Friday, 7 November 2014

தோட்டக்கலைப் பயிர்களுக்கு மானியம் வழங்கப் படுகிறது என்று கேள்விப்பட்டோம். எந்தெந்தப் பயிர்களுக்கு, என்னென்ன அளவில் மானியம் கொடுக்கிறார்கள்?”


எம். சுந்தரம், திருப்பூர்.திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை தோட்டக்கலை உதவி இயக்குநர் முனைவர் பா. இளங்கோவன் பதில் சொல்கிறார்.‘‘தமிழ்நாட்டில் தோட்டக்கலைப் பயிர்களை ஊக்கப்படுத்த வாழை, மா, கொய்யா, எலுமிச்சை, ஜாதிக் காய்... போன்ற தோட்டக்கலைப் பயிர்களுக்கு மானியம் வழங்கப்படுகின்றது. இவை ஒரு ஹெக்ேடர் அளவு மதிப்பீட்டில் வழங்கப்படுகிறது. மேற்கண்டவை தவிர, மண்புழு உரம் தயாரிப்பு, டிராக்டர், பவர்-டில்லர், விளக்குப்பொறி, பவர்-ஸ்பிரேயர்... போன்றவற்றுக்கும் மானியங்கள் வழங்கப்படுகின்றன.இதில் சிறுவிவசாயி, பெண்கள்... போன்றவர்களுக்கு சிறப்பு சலுகைகள் உள்ளன. இந்த மானியங்களைப் பெற நிலத்தின் சிட்டா, அடங்கல், ரேஷன் கார்டு, 3 போட்டோ, மண் மாதிரி முடிவுகளை இணைத்து, அருகில் உள்ள தோட்டக்கலை அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment