாறு பதிக்க வேண்டும்.செம்மை கரும்பு சாகுபடியில் 25-35 நாட்கள் வளர்ந்த நாற்றுகளை 5x2 அடி இடைவெளியில் விளைநிலத்தில் நட்டு சொட்டு நீர் பாசனம் அமைக்க வேண்டும்.பரந்த இடைவெளி கரும்பு சாகுபடியில் ஊடுபயிராக தக்கைப் பூண்டு மற்றும் சணப்பை பயிரிடுவதன் மூலம் மண் வளம் மேம்படும் மற்றும் களைகளை கட்டுபடுத்தலாம். இது இளங்குருத்துப் புழு நோய் நிகழ்வைக் குறைக்கிறது மற்றும் கரும்பு விளைச்சல் அதிகரிக்கிறது.கடின மண்ணில் வரப்பில் கரணைகளை 80 செ.மீ இடைவெளியில் நடுவதன் மூலம் கரணை அழுகல்நோயை தவிர்க்கலாம் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.நடவு செய்த மூன்று நாட்களுக்குள் வரப்பின் எதிர் திசையில்10 செ.மீ இடைவெளியில் ரைசோபிம் கொண்டு விதை நேர்த்தி செய்யப்பட்ட பசுந்தாள் விதைகளை எக்டருக்கு 10 கிலோ அளவு விதைக்க வேண்டும்.அதிக இடைவெளியுள்ள பயிர்களில் நடவு செய்த 50-60 நாட்களில் பசுந்தாளை உழுதுவிட வேண்டும் மற்றும் நடவு செய்த 90-100 வது நாளில் பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்துடன் மண் அணைக்க வேண்டும்.சுழல் கலப்பை பொருத்திய எந்திரக் களையெடுக்கும் கருவியை கொண்டு களை எடுக்க வேண்டும் மற்றும் சால் அமைக்கும் கருவி கொண்டு மண் அணைப்பதன் மூலம் ஆட்கள் செலவை சேமிக்கிறது மற்றும் தொழிலாளர் வேலைபளுவைக் குறைக்கிறது.   நான்கு அடி வரிசை. ஒவ்வொரு வரிசையிலும் இரண்டு வரி நடவு. மண்ணின் வளத்தை அதிகரிக்க ஊடுபயிராக தக்கைப் பூண்டு/ சணப்பை நடவு செய்ய வேண்டும்.  இது மேலும் இளங்குருத்துப் புழு நோய் நிகழ்வைக் குறைக்கிறது மற்றும் விளைச்சலை அதிகரிக்கிறது.    கரணைகளை வரப்பின் ஒரு பக்கத்தில் நடவு செய்ய வேண்டும். வரப்பின் எதிர் புறத்தில் 10 செ.மீ உயரம் கொண்ட வரப்பில் ரைசோபியம் விதை நேர்த்தி செய்யப்பட்ட பசுந்தாள் விதைகளை 10 கிலோ/ எக்டர் விதைக்க வேண்டும்.நடவு செய்த 50-60 நாட்களுக்குப் பிறகு பசுந்தாள் உரத்தை அளிக்க வேண்டும் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்து கொண்டு பகுதி மண் அணைத்தல் வேண்டும்.களையெடுக்கும் கருவி கொண்டு களையெடுக்க வேண்டும் மற்றும் மண் அணைத்தல் மூலம் பணியாளர்கள் கூலி செலவைக் குறைக்கிறது மற்றும் மனித வேலைபளுவைக் குறைக்கிறது.

போக்கிடங்களை நிரப்புதல்வயலில் போக்கிடங்கள் இருந்தால் நடவு செய்த 30 நாட்களுக்குள் முளைத்த கரணைகளைக் கொண்டு நடவு செய்திட வேண்டும்இரண்டு பதியம் கரணைகளைக் கொண்டு சந்து நிரப்புதல் வேண்டும்/ 15-20 நாட்களான பாலித்தீன் பை நாற்றுகளை நடவு செய்வதன் மூலம் பயிர் நன்றாக வளரும்.போக்கிடங்களில் நடவு செய்த பிறகு மூன்று வாரங்கள் வரையிலும் வயலில் தேவையான ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்வது கரணைகள் நன்கு முளைத்து வளர ஏதுவாகும்.

தோகை பரப்புதல்சால்மேடுகளில் காய்ந்த கரும்புத் தோகையை சீராக 10 செ.மீ உயரத்திற்கு நடவு செய்த ஒரு வாரத்திற்குள் பரப்புதல் வேண்டும். இதனால் வறட்சி காலங்களில் கரும்பு தாக்குப்பிடித்து வளர்வதற்கும் கரும்பின் நீர் தேவை குறைவதற்கும், களைச் செடிகளின் ஆதிக்கம் குறைவதற்கும் மற்றும் இளங்குருத்துப் புழுவின் தாக்குதல் குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது. களிமண் வகைகளில் தோகைபரப்புதலைநடவு செய்த 21 நாட்களுக்குப பிறகு செய்திட வேண்டும். கரையான் தொல்லை அதிகம் உள்ள இடங்களில் தோகை பரப்புதலை செய்யாமல் இருத்தல் நன்று

.ஊடுபயிர் சாகுபடிதண்ணீர் தட்டுப்பாட்டு அற்ற பகுதிகளில் சோயா மொச்சை அல்லது உளுந்து அல்லது பச்சைப்பயறு போன்ற பயிர்களை கரும்பு நடவுசால் மேடுகளின் நடுவில் ஒரு வரிசையில் விதைக்கலாம். கொளுஞ்சி அல்லது சணப்பை ஊடுபயிராக நடவுசால் மேடுகளில் விதைத்த 45ம் நாள் பிடுங்கி கரும்பு வரிசைக்கு அருகே வைத்து மண் அணைப்பதின் மூலமாக மண்ணின் சத்துக்கள் அதிகரிப்பதோடு கரும்பில் அதிக மகசூல் அடையலாம். மேலும் கோ1 என்ற சோயா மொச்சை ஊடுபயிர் செய்வதின் மூலம் கரும்பின் மகசூல் குறையாமல் சோயா மொச்சையிலிருந்து ஒரு எக்டரக்கு 800 கிலோ வரையில் மகசூல் எடுக்கலாம்

களை நிர்வாகம்களை அதிகமாக உள்ள இடத்தில் பயிர் வரிசையில் ஒரு வரி களையெடுக்க வேண்டும் மற்றும் விதைத்த 30,60 மற்றும் 90ம் நாட்களில் மண்வெட்டி கொண்டு வரப்புகளில் களையெடுக்க வேண்டும்.  அட்ராஜின் 2கிலோ தெளிக்கவும் அல்லது எக்டருக்கு 750மிலி ஆக்ஸிப்ளுர்ஃபென் 600 லிட்டர் தண்ணீரில் கலந்து முளைக்குமுன் களைக்கொல்லியாக நடவு செய்த 3ம் நாளில் விசிறி வடிவ குழாய் கொண்ட நேப்சாக் தெளிப்பான் கொண்டு தெளிக்கவும்.விதைத்த 3-ம் நாள் களை முளைப்பதற்கு முன் அட்ராஜின் எக்டருக்கு 1.0 கிலோ அளிக்கவும். தொடர்ந்து விதைத்த 45-ம் நாள் களை முளைத்தபின் கிளைபோசேட் எக்டருக்கு 1.0 லிட்டர் அளிக்கவும். விதைத்த 90-ம் நாள் கைக்களை எடுக்க வேண்டும். களை முளைப்பதற்கு முன் களைக்கொல்லி தெளிக்கப்படவில்லையெனில், களை முளைத்த பின் விதைத்த 21-ம் நாளில் கிராமசோன் லிட்டர் + 2,4-D சோடியம் உப்பு எக்டருக்கு 2.5 கிலோ 600 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.ஒட்டுண்ணிக் களைகள் பிரச்சனை இருப்பின் களை முளைத்த பின் 2,4-D சோடியம் உப்பு எக்டருக்கு ஒரு கிலோ 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும். அருகில் பருத்தி அல்லது வெண்டை செடி இருந்தால் 2,4-D தெளிப்பதை தவிர்க்கவும். 20% யூரியாவை நேரடியாக அளிப்பதன் மூலம் சுடு மல்லியை கட்டுப்படுத்தலாம்.நடவுக்கு முன்னர் தெளிப்பாக விதைப்பதற்கு 21 நாட்கள் முன்னர் கிளைபோசேட் 2.0 கிலோவை அமோனியம் சல்பேட் 2% கலந்து அளிக்க வேண்டும்.தொடர்ந்து களை முளைத்த பின்ளர் கிளைபோசேட் 2.0 கிலோவை அமோனியம் சல்பேட் 2% கலந்து விதைத்த 30-ம் நாள் அளிக்க வேண்டும். இதன் மூலம் கோரைபுற்களை கட்டுப்படுத்தலாம். களை இல்லாத சூழலை உருவாக்கலாம்.களைக் கொல்லிகள் வேலை செய்யாவிட்டால் சிறிய மண்வெட்டி கொண்டு வரப்புகளில் நடவு செய்த 25, 55 மற்றும் 85-ம் நாளில் களையெடுக்க வேண்டும். வாய்க்காலில் கைக்கொத்து கொண்டு களைகளை நீக்க வேண்டும்.களை முளைத்த பின் நேரடி தெளிப்பாக ஃபெர்னோசோன் (2, 4 –D சோடியம் உப்பு) 2கிராம் + 10 கிராம் யூரியா ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து படர் கொடி களைகளை அழிக்க தெளிக்கலாம்.

மேலுரமிடுதல்மண்ணில் இடுதல்தண்ணீர் பற்றாக்குறை இல்லாத இடங்களில் 275 கிலோ தழைச்சத்து மற்றும் 112.5 கிலோ சாம்பல் சத்து/ எக் என்ற அளவில் மூன்று சம பாகங்களாகப் பிரித்து கரும்பு நடவு செய்த 30, 60 மற்றும் 90ம் நாள் இடுதல் வேண்டும்கிணற்றுப் பாசனமுடைய பகுதிகளில் 225 கிலோ தழைச்சத்து மற்றும் 112.5 கிலோ சாம்பல் சத்து/ எக் என்ற அளவில் மூன்று சம பாகங்களாகப் பிரித்து கரும்பு நடவு செய்த 30, 60 மற்றும் 90ம் நாள் இடுதல் வேண்டும்கிணற்றுப் பாசனமுடைய பகுதிகளில் 225 கிலோ தழைச்சத்து மற்றும் 112.5 கிலோ சாம்பல் சத்து/ எக் என்ற அளவினை மூன்று சம பாகங்களாகப் பிரித்து நடவு செய்த 30, 60 மற்றும் 90வது நாட்களில் இடுதல் வேண்டும். தழைச்சத்து சேமிப்புவேப்பம்புண்ணாக்கு கலந்த யூரியா67.5 கிலோ தழைச்சத்து/ எக் ரூ.27.5 கிலோ வேப்பம்புண்ணாக்கினை நடவு செய்த 30, 60 மற்றும் 90 நாட்களில் இட வேண்டும்குறிப்பு: வேப்பம்புண்ணாக்கு கலத்தல் தேவையான அளவு வேப்பம்புண்ணாக்கினைப் பொடி செய்து அதனை யூரியா உரத்துடன் நன்கு கலந்து 24 மணி நேரத்திற்கு வைத்து பின்னர் உபயோகிக்கலாம். இதன் மூலம் 75 கி தழைச்சத்து/எக் மிச்சமாகிறது.அசோஸ்பைரில்லம்12 பொட்டலம் (2400 கிராம்/ எக்) அசோஸ்பைரில்லம் அல்லது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நுண்ணுயிர் கலவை எண் 1 உடன் 25 கிலோ தொழு உரம் மற்றும் 25 கிலோ மண் கலந்து நடவு செய்த 30வது நாள் கரும்புப் பயிர் குத்துக்களுக்கு அருகே இட வேண்டும். இதே போல் கரும்பு நட்ட 60வது மற்றும் 90வது நாட்களில் இதே அளவில் இடுதல் வேண்டும். (கிணற்று நீர்ப்பாசனமுடைய இடங்களுக்கு)தொடராக இடுதல்கரும்புப் பயிர் வரிசைக்கு பக்கவாட்டில் களைக் கொத்தி கொண்டு சுமார் 5 செ.மீ. ஆழசால் அமைத்து அதில் உரங்களை தொடராக இட்டு பின்னர் மண் கொண்டு மூட வேண்டும்.ஆழ்துளை முறையில் இடுதல்255 கிலோ தழைச்சத்தினை யூரியா மற்றும் பொட்டாஷ் சேர்த்து15 செ.மீ. ஆழத்தில் கரும்புப் பயிரின் ஒவ்வொரு குத்துக்கு அருகே இடுவதன் மூலம் 20 கிலோ தழைச்சத்தினை கரும்பின் மகசூல் பாதிக்காத வகையில் சேமிக்கலாம்நுண்ணூட்டச்சத்து உரங்கள்:(a) துத்தநாக பற்றாக்குறையுள்ள மண்: அடியுரமாக எக்டருக்கு 37.5 கிலோ துத்தநாக சல்பேட்       அளிக்கவும்.(b) கரும்பில் துத்தநாக பற்றாக்குறை அறிகுறிகள்: இலைத் தெளிப்பாக 0.5% துத்தநாக சல்பேட்டை 1% யூரியாவுடன் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் பற்றாக்குறை மறையும் வரை தெளிக்க வேண்டும். (a) இரும்பு பற்றாக்குறையுள்ள மண்: அடியுரமாக எக்டருக்கு 100 கிலோ ஃபொரோஸ் சலடபேட் அளிக்கவும்.(b) கரும்பில் இரும்பு பற்றாக்குறை அறிகுறிகள்: இலைத் தெளிப்பாக 1% ஃபொரோஸ் சலடபேட்டை  1% யூரியாவுடன் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் பற்றாக்குறை மறையும் வரை தெளிக்க வேண்டும்.தாமிர பற்றாக்குறையுள்ள மண்ணில் தாமிர சல்பேட்டை எக்டருக்கு 5 கிலோ மண் வழியாக அளிக்க வேண்டும். மாற்றாக இலைத் தெளிப்பாக 0.2% தாமிர சல்பேட்டை இரண்டு முறை பயிர் வளர்ச்சியின் ஆரம்பத்தில் அளிக்க வேண்டும்.பொதுவான நுண்ணூட்டச்சத்து கலவை: கரும்பிற்கு எக்டருக்கு 50 கிலோ நுண்ணூட்டச்சத்துக் கலவையை அளிக்க வேண்டும். நுண்ணூட்டச்சத்துக் கலவை 20 கிலோ ஃபெரோஸ் சல்பேட், 10 கிலோ மாங்கனீசு சல்பேட், 10 கிலோ துத்தநாக சல்பேட், 100 கிலோ மக்கிய தொழுவுரத்துடன் கலந்த 5 கிலோ போரக்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவை நடவிற்கு முன்னர் மண்ணில் அளிக்க பரிந்துரைக்கப்படுகிறது.(அல்லது) கரும்பின் மகசூலை அதிகரிக்க தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நுண்ணூட்டக் கலவையை எக்டருக்கு 50 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்கலாம்.நுண்ணூட்டச்சத்து மற்றும் பேரூட்டச்சத்தின் பரிந்துரைக்கப்பட்ட அளவு

பேரூட்டச்சத்து

கரும்பு – நடவு பயிர் (சர்க்கரை ஆலைக்காக உற்பத்தி செய்யப்படும் கரும்பு) எக்டருக்கு 300:100:200 கிலோ தழைச்சத்து , மணிச்சத்து and சாம்பல் சத்து இட வேண்டும்.கரும்பு – மறுதாம்பு பயிர் (சர்க்கரை ஆலைக்காக உற்பத்தி செய்யப்படும் கரும்பு) எக்டருக்கு 300 + 25% அதிக தழைச்சத்து : 100 : 200 kg  மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து இட வேண்டும்.வெல்லத்திற்காக உற்பத்தி செய்யப்படும் கரும்பு (நடவு மற்றும் மறுதாம்பு பயிர்) எக்டருக்கு 225 : 62.5 : 112.5 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துகரும்பிற்கான உயிர் உரம்அசோஸ்பைரில்லம் என்பது கரும்பு வேர்களுக்கு ஊட்டமளிக்கும் பொதுவான தழைச்சத்தாகும் மற்றும் வருடத்திற்கு ஒரு ஏக்கருக்கு 50 முதல் 75 கிலோ வளிமண்டல தழைச்சத்தை நிவர்த்தி செய்கிறது. தற்சமயம் பயிரில் வாழும் பாக்டீரியம் (குலுகன்அசிடோபேக்டர் டைஅசோட்ராபிகஸ்) கரும்பில் அசோஸ்பைரில்லமை விட அதிகமாக தழைச்சத்தை நிலை நிறுத்துகிறது. இவை கரும்பு பயிர் முழுவதிற்கும் தழைச்சத்தை எடுத்துச் செல்கிறது மற்றும் தழைச்சத்தின் அளவை அதிகரிக்கிறது.  மண்ணில் பாஸ்பேட், இரும்பு மற்றும் துத்தநாக சத்தை வேர் வரை கொண்டு செல்கிறது. இது பயிர் வளர்ச்சியை அதிகரிக்கிறது மற்றும் கரும்பின் மகசூலையும் சாறில் இனிப்புத் தன்மையையும் அதிகரிக்கிறது. இது அசோஸ்பைரில்லத்தைவிட அதிக செயல்திறன் வாய்ந்தது.    த.வே.ப.கழக பயோபெர்ட் -1 பாஸ்போபாக்டீரியாவை பாஸ்பரஸ் கரைப்பானாக கரும்பு பயிருக்கு பரிந்துரைக்கப்படுகிறது.குலுகன்அசிடோபேக்டர் டைஅசோட்ராபிகஸ்  கொண்டு கரணை நேர்த்தி செய்தல்கரணைகளை நடுவதற்கு முன் எக்டருக்கு 10 பாக்கெட் (2 கிலோ)குலுகன்அசிடோபேக்டர் டைஅசோட்ராபிகஸை 250 லிட்டர் தண்ணீரில் கலந்து நேர்த்தி செய்ய வேண்டும்.  குலுகன்அசிடோபேக்டர் டைஅசோட்ராபிகஸ்  கொண்டு அடியுரமிடுதல் எக்டருக்கு 12 பாக்கெட் (2.4 கிலோ) விதைத்த 30, 50 மற்றும் 90-ம் நாள் நீர்ப்பாய்ச்சிய நிலையில் அடியுரமாக அளிக்க வேண்டும்.அதே முறையில் பாஸ்போ பாக்டீரியா அளித்தல்அடியுரம் இடாவிட்டால் அதே முறையில் விதைத்த 30, 50 மற்றும் 90-ம் நாள் நீர்ப்பாய்ச்சிய நிலையில் அடியுரமாக அளிக்க வேண்டும்.நுண்ணுயிர் நேர்த்தி நடவிற்கு சற்று முன்பு அளிக்க வேண்டும். நுண்ணுயிர் உரம் அளித்தவுடன் நடவு செய்து நீர்ப்பாய்ச்ச வேண்டும்.நுண்ணுயிர் உரத்தை இரசாயன உரத்துடன் கலக்க வேண்டாம்.பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்தை 25% குறைப்பதன் மூலம் நுண்ணுயிர் உரம் அளித்ததன் பலனை அடையலாம்.13.நீர் நிர்வாகம்கரும்புப் பயிருக்கு அதன் வளர்ச்சிப் பருவங்களுக்கு ஏற்ப நீர் பாய்ச்சுதல் வேண்டும்முளைப்புப் பருவம் (0-35 நாட்கள்)கரும்புப் பயிருக்கு அதன் முளைப்புப் பருவத்தில் குறைந்தபட்சமாக 2 முதல் 3 செ.மீ. ஆழத்திற்கு குறுகிய இடைவெளியில் நீர் பாய்ச்சுதல் மணல்சாரி இடங்களில் கரும்பின் முளைப்புத் திறனை மேம்படுத்தும். தெளிப்பு நீர்ப்பாசனம் பயிரின் முளைப்பு கால வளர்ச்சிப் பருவத்திற்கு ஏற்றதாகும். பின்னர் கிளைப்பு, வளர்ச்சி மற்றும் முதிர்ச்சிப் பருவத்தில் முறையே 0.75, 0.75 மற்றும் 0.50 பாசன நீர் மொத்த ஆவியாகுதல் (IW/CPE) விகிதத்தில் நீர் பாய்ச்சிட வேண்டும்பருவம்நீர்ப்பாசன இடைவெளிமணல் நிலம்களிமண்கிளைப்புப் பருவம் (36 முதல் 100 நாட்கள்)810வளர்ச்சிப் பருவம் (101 முதல் 270 நாட்கள்810முதிர்ச்சி பருவம் (271 நாட்கள் முதல் அறுவடை வரை)   1014சொட்டு நீர்ப்பாசனம்6 முதல் 7 மாத கரும்பு நாற்றங்காலிலிருந்து தேர்வு செய்யப்பட்ட விதைக்கரணைகளை 30 × 30 × 30 / 150 செ.மீ என்ற இடைவெளியில் இரு வரிசை பாரில் நடவு செய்யவும்ஒரு வரிசையில் மீட்டர் ஒன்றிற்கு எட்டு கரணைகளை வரப்பின் இரண்டு பக்கத்திலும் நடுவதன் மூலம் வாய்க்கால் நடவு முறையை அமைக்கலாம்.12 மிமீ அகல சொட்டு நீர்ப்பாசன பக்கவாட்டு குழாய்களை நடவு சால்மேட்டின் மத்தியில் இருபக்கவாட்டு குழாய்களுக்கான இடைவெளி 240 செ.மீ. இருக்கும் விதத்தில் அமைக்க வேண்டும். இந்த பக்கவாட்டு  குழாய்களிலிருந்து 75 செ.மீ. இடைவெளியில் ஒரு மணி நேரத்திற்கு 8 லிட்டர் பாசன சொட்டு நீர் வெளியாகும் விதமாக வடிவமைக்க வேண்டும். பக்கவாட்டு குழாய்களின் நீளம் 30 லிருந்து 40 மீட்டர்க்கு மேல் போகாமல் இருக்க வேண்டும்62.5 கி/ எக் என்ற அளவில் மணிச்சத்தினை அடியுரமாக நடவிற்கு முன்னர்இடவேண்டும்தழை மற்றும் சாம்பல் சத்தினை முறையே 275 1125 கி/ எக். என்ற அளவில் சொட்டு நீர்க் குழாய்களின் வழியே ’வென்ட்சூரி’ உபகரணம் கொண்டு 10 முதல் 12 பகுதியாக நடவு செய்த 15 முதல் 180 நாட்கள் வரை கொடுக்க வேண்டும்குறைந்த மற்றும் மிதமான ஊட்டச்சத்து வயல்களில் 50 சத தழை மற்றும் சாம்பல் சத்துக்களை அதிக அளவில் இட வேண்டும்தண்ணீரானது மண் மற்றும் பயிரிலிருந்து ஆவியாக வெளியேறுதலைப் பொருத்து கரும்பிற்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை சொட்டு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும் நிலத்தடியில் 120+40 செ.மீ பக்கவாட்டு இடைவெளியில் கரும்பை இரண்டு புறமும் நடவு செய்ய வேண்டும். சொட்டு நீர் பாசன உரமிடுதல் மகசூலை அதிகரிக்கும்பரிந்துரைக்கப்பட்ட 125 % தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தை (275:63:112..5 கிலோ/எக்டர்) குழி வழி முறை உரப்பாசனம் அளிப்பதன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம்.

எதிர்பாராசூழ்நிலைக்கேற்ற நிவாரணத் திட்டம்இடர்பாடான சூழ்நிலைகளில் படிப்படியாக சால்களை அகலப்படுத்துதல்நடவு சமயத்தில் 30 செ.மீ. அகலத்தில் நீர்ப்பாசனம் வாய்க்கால் அமைத்து பின்னர் அதனை 45 செ.மீ. அளவிற்கு நடவு செய்த 45ம் நாள் முதல் மண் அணைக்கும்போது அகலப்படுத்தி மேலும் 90ம் நாள் மேற்கொள்ளும் ஆழப்படுத்துவதின் மூலம் 35 சதவிகிதத் தண்ணீரினைச் சேமிக்கலாம்வறட்சி நிர்வாகம்கரும்பு விதைக்கரணைகளை 80 கிலோ நீர்த்த சுண்ணாம்புடன் 400 லிட்டர் தண்ணீர் கலந்த கலவையில் 1மணி நேரம் ஊறவைத்தல்30 செ.மீ. ஆழமான நடவு சால்களில் கரணைகளை நடவு செய்தல்பொட்டாஷ் மற்றும் யூரியா 2.5 சத சரைசலை வறட்சி காலங்களில் 15 நாட்கள் இடைவெளியில் தெளித்தல்6 சத கயோலின் (60 கிராம் கயோலின் 1 லிட்டர் தண்ணீருக்கு) தெளித்து நீர்த்தேவையினைக் குறைத்தல்தண்ணீர் தட்டுப்பாடான பகுதியில் மாறுசால் அல்லது விடுசால் பாசனம் நன்மைக்குறியதாகும்நடவு செய்த 120ம் நாள் கூடுதலாக 125 கி பொட்டாஷ்/ எக் என்ற அளவில் இட வேண்டும்கடைசி உழவின் பொழுது தென்னை நார்க்கழிவு 25 டன்/ எக் என்ற அளவில் இடுதல்காய்ந்த சோகைகளை 5வது மாதம் உரித்து கரும்பு வரிசைக்கு இடையே பரப்புதல்வறட்சி மேலாண்மைநீர் பற்றாக்குறையை சரிகட்ட எத்தரல் 200 பி.பி.எம். அல்லது சுண்ணாம்புக் கரைசல் (80 கிலோ சுண்ணாம்பை 400 லிட்டர் நீரில் கரைத்து கிடைக்கும் கரைசல்) போன்றவற்றில் விதைக்க கரணைகளை ஒரு மணி நேரம் நனைத்து வைத்திருந்த 30 செ.மீ. ஆழத்தில் நடவு செய்ய வேண்டும். பின்பு நீர் பற்றாக்குறை காலங்களில்  பொட்டாஷ் மற்றும் யூரியா 2.5 சதவிகித கரைசல் ஒவ்வொன்றையும் 15 லிட்டர் நீரில் கரைத்து கிடைக்கும் கரைசல்) கரைசலை தெளிப்புச் செய்ய வேண்டும். நீர்ப்பற்றாக்குறையான சூழ்நிலைகளில் மாற்று சால் மற்றும் சால் விட்டு சால் பாசன முறைகளைக் கையாளுவது நன்மை பயப்பனவாக அமைகிறது.14. அறுவடை முன் நேர்த்திகள்அ.கரும்பு முதிர்ச்சி ஊக்கி தெளித்தல்சோடியம் மெட்டா சிலிகேட் 4 கிலோ / எக் என்ற அளவில் 750 லிட்டர் தண்ணீர் கலந்து கரும்பு நடவு செய்த 6ம் மாதம் தெளிக்க வேண்டும். பின்னர் அதே இரசாயனத்தை 8 மற்றும் 10வது மாதத்தில் இருமுறை தெளிப்பதன் மூலம் கரும்பு மகசூல் மற்றும் சர்க்கரை கட்டுமானத்தை அதிகரிக்கலாம்.ஆ.கரும்பின் முதிர்ச்சி அறிதல்கரும்பின் முதிர்ச்சியை பிரிக்ஸ் மீட்டர் என்ற கருவியின் மூலம் அறியலாம். 18 முதல் 20 சத பிரிக்ஸ் அளவு கரும்பின் முதிர்ச்சியை குறிக்கும். கரும்பின் நுனி மற்றும் கீழ் பகுதி பிரிக்ஸ் அளவு 11 விகித அளவில் இருத்தல் வேண்டும்.15. அறுவடைமுன்பட்ட கரும்பு இரகங்களை 10 முதல் 11 மாதத்திற்குள்ளும் பின்பட்ட இரகங்களை 11 முதல் 12 மாதத்திற்குள்ளும் அறுவடை செய்ய வேண்டும்கரும்பினை அதன் உச்ச கட்ட முதிர்ச்சி காலத்தில் அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்யும்போது நடவுப் பயிராக இருந்தாலும் அல்லது மறுதாம்புப் பயிராக இருந்தாலும் தரையோடு தரையாக பூமி மட்டத்திற்கு அறுவடை செய்ய வேண்டும்மறுதாம்பு பயிர்1.நடவு கரும்பின் அறுவடைக்கு பின் செய்ய வேண்டியவைகரும்பு அறுவடைக்குப் பின் கீழ்க்கண்ட செய் நேர்த்திகளை 10 நாட்களுக்குள் முடிப்பதன் மூலமாக கட்டை கரும்பின் துளிர்ப்பு மற்றும் வளர்ச்சி சீராக அமையும் கரும்பு தோகைகளை வயலில் இருந்து வெளியே எடுத்துவிட வேண்டும்.தோகைகளை எரித்தல் கூடாது.மண் நிறைக்க நீர்ப்பாசனம் செய்யவும் நல்ல ஈரப்பதத்தில் கூரிய மண்வெட்டி கொண்டு மண் மட்டத்திற்கு கீழ் 4-6 செ.மீ. அளவிற்கு கரும்பு கட்டையை சீவ வேண்டும். கூப்பர் கலப்பை கொண்டு கரும்பு பயிரின் இரு கரைகளையும் உடைத்துவிட வேண்டும். கட்டைக் கரும்பின் போக்கிடங்களை கட்டை சீவிய 30 நாட்களுக்குள் நிரப்ப வேண்டும். இதற்கு அதே நிலத்தில் இருந்து எடுக்கப்பட்ட கரும்பு குத்துக்களை பிரித்து நடவு செய்யலாம். அல்லது பாலித்தீன் பை நாற்றுகளைக் கொண்டும் போக்கிடங்களை நிரப்பலாம். நடவு பயிருக்கு பரிந்துரை செய்யப்படும் அதே அளவில் அங்கக உரம் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரத்தினை இடுதல் வேண்டும்மறுதாம்புப் பயிர் நிர்வாகம்ஐஐ.பயிர் நிர்வாகம்25 சத அதிகப்படியான தழைச்சத்தினை கட்டைவிட்ட 5-7 நாட்களில் அளித்தல்பயிர் இரும்புசத்து பற்றாக்குறையால் மஞ்சளாக மாறும் போது அன்னபேதி உப்பினை 2.5 கி/எக் என்ற அளவில் கட்டைவிட்ட 15ம் நாள் தெளித்தல் பயிர் மீண்டும் மஞ்சளாக இருந்தால்15 நாள் இடைவெளியில் திரும்பவும் தெளிக்க வேண்டும். கடைசி தெளிப்பபுடன் எக்டருக்கு 2.5 கிலோ யூரியாவையும் சேர்த்துக்கொள்ளலாம்கட்டைவிட்ட 20வது 40வது மற்றும் 60வது நாளில் களையெடுத்தல்முதல் மேலுரத்தினை 25ம்நாளும், 2வது மேலுரத்தினை 45 முதல் 50 நாட்களுக்குள் இடுதல்இறுதி மேலுரத்தினை 70-75 நாட்களுக்குள் இட வேண்டும்கட்டைவிட்ட 50 வது நாளில் பகுதி மண் அணைத்தல்90வது நாள் கடைசி மண் அணைத்தல்120வது மற்றும் 180வது நாள் தோகை உரித்தல்180 வது நாள் விட்டம் கட்டுதல்11 மாதத்திற்கு பிறகு அறுவடை செய்தல்ஊ. கரும்பு விதை (நாற்றங்கால் பயிர்)கரும்பு நடவு பயிர் பயிரிடுவதற்கு 6 முதல் 7 மாதத்திற்கு முன்னர் கரும்பு விதை நாற்றங்கால் நடவு செய்ய வேண்டும்.

விதை நாற்றங்கால் சாகுபடியில் கவனிக்க வேண்டியவைதோகை உரித்தல் கூடாதுவிட்டம் கட்டுதல் கூடாது6 முதல் 7 மாதத்தில் அறுவடைகரணை தயார் செய்யும் பொழுது காய்ந்த சோகைகளை கைகளால் நீக்க வேண்டும்பரு அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்விதைக்கரும்பினை மற்ற இடங்களுக்கு எடுத்து செல்ல வேண்டும் என்றால் முழு கரும்பாகவும் தோகை நீக்காமலும் இருக்க வேண்டும்50 கிலோ யூரியாவை மேலுரமாக விதை கரும்பு அறுவடைக்கு ஒரு மாதம் முன்னர் இடுதல் அவசியம்நோய், பூச்சிதாக்குதல் இன்றி பராமரிக்க வேண்டும்பயிர் வினையியல்எக்டருக்கு 1.0, 1.5 மற்றும் 2 கிலோ த,வே.ப.கழக கரும்பு பூஸ்டரை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து விதைத்த 45, 60 மற்றும் 75-ம் நாள் அளிப்பதன் மூலம் கரும்பின் வளர்ச்சி மற்றும் எடையை அதிகரிக்கலாம். கணுவின் நீளம், கரும்பு மகசூல் மற்றும் இனிப்புத் தன்மையை அதிகரிக்கிறது மற்றும் வறட்சியை தாங்கும் தன்மையை அளிக்கிறது.

No comments:

Post a Comment