இரண்டு ஏக்கர் சவால்!
இப்பல்லாம் இயற்கை விவசாயம்னு பேசறதே பலருக்கும் ஃபேஷனாப் போச்சு. அதெல்லாம் சுத்த புரூடாதான். இயற்கை விவசாயத்துல எனக்கு இவ்வளவு கிடைச்சுது... உனக்கு இவ்வளவு கிடைச்சுதுனு பெருமைக்காக கதைவிட்டுக்கிட்டிருக்காங்க. அப்படியெல்லாம் விவசாயம் செய்து லாபம் பாக்கவேமுடியாது. கைக்காசை செலவு பண்ணிட்டு, வெட்டிபந்தாவுக்காக 'இயற்கை விவசாயம்'னு பேசிக்கிட்டு திரியறாங்க’’ என்று ஒரு சிலரிடமிருந்து 'பசுமை விகடன்' அலுவலகத்துக்கு சூடான கேள்விக்கணைகள் பாய்ந்து கொண்டிருக்கின்றன.''இதற்கு பதில் என்னவாக இருக்கும்?'' என்றபடி இயற்கை விவசாயிகளின் பட்டியலை ஒரு நோட்டமிட்டோம். அதில், நமக்கு பளீரெனப்பட்டவர் திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்த பிரபல இயற்கை விவசாயி அந்தோணிசாமி. ஏக்கர் கணக்கில் இயற்கை விவசாயம் செய்து சாதித்துக்கொண்டிருப்பவர்களில் முக்கியமானவர் அந்தோணிசாமி. அவரைத் தொடர்பு கொண்டு கேட்டதும், சட்டென்று குரலை உயர்த்தி,''ஐயா.... இயற்கை விவசாயிகளைப்பத்தி இப்படி கேவலமா பேசறதே சிலருக்குப் பொழப்பாப் போச்சி. நானே கிட்டத்தட்ட பதினைஞ்சி வருஷமா இயற்கை விவசாயம் செய்து சாதிச்சிக்கிட்டிருக்கேன். பலர் நாப்பது வருஷமா செய்துகிட்டிருக்காங்க. சொல்லப் போனா, ஆயிரக்கணக்கான வருஷமா இயற்கை விவசாயம் நடந்துக்கிட்டிருக்கு. ஆனா, இந்த நாப்பது வருஷத்துல வந்த ரசாயன விவசாயத்தை கையில எடுத்துக்கிட்டு, கேள்விக் கேட்கறாங்கன்னா அவங்களை என்னனுய்யா சொல்றது. வாதத்துக்கு மருந்து கொடுக்கலாம்... பிடிவாதத்துக்கு எந்த மருந்தய்யா கொடுக்கறது?'' என்று ஆதங்கப்பட்டவர்,''அவங்கள விடுங்கய்யா... நீங்க முதல்ல நேர்ல வந்து என்னோட மண்ணைப் பாருங்க. அதுவே உங்களுக்கு பதில் சொல்லும்'' என்று அழைப்பு விடுத்தார்.மறுநாளே, புளியங்குடி அருகே சிந்தாமணி கிராமத்திலிருக்கும் அந்தோணிசாமியின் பண்ணைக்குப் போய்ச்சேர்ந்தோம். கூப்பிடு தொலைவில் தெரியும் மேற்குதொடர்ச்சி மலையில் இருந்து சில்லென்று காற்று வேகமாக வீசிக் கொண்டிருக்க... அதையும் தாண்டி வேகமாக தன் தோட்டத்தில் இயங்கிக்கொண்டிருந்தார் அந்தோணிசாமி. அவர் முன்பாக போய் நின்று அறிமுகப்படுத்திக் கொண்டதும், தலையிலிருந்த பச்சைத் துண்டை தோளுக்கு மாற்றியபடியே வரவேற்றார். அடுத்த நிமிடமே குற்றால அருவியைப் போல வார்த்தைகள் சலசலவென ஆர்ப்பரித்தன.''1957-ம் வருஷம்தான் நான் விவசாயத்துல இறங்கினேன். அப்ப ரசாயன உரமெல்லாம் அதிகம் கிடையாது. '5 கிலோ அமோனியம் சல்பேட் வாங்கினா, மாட்டுவண்டிச் சக்கரத்துக்கு போடற இரும்புப்பட்டை ரெண்டு இலவசமா தர்றோம்'னு எங்க ஊரு கிராம அதிகாரி விளம்பரப்படுத்தினார். இரும்புக்கு பற்றாக்குறை இருந்த காலம் அது. அதைப் பயன்படுத்திக்கிட்டுதான் ரசாயன உரத்தை மக்கள்கிட்ட பிரபலபடுத்த ஆரம்பிச்சாங்க. இரும்புப்பட்டை கிடைக்குதேனு பலரைப்போல நானும் ரசாயன உரத்தை வாங்கிட்டு வந்து வயல்ல போட்டேன். பயிர் சும்மா 'குபீர்'னு வளர்ந்துச்சி. கரும்பச்சை நிறத்துல பயிரைப் பார்க்கவே பரவசமா இருந்துது. அதுக்குப்பிறகு ரசாயன உரத்துமேல பெரிய மோகம் வந்துபோச்சி.67-ம் வருஷம் ஏக்கருக்கு 5 கிலோ அமோனியம் சல்பேட் போட்டேன். ஆனா, பெரிசா விளைச்சல் இல்லை. 'நைட்ரஜன் சத்து மட்டும் பத்தாது, ஏ.பி-யும் போடுங்க'னு விவசாய அதிகாரிங்க சொன்னாங்க. அதன்படியே போட்டேன். ஏக்கருக்கு 60 மூட்டை நெல் விளைஞ்சுது. மூணாவது வருஷம் அந்த விளைச்சல் காணாம போச்சி.அடுத்ததா கம்பு போட ஆரம்பிச்சேன். 70-ம் வருஷம் ரசாயன உரத்தை அள்ளிக் கொட்டிக்கிட்டு கம்பு போட்டதுல ஏக்கருக்கு 1,200 கிலோ மகசூல் கிடைச்சது. இதுக்கு என்.பி.கே. உரம் 200 கிலோ போட்டேங்கறது கவனிக்கவேண்டிய விஷயம். இவ்வளவு உரம் போட்டதுக்கு கிடைச்ச மகசூல், கொஞ்சம் கூட கட்டுப்படியான விஷயமா இல்லை. இதுக்குக் காரணம் மண்ணோட தன்மை மாறிப்போனதுதான். எவ்வளவு ரசாயன உரத்தைக் கொட்டியும் விளைச்சல் பெருகல.'மண்ணுல ‘சிங்’ நுண்ணூட்டப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும்'னு 74-ம் வருஷம் அதிகாரிங்க சொன்னாங்க. சரினு 'சிங்'கும் போட்டேன். அப்புறம், 'அயன் (இரும்புச் சத்து) போடுங்க'னு சொன்னாங்க. அதையும் போட்டேன். போரான், மாங்கனீசுனு வரிசையா விவசாய அதிகாரிங்க சொன்னதையெல்லாம் போட்டேன். போகப்போக இடுபொருள் செலவு அதிகரிச்சி, கடனும் கூடிக்கிட்டே போச்சி. ஆனா, விளைச்சல் மட்டும் கூடவே இல்ல. 87-ம் வருஷத்துல விவசாயமே செய்யமுடியாத அளவுக்கு நிலைமை முத்திப்போச்சி. ஏக்கருக்கு ஒன்றரை டன் கூட நெல் விளைச்சல் கிடைக்கல'' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே எலுமிச்சைச்சாறு மற்றும் கரும்புச்சாறு கலந்த பானம் வந்து சேர்ந்தது. அதை நாம் சுவைத்துக் கொண்டிருக்க, சுவாரஸ்யமாக தொடர்ந்தார் அந்தோணிசாமி.''இதுக்கு என்னதான் வழி... கடன்ல இருந்து எப்படி தப்பிக்கிறதுனு ரொம்ப யோசிச்சிக்கிட்டே இருந்தேன். எங்க பகுதி விவசாய சேவா சங்கத்தைச் சேர்ந்த கோமதிநாயகம் அண்ணாச்சிகிட்ட பேசினேன். கோயம்புத்தூர் விவசாயப் பல்கலைக்கழகத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போனார். 'விவசாயம் நஷ்டமாகிப் போச்சி. கொட்டில் முறையில் ஆடு வளர்க்கலாமா?'னு அங்க கேட்டோம். 'நாங்களே அதுல ஜெயிக்க முடியல. ஆடு வளர்க்கறதையே நிறுத்திட்டோம்'னு சொல்லிட்டாங்க. எப்படியாவது கடனை அடைக்கணுமேனு வெறியோட அலைஞ்சி வெளிநாட்டு ஆடுகளை வாங்கிட்டு வந்து வளர்த்தேன். அதோட கழிவுல இருந்து 11% நைட்ரஜன் சத்து கிடைச்சுது. அதை வயல்ல போட்டேன். ரொம்ப வருஷத்துக்குப் பிறகு என்னோட மண்ணுல ஒரு பூரிப்பு உண்டாச்சி. 'அடடா இயற்கை உரம் என்ன அற்புதமா வேலை செய்யுது?'னு எனக்குள்ள ஒரு சந்தோஷம். அதேசமயம், அந்த ஆடுங்க அத்தனையும் துடி, துடிச்சி இறந்து போச்சி. நான் ஒரு பேராசை புடிச்சவன். குளிர் பிரதேசத்துல வளர்ற ஆட்டைக் கொண்டு வந்து, வெக்கைப் பிடிச்ச இந்த மண்ணுல வளர்க்க நினைச்சது என்னோட தப்புதானே..:!மனசும், உடம்பும் சோர்ந்து போயி உடம்பு ரொம்ப பலவீனமாயிடுச்சி. இந்தக் கவலையிலயே கழுத்து எலும்பு தேஞ்சி நிமிந்து கூட பார்க்க முடியாத நிலை. 'என்னடா நம்ம பொழப்பு இப்படி போயிடுச்சே'னு யோசனை செஞ்சப்ப, ஆரோக்கியமான உணவு இருந்தா எதையும் சாதிக்கலாம்னு தோணுச்சி. அதுக்கு இயற்கை விவசாயம்தான் சரிப்பட்டு வரும்னு 90-ம் வருஷம் ஒரு ஏக்கர்ல ரசாயன உரம், பூச்சி மருந்து எதையும் பயன்படுத்தாம, இயற்கை உரத்தை மட்டுமே போட்டு 15 மூட்டை நெல்லை விளைவிச்சேன். அதைச் சாப்பிட, சாப்பிட உடம்பு கொஞ்சம் கொஞ்சமா தேறிச்சி. ஆனா, நான் வாங்கின கடன்... வட்டி குட்டி போட்டு பல லட்சமா மாறிப்போயி ருந்துச்சி.இப்போ பிரதமரா இருக்கிறாரே மன்மோகன் சிங்... இந்த புண்ணியவான் 91-ம் வருஷத்துல மத்திய நிதி அமைச்சர். அவரு கொண்டு வந்த 'அடுக்கு முறை வட்டிக் கொள்கை' மூலமா... 56 லட்ச ரூபாய் கடன் காரனாயிட்டேன். அதைக் கட்ட முடியாம, தீர்ப்பாயம் முன்னாடி போய் கைகட்டி நின்னேன். 'நீதிபதி அய்யா, என்கிட்ட பணம் கிடையாது. இப்பக்கூட கடன் வாங்கிகிட்டுதான் மெட்ராஸ் வந்து சேர்ந்திருக்கேன். எப்படியாவது தயவு பண்ணுங்க'னு கையெடுத்துக் கதறி அழுதேன்'’ என்று சொல்லி மௌனமானவர், முகத்தை பச்சைத் துண்டால் துடைத்துக்கொண்டு தொடர்ந்தார்.‘‘அந்த நீதிபதி நல்ல மனுஷன். 'இரண்டு ஆண்டுகள் அவகாசம் தருகிறேன்'னு சொன்னார். ஊர் திரும்பினதும் ராப்பகலா பாடுபட்டோம். மண்ணை மாத்தினா... எல்லாமே மாறும்னு நிலத்துல மாட்டுச் சாணத்தையும், கோமியத்தையும் போட ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா நிலம் வளமாச்சி. இது எல்லாம் 1992-ம் வருஷம் நடந்த சம்பவம்.கடனை அடைக்க எனக்காகவே ஒரு பயிரு காட்டுல காத்துகிட்டு இருந்துச்சி. அதுதான் எலுமிச்சை. எங்க பகுதியில எலுமிச்சை ரொம்பப் பிரபலம். காட்டுல உள்ள ஒரு வகை எலுமிச்சை செடியை எடுத்துகிட்டு வந்து, நாட்டுச் செடியோட ஒட்டுக்கட்டினேன். அமோக விளைச்சல். கொஞ்சம் கொஞ்சமா கடனையெல்லாம் அடைச்சிட்டேன். வறட்சியைத் தாங்கி வளர்ந்த இந்த ரகத்துக்காக இப்ப குடியரசு தலைவர் அப்துல் கலாம் கூட விருது கொடுத்திருக்கார்.''நடவு செஞ்சப்ப உழவு ஓட்டினதோட சரி. களை எடுக்கவும் இல்ல. மருந்து அடிக்கவும் இல்ல. உரம் போட வேண்டிய வேலையும் இல்லாம போயிடுச்சி. வருஷம் முழுக்க எலுமிச்சை காய்ச்சி தொங்குது. ஒவ்வொரு மரத்துலயும் மூவாயிரம் காய் காய்ச்சிக்கிட்டிருக்கு. ஏக்கருக்கு நூறு மரம் நடவு செய்திருக்கேன்.தமிழ்நாட்டோட சராசரி கரும்பு விளைச்சல் ஏக்கருக்கு 30 டன்தான். இது இந்திய சராசரியை விட அதிகமான விளைச்சல். நான் ஏக்கருக்கு 60 டன் எடுக்கிறேன்'' என்று சொல்லி நிமிர்ந்து பார்க்க வைத்தவர், கரும்பு தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார்.''செருப்பைக் கழட்டிவிட்டுப்புட்டு வாங்க. இது மரியாதைக்குரிய விஷயமில்ல. வெறும் காலோட நடந்தாத்தான் இந்த மண்ணோட தன்மையை உணரமுடியும்ய்யா. எவ்வளவு கடுமையா வெயில் அடிச்சாலும் கரும்பு தோட்டத் துக்குள்ள வந்தா 4 டிகிரி வெயில் குறைஞ்சிடும். 2003-ம் வருஷம் மண்பரிசோதனை செஞ்சி பார்த்ததுல, 1957-ம் வருஷத்துக்கு முன்ன இருந்த மாதிரி நிலம் மாறிடுச்சி. அப்படியே இயற்கை எரு போடறதையும் நிறுத்திட்டேன். குப்பை உரம் கூட போடாம ஏக்கருக்கு 40 மூட்டை நெல் அறுவடை செய்றேன். மீன்அமீனோ அமிலம், பஞ்சகவ்யா இது ரெண்டையும் தான் 15 நாளுக்கு ஒரு முறை மாத்தி, மாத்தி தெளிக்கிறேன். பூச்சி, பூஞ்சாண நோய் வந்துச்சினா, கத்தாழை, துளசி, வெள்ளைப் பூண்டு கலந்து பூச்சி விரட்டியா தெளிப்பேன். எல்லாம் வந்தவழியே ஓடிப்போயிடும். நான் இயற்கை விவசாயத்துக்கு திரும்பி 14 வருஷமாகுது. அன்னிலிருந்து வைத்திய செலவே இல்லாம போச்சி... எம்மனைவிக்கு இருந்த சர்க்கரை நோயும் கட்டுப்பாட்டுக்குள்ள வந்துருச்சி.வெளியிலிருந்து எதையும் நான் வாங்கத் தேவையே இல்லை. கரன்ட்டு, டீசல், சமைக்கற உப்பு இதுமாதிரியான அத்தியாவசியமானதைத் தவிர மத்ததெல்லாம் தோட்டத்துலயே விளையுது. ஒரு காலத்துல 56 லட்சம் ரூபாய் கடன்காரனா இருந்த அந்தோணிசாமி இன்னிக்கு லட்சாதிபதியா இருக்கேன். 'இயற்கை விவசாயங்கறதெல்லாம் ஒரு ஏக்கர், ரெண்டு ஏக்கர்ல மட்டும்தான் செய்ய முடியும்'னு போறபோக்குல சிலர் சொல்லிக்கிட்டு இருக்காங்க. ஒரு ஏக்கர், ரெண்டு ஏக்கர் மட்டுமில்ல, நூத்துக்கணக்கான ஏக்கர்லயும் இயற்கை விவசாயத்தை செய்யமுடியும். அதுக்கு நான்தான் உதாரணம். இயற்கை விவசாயம் செஞ்சா, இப்ப இருக்கற மாதிரியான மூணு இந்தியாவுக்கு சோறு போடமுடியும்.இதுக்குப்பிறகும் இயற்கை விவசாயத்தை நம்பாம... மோசடி, அது... இதுனு சொல்றது நல்லது இல்ல. ரசாயன விவசாயத்தைக் கரைச்சி குடிச்சி கரைகண்ட பெரிய ஆளுங்க, விவசாய படிப்பு படிச்சுப்புட்டு அரசாங்கத்துல உயர் வேலையில இருக்கற விஞ்ஞானிங்க, பெரிய பெரிய உரக்கம்பெனிகளோட உயர் ஆலோசகரா இருக்கறவங்களுக்கு நான் ஒரு சவால் விடறேன். அதுல அவங்க ஜெயிச்சுக்காட்டட்டும்.இது அஞ்சி வருஷ போட்டி. போட்டிக்கு வர்றவருக்கு என்னோட நிலத்துல ரெண்டு ஏக்கரை ஒதுக்கித் தருவேன். அதுல ரசாயன உரம், பூச்சி மருந்தெல்லாம் போட்டு அவர் செலவுல அவர் பயிர் செய்யட்டும். அதுல விளையறதையே அவரோட குடும்பம் சாப்பிட்டுகிட்டு, மீதியை வித்து வருமானம் பார்க்கட்டும்.அதேபோல ரெண்டு ஏக்கர் நிலத்தை ஒதுக்கி நான் இயற்கை விவசாயம் செய்வேன். அதுல விளையறதையே சாப்பிட்டு, மீதியை வித்து வருமானம் பார்ப்பேன். அத்தனைக் கணக்கு வழக்கையும் பக்காவா பதிவு பண்ணிக்கணும். ஆரம்பத்துலயே ரெண்டு நிலத்தோட மண்வளம், ரெண்டு குடும்ப உறுப்பினர்களோட உடல்நிலை எல்லாத்தையும் பரிசோதனை செஞ்சிக்கணும். 5 வருஷ முடிவுல கிடைச்ச லாபம், மண்ணோட தன்மை, குடும்ப உறுப்பினர்களோட உடல்நலம் இதையெல்லாம் பரிசோதிச்சி பாப்போம். ரசாயன உரம் போட்ட நிலத்தோட வளம், இயற்கை உரம்போட்ட நிலத்தைவிட வளம் கூடியிருந்தா, லாபம் அதிகமா கொடுத்திருந்தா, குடும்பத்துல உள்ளவங்களுக்கு எந்த நோயும் வராம இருந்தா ஒரு லட்ச ரூபாய் பரிசும், 'வேளாண் செம்மல்'னு பட்டமும் தரத்தயாரா இருக்கேன்.அப்படி இல்லாம அவர் தோத்துப் போயிட்டா... என்ன செய்யணுங்கறத பிறகு சொல்றேன்’’ என்று கட்டை விரலை உயர்த்தினார் அந்தோணிசாமி.சவாலுக்குத் தயாராக இருப்பவர்கள் மட்டுமல்ல... அவரின் பயிர் தொழில்நுட்பத்தை தெரிந்து கொள்ள விரும்புபவர்களும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: அந்தோணிசாமி, வடக்கு ரத வீதி, சிந்தாமணி, புளியங்குடி, திருநெல்வேலி மாவட்டம், அலைபேசி: 94435-82076.
இப்பல்லாம் இயற்கை விவசாயம்னு பேசறதே பலருக்கும் ஃபேஷனாப் போச்சு. அதெல்லாம் சுத்த புரூடாதான். இயற்கை விவசாயத்துல எனக்கு இவ்வளவு கிடைச்சுது... உனக்கு இவ்வளவு கிடைச்சுதுனு பெருமைக்காக கதைவிட்டுக்கிட்டிருக்காங்க. அப்படியெல்லாம் விவசாயம் செய்து லாபம் பாக்கவேமுடியாது. கைக்காசை செலவு பண்ணிட்டு, வெட்டிபந்தாவுக்காக 'இயற்கை விவசாயம்'னு பேசிக்கிட்டு திரியறாங்க’’ என்று ஒரு சிலரிடமிருந்து 'பசுமை விகடன்' அலுவலகத்துக்கு சூடான கேள்விக்கணைகள் பாய்ந்து கொண்டிருக்கின்றன.''இதற்கு பதில் என்னவாக இருக்கும்?'' என்றபடி இயற்கை விவசாயிகளின் பட்டியலை ஒரு நோட்டமிட்டோம். அதில், நமக்கு பளீரெனப்பட்டவர் திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்த பிரபல இயற்கை விவசாயி அந்தோணிசாமி. ஏக்கர் கணக்கில் இயற்கை விவசாயம் செய்து சாதித்துக்கொண்டிருப்பவர்களில் முக்கியமானவர் அந்தோணிசாமி. அவரைத் தொடர்பு கொண்டு கேட்டதும், சட்டென்று குரலை உயர்த்தி,''ஐயா.... இயற்கை விவசாயிகளைப்பத்தி இப்படி கேவலமா பேசறதே சிலருக்குப் பொழப்பாப் போச்சி. நானே கிட்டத்தட்ட பதினைஞ்சி வருஷமா இயற்கை விவசாயம் செய்து சாதிச்சிக்கிட்டிருக்கேன். பலர் நாப்பது வருஷமா செய்துகிட்டிருக்காங்க. சொல்லப் போனா, ஆயிரக்கணக்கான வருஷமா இயற்கை விவசாயம் நடந்துக்கிட்டிருக்கு. ஆனா, இந்த நாப்பது வருஷத்துல வந்த ரசாயன விவசாயத்தை கையில எடுத்துக்கிட்டு, கேள்விக் கேட்கறாங்கன்னா அவங்களை என்னனுய்யா சொல்றது. வாதத்துக்கு மருந்து கொடுக்கலாம்... பிடிவாதத்துக்கு எந்த மருந்தய்யா கொடுக்கறது?'' என்று ஆதங்கப்பட்டவர்,''அவங்கள விடுங்கய்யா... நீங்க முதல்ல நேர்ல வந்து என்னோட மண்ணைப் பாருங்க. அதுவே உங்களுக்கு பதில் சொல்லும்'' என்று அழைப்பு விடுத்தார்.மறுநாளே, புளியங்குடி அருகே சிந்தாமணி கிராமத்திலிருக்கும் அந்தோணிசாமியின் பண்ணைக்குப் போய்ச்சேர்ந்தோம். கூப்பிடு தொலைவில் தெரியும் மேற்குதொடர்ச்சி மலையில் இருந்து சில்லென்று காற்று வேகமாக வீசிக் கொண்டிருக்க... அதையும் தாண்டி வேகமாக தன் தோட்டத்தில் இயங்கிக்கொண்டிருந்தார் அந்தோணிசாமி. அவர் முன்பாக போய் நின்று அறிமுகப்படுத்திக் கொண்டதும், தலையிலிருந்த பச்சைத் துண்டை தோளுக்கு மாற்றியபடியே வரவேற்றார். அடுத்த நிமிடமே குற்றால அருவியைப் போல வார்த்தைகள் சலசலவென ஆர்ப்பரித்தன.''1957-ம் வருஷம்தான் நான் விவசாயத்துல இறங்கினேன். அப்ப ரசாயன உரமெல்லாம் அதிகம் கிடையாது. '5 கிலோ அமோனியம் சல்பேட் வாங்கினா, மாட்டுவண்டிச் சக்கரத்துக்கு போடற இரும்புப்பட்டை ரெண்டு இலவசமா தர்றோம்'னு எங்க ஊரு கிராம அதிகாரி விளம்பரப்படுத்தினார். இரும்புக்கு பற்றாக்குறை இருந்த காலம் அது. அதைப் பயன்படுத்திக்கிட்டுதான் ரசாயன உரத்தை மக்கள்கிட்ட பிரபலபடுத்த ஆரம்பிச்சாங்க. இரும்புப்பட்டை கிடைக்குதேனு பலரைப்போல நானும் ரசாயன உரத்தை வாங்கிட்டு வந்து வயல்ல போட்டேன். பயிர் சும்மா 'குபீர்'னு வளர்ந்துச்சி. கரும்பச்சை நிறத்துல பயிரைப் பார்க்கவே பரவசமா இருந்துது. அதுக்குப்பிறகு ரசாயன உரத்துமேல பெரிய மோகம் வந்துபோச்சி.67-ம் வருஷம் ஏக்கருக்கு 5 கிலோ அமோனியம் சல்பேட் போட்டேன். ஆனா, பெரிசா விளைச்சல் இல்லை. 'நைட்ரஜன் சத்து மட்டும் பத்தாது, ஏ.பி-யும் போடுங்க'னு விவசாய அதிகாரிங்க சொன்னாங்க. அதன்படியே போட்டேன். ஏக்கருக்கு 60 மூட்டை நெல் விளைஞ்சுது. மூணாவது வருஷம் அந்த விளைச்சல் காணாம போச்சி.அடுத்ததா கம்பு போட ஆரம்பிச்சேன். 70-ம் வருஷம் ரசாயன உரத்தை அள்ளிக் கொட்டிக்கிட்டு கம்பு போட்டதுல ஏக்கருக்கு 1,200 கிலோ மகசூல் கிடைச்சது. இதுக்கு என்.பி.கே. உரம் 200 கிலோ போட்டேங்கறது கவனிக்கவேண்டிய விஷயம். இவ்வளவு உரம் போட்டதுக்கு கிடைச்ச மகசூல், கொஞ்சம் கூட கட்டுப்படியான விஷயமா இல்லை. இதுக்குக் காரணம் மண்ணோட தன்மை மாறிப்போனதுதான். எவ்வளவு ரசாயன உரத்தைக் கொட்டியும் விளைச்சல் பெருகல.'மண்ணுல ‘சிங்’ நுண்ணூட்டப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும்'னு 74-ம் வருஷம் அதிகாரிங்க சொன்னாங்க. சரினு 'சிங்'கும் போட்டேன். அப்புறம், 'அயன் (இரும்புச் சத்து) போடுங்க'னு சொன்னாங்க. அதையும் போட்டேன். போரான், மாங்கனீசுனு வரிசையா விவசாய அதிகாரிங்க சொன்னதையெல்லாம் போட்டேன். போகப்போக இடுபொருள் செலவு அதிகரிச்சி, கடனும் கூடிக்கிட்டே போச்சி. ஆனா, விளைச்சல் மட்டும் கூடவே இல்ல. 87-ம் வருஷத்துல விவசாயமே செய்யமுடியாத அளவுக்கு நிலைமை முத்திப்போச்சி. ஏக்கருக்கு ஒன்றரை டன் கூட நெல் விளைச்சல் கிடைக்கல'' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே எலுமிச்சைச்சாறு மற்றும் கரும்புச்சாறு கலந்த பானம் வந்து சேர்ந்தது. அதை நாம் சுவைத்துக் கொண்டிருக்க, சுவாரஸ்யமாக தொடர்ந்தார் அந்தோணிசாமி.''இதுக்கு என்னதான் வழி... கடன்ல இருந்து எப்படி தப்பிக்கிறதுனு ரொம்ப யோசிச்சிக்கிட்டே இருந்தேன். எங்க பகுதி விவசாய சேவா சங்கத்தைச் சேர்ந்த கோமதிநாயகம் அண்ணாச்சிகிட்ட பேசினேன். கோயம்புத்தூர் விவசாயப் பல்கலைக்கழகத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போனார். 'விவசாயம் நஷ்டமாகிப் போச்சி. கொட்டில் முறையில் ஆடு வளர்க்கலாமா?'னு அங்க கேட்டோம். 'நாங்களே அதுல ஜெயிக்க முடியல. ஆடு வளர்க்கறதையே நிறுத்திட்டோம்'னு சொல்லிட்டாங்க. எப்படியாவது கடனை அடைக்கணுமேனு வெறியோட அலைஞ்சி வெளிநாட்டு ஆடுகளை வாங்கிட்டு வந்து வளர்த்தேன். அதோட கழிவுல இருந்து 11% நைட்ரஜன் சத்து கிடைச்சுது. அதை வயல்ல போட்டேன். ரொம்ப வருஷத்துக்குப் பிறகு என்னோட மண்ணுல ஒரு பூரிப்பு உண்டாச்சி. 'அடடா இயற்கை உரம் என்ன அற்புதமா வேலை செய்யுது?'னு எனக்குள்ள ஒரு சந்தோஷம். அதேசமயம், அந்த ஆடுங்க அத்தனையும் துடி, துடிச்சி இறந்து போச்சி. நான் ஒரு பேராசை புடிச்சவன். குளிர் பிரதேசத்துல வளர்ற ஆட்டைக் கொண்டு வந்து, வெக்கைப் பிடிச்ச இந்த மண்ணுல வளர்க்க நினைச்சது என்னோட தப்புதானே..:!மனசும், உடம்பும் சோர்ந்து போயி உடம்பு ரொம்ப பலவீனமாயிடுச்சி. இந்தக் கவலையிலயே கழுத்து எலும்பு தேஞ்சி நிமிந்து கூட பார்க்க முடியாத நிலை. 'என்னடா நம்ம பொழப்பு இப்படி போயிடுச்சே'னு யோசனை செஞ்சப்ப, ஆரோக்கியமான உணவு இருந்தா எதையும் சாதிக்கலாம்னு தோணுச்சி. அதுக்கு இயற்கை விவசாயம்தான் சரிப்பட்டு வரும்னு 90-ம் வருஷம் ஒரு ஏக்கர்ல ரசாயன உரம், பூச்சி மருந்து எதையும் பயன்படுத்தாம, இயற்கை உரத்தை மட்டுமே போட்டு 15 மூட்டை நெல்லை விளைவிச்சேன். அதைச் சாப்பிட, சாப்பிட உடம்பு கொஞ்சம் கொஞ்சமா தேறிச்சி. ஆனா, நான் வாங்கின கடன்... வட்டி குட்டி போட்டு பல லட்சமா மாறிப்போயி ருந்துச்சி.இப்போ பிரதமரா இருக்கிறாரே மன்மோகன் சிங்... இந்த புண்ணியவான் 91-ம் வருஷத்துல மத்திய நிதி அமைச்சர். அவரு கொண்டு வந்த 'அடுக்கு முறை வட்டிக் கொள்கை' மூலமா... 56 லட்ச ரூபாய் கடன் காரனாயிட்டேன். அதைக் கட்ட முடியாம, தீர்ப்பாயம் முன்னாடி போய் கைகட்டி நின்னேன். 'நீதிபதி அய்யா, என்கிட்ட பணம் கிடையாது. இப்பக்கூட கடன் வாங்கிகிட்டுதான் மெட்ராஸ் வந்து சேர்ந்திருக்கேன். எப்படியாவது தயவு பண்ணுங்க'னு கையெடுத்துக் கதறி அழுதேன்'’ என்று சொல்லி மௌனமானவர், முகத்தை பச்சைத் துண்டால் துடைத்துக்கொண்டு தொடர்ந்தார்.‘‘அந்த நீதிபதி நல்ல மனுஷன். 'இரண்டு ஆண்டுகள் அவகாசம் தருகிறேன்'னு சொன்னார். ஊர் திரும்பினதும் ராப்பகலா பாடுபட்டோம். மண்ணை மாத்தினா... எல்லாமே மாறும்னு நிலத்துல மாட்டுச் சாணத்தையும், கோமியத்தையும் போட ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா நிலம் வளமாச்சி. இது எல்லாம் 1992-ம் வருஷம் நடந்த சம்பவம்.கடனை அடைக்க எனக்காகவே ஒரு பயிரு காட்டுல காத்துகிட்டு இருந்துச்சி. அதுதான் எலுமிச்சை. எங்க பகுதியில எலுமிச்சை ரொம்பப் பிரபலம். காட்டுல உள்ள ஒரு வகை எலுமிச்சை செடியை எடுத்துகிட்டு வந்து, நாட்டுச் செடியோட ஒட்டுக்கட்டினேன். அமோக விளைச்சல். கொஞ்சம் கொஞ்சமா கடனையெல்லாம் அடைச்சிட்டேன். வறட்சியைத் தாங்கி வளர்ந்த இந்த ரகத்துக்காக இப்ப குடியரசு தலைவர் அப்துல் கலாம் கூட விருது கொடுத்திருக்கார்.''நடவு செஞ்சப்ப உழவு ஓட்டினதோட சரி. களை எடுக்கவும் இல்ல. மருந்து அடிக்கவும் இல்ல. உரம் போட வேண்டிய வேலையும் இல்லாம போயிடுச்சி. வருஷம் முழுக்க எலுமிச்சை காய்ச்சி தொங்குது. ஒவ்வொரு மரத்துலயும் மூவாயிரம் காய் காய்ச்சிக்கிட்டிருக்கு. ஏக்கருக்கு நூறு மரம் நடவு செய்திருக்கேன்.தமிழ்நாட்டோட சராசரி கரும்பு விளைச்சல் ஏக்கருக்கு 30 டன்தான். இது இந்திய சராசரியை விட அதிகமான விளைச்சல். நான் ஏக்கருக்கு 60 டன் எடுக்கிறேன்'' என்று சொல்லி நிமிர்ந்து பார்க்க வைத்தவர், கரும்பு தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார்.''செருப்பைக் கழட்டிவிட்டுப்புட்டு வாங்க. இது மரியாதைக்குரிய விஷயமில்ல. வெறும் காலோட நடந்தாத்தான் இந்த மண்ணோட தன்மையை உணரமுடியும்ய்யா. எவ்வளவு கடுமையா வெயில் அடிச்சாலும் கரும்பு தோட்டத் துக்குள்ள வந்தா 4 டிகிரி வெயில் குறைஞ்சிடும். 2003-ம் வருஷம் மண்பரிசோதனை செஞ்சி பார்த்ததுல, 1957-ம் வருஷத்துக்கு முன்ன இருந்த மாதிரி நிலம் மாறிடுச்சி. அப்படியே இயற்கை எரு போடறதையும் நிறுத்திட்டேன். குப்பை உரம் கூட போடாம ஏக்கருக்கு 40 மூட்டை நெல் அறுவடை செய்றேன். மீன்அமீனோ அமிலம், பஞ்சகவ்யா இது ரெண்டையும் தான் 15 நாளுக்கு ஒரு முறை மாத்தி, மாத்தி தெளிக்கிறேன். பூச்சி, பூஞ்சாண நோய் வந்துச்சினா, கத்தாழை, துளசி, வெள்ளைப் பூண்டு கலந்து பூச்சி விரட்டியா தெளிப்பேன். எல்லாம் வந்தவழியே ஓடிப்போயிடும். நான் இயற்கை விவசாயத்துக்கு திரும்பி 14 வருஷமாகுது. அன்னிலிருந்து வைத்திய செலவே இல்லாம போச்சி... எம்மனைவிக்கு இருந்த சர்க்கரை நோயும் கட்டுப்பாட்டுக்குள்ள வந்துருச்சி.வெளியிலிருந்து எதையும் நான் வாங்கத் தேவையே இல்லை. கரன்ட்டு, டீசல், சமைக்கற உப்பு இதுமாதிரியான அத்தியாவசியமானதைத் தவிர மத்ததெல்லாம் தோட்டத்துலயே விளையுது. ஒரு காலத்துல 56 லட்சம் ரூபாய் கடன்காரனா இருந்த அந்தோணிசாமி இன்னிக்கு லட்சாதிபதியா இருக்கேன். 'இயற்கை விவசாயங்கறதெல்லாம் ஒரு ஏக்கர், ரெண்டு ஏக்கர்ல மட்டும்தான் செய்ய முடியும்'னு போறபோக்குல சிலர் சொல்லிக்கிட்டு இருக்காங்க. ஒரு ஏக்கர், ரெண்டு ஏக்கர் மட்டுமில்ல, நூத்துக்கணக்கான ஏக்கர்லயும் இயற்கை விவசாயத்தை செய்யமுடியும். அதுக்கு நான்தான் உதாரணம். இயற்கை விவசாயம் செஞ்சா, இப்ப இருக்கற மாதிரியான மூணு இந்தியாவுக்கு சோறு போடமுடியும்.இதுக்குப்பிறகும் இயற்கை விவசாயத்தை நம்பாம... மோசடி, அது... இதுனு சொல்றது நல்லது இல்ல. ரசாயன விவசாயத்தைக் கரைச்சி குடிச்சி கரைகண்ட பெரிய ஆளுங்க, விவசாய படிப்பு படிச்சுப்புட்டு அரசாங்கத்துல உயர் வேலையில இருக்கற விஞ்ஞானிங்க, பெரிய பெரிய உரக்கம்பெனிகளோட உயர் ஆலோசகரா இருக்கறவங்களுக்கு நான் ஒரு சவால் விடறேன். அதுல அவங்க ஜெயிச்சுக்காட்டட்டும்.இது அஞ்சி வருஷ போட்டி. போட்டிக்கு வர்றவருக்கு என்னோட நிலத்துல ரெண்டு ஏக்கரை ஒதுக்கித் தருவேன். அதுல ரசாயன உரம், பூச்சி மருந்தெல்லாம் போட்டு அவர் செலவுல அவர் பயிர் செய்யட்டும். அதுல விளையறதையே அவரோட குடும்பம் சாப்பிட்டுகிட்டு, மீதியை வித்து வருமானம் பார்க்கட்டும்.அதேபோல ரெண்டு ஏக்கர் நிலத்தை ஒதுக்கி நான் இயற்கை விவசாயம் செய்வேன். அதுல விளையறதையே சாப்பிட்டு, மீதியை வித்து வருமானம் பார்ப்பேன். அத்தனைக் கணக்கு வழக்கையும் பக்காவா பதிவு பண்ணிக்கணும். ஆரம்பத்துலயே ரெண்டு நிலத்தோட மண்வளம், ரெண்டு குடும்ப உறுப்பினர்களோட உடல்நிலை எல்லாத்தையும் பரிசோதனை செஞ்சிக்கணும். 5 வருஷ முடிவுல கிடைச்ச லாபம், மண்ணோட தன்மை, குடும்ப உறுப்பினர்களோட உடல்நலம் இதையெல்லாம் பரிசோதிச்சி பாப்போம். ரசாயன உரம் போட்ட நிலத்தோட வளம், இயற்கை உரம்போட்ட நிலத்தைவிட வளம் கூடியிருந்தா, லாபம் அதிகமா கொடுத்திருந்தா, குடும்பத்துல உள்ளவங்களுக்கு எந்த நோயும் வராம இருந்தா ஒரு லட்ச ரூபாய் பரிசும், 'வேளாண் செம்மல்'னு பட்டமும் தரத்தயாரா இருக்கேன்.அப்படி இல்லாம அவர் தோத்துப் போயிட்டா... என்ன செய்யணுங்கறத பிறகு சொல்றேன்’’ என்று கட்டை விரலை உயர்த்தினார் அந்தோணிசாமி.சவாலுக்குத் தயாராக இருப்பவர்கள் மட்டுமல்ல... அவரின் பயிர் தொழில்நுட்பத்தை தெரிந்து கொள்ள விரும்புபவர்களும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: அந்தோணிசாமி, வடக்கு ரத வீதி, சிந்தாமணி, புளியங்குடி, திருநெல்வேலி மாவட்டம், அலைபேசி: 94435-82076.
No comments:
Post a Comment