இது ஒருவகையான இயற்கை தழைச்சத்து உரம். ஒரு கிலோ மீன் (எந்த வகையாகவும் இருக்கலாம். கெட்டுப்போனதாக இருந்தால் ரொம்பவும் நல்லது), ஒரு கிலோ வெல்லம் அல்லது மொலாசஸ் (வெல்லம் காய்ச்சும் போது கிடைப்பது) இரண்டையும் ஒரு பிளாஸ்டிக் கேனில் 20 நாட்கள் ஒன்றாகப்போட்டு வைக்க வேண்டும். இது பஞ்சாமிர்தம் மாதிரி வாடையுடன் கலவையாகத் தயாராகிவிடும். 10 லிட்டர் நீரில் 100 மில்லி வீதம் கலந்து தேவைக்கேற்ப பயிர்களுக்குத் தெளிக்கலாம். காலை 9 மணிக்குள்ளும் மாலை 4 மணிக்கு பிறகும் தெளிப்பது நல்லது. பயிர்கள், இந்த நேரத்தில்தான் சத்துக்களை கிரகிக்கும்.''மேலே சொன்னபடி தயாரான மீன்அமினோ அமிலத்தில் 85% தழைச்சத்து உள்ளது. ஒரு யூரியா மூட்டையில் 46% தழைச்சத்துதான் இருக்கிறது. அதிலும் 10% நீரில் ஆவியாகிவிடும். மீதி 36% பயிருக்கு கிடைக்கும். அதனால் எது நல்லது என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்'' என்கிறார் அந்தோணிசாமி.
No comments:
Post a Comment